வெள்ளி, 3 ஜூன், 2011

Ready for enquiry to probe war crimes- singala military: போர்க் குற்றப்புகாரை விசாரிக்கத் தயார்: இலங்கை ப் படைத்தளபதி றிவிப்பு

சிங்கள அரசைப் பொருத்தவரை பொதுமக்கள் என்றால் சிங்கள மக்கள். தமிழ் மக்கள் அனைவருமே விடுதலைப் போராளிகள் அல்லது பயங்கரவாதிகள். விசாரணை என்ற பெயரில் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்த நாடகமா? பன்னாட்டு மன்றத்திற்கு உண்மையிலேயே மனித உரிமைகளிலும் மனித நேயத்திலும் அக்கறை  இருப்பின், ஈழத்தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்னும் அற உணர்வு  இருப்பின், தானே விசாரணை மேற்கொண்டு தண்டிக்க வேண்டும்.பயங்கரவாத அரசுகளின் கையாட்களைக் கொண்ட
 மன்றம் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. எனவே, உலக மனித நேயர்கள் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


 
போர் குற்றப்புகாரை விசாரிக்கத் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு
 

First Published : 03 Jun 2011 01:37:45 AM IST


கொழும்பு, ஜூன் 2: இலங்கை ராணுவத்தின் மீது கூறப்படும் சில குறிப்பிட்ட போர் குற்றப்புகார் குறித்து விசாரிக்கத் தயார் என்று அந்நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார்.÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, பிடிபட்ட தமிழர்கள் பலரை மிகக் கொடூரமாக சித்தரவதை செய்து இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ராணுவ வீரர்கள் கொலை செய்துள்ளனர். இதற்கான விடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போரில் இருதரப்புமே போர்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ளது. ஐ.நா. சபையில் இலங்கை போர் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அதற்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அந்த நாடு தனிமைப்படுத்தப்படும்.இதனை எப்படியாவது தடுத்த நிறுத்தி விட வேண்டுமென்று இலங்கை அதிபர் ராஜபட்ச முயன்று வருகிறார்.இந்நிலையில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றைப் பற்றி விசாரிக்க தயாராக இருப்பதாக இலங்கை ராணுவ தலைமை லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:போரின் போது இலங்கை ராணுவம் பொதுமக்கள் யாரையும் கொலை செய்யவில்லை. அப்படி யாராவது கொல்லப்பட்டார்கள் என்றால் அவர்களது உறவினர்கள் முன்வந்து எங்களிடம் புகார் தரலாம். அது குறித்து விசாரணை நடத்தப்படும். ராணுவத்தின் மீது குறப்பட்டுள்ள சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தயாராகி வருகிறோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக