வெள்ளி, 3 ஜூன், 2011

Delhi: Biogases for buses: அனைத்து அரசுப் பேருந்துகளையும் பயிர்வளியில் இயக்கத் திட்டம்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அனைத்து அரசு பஸ்களையும் பயோகேஸில் இயக்கத் திட்டம்

First Published : 03 Jun 2011 02:45:38 AM IST


புது தில்லி, ஜூன் 2: தில்லியில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் விரைவில் பயோ கேஸ் மூலம் இயக்கப்படவுள்ளன.கேஷோபூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பயோகேஸ் தயாரிக்க சுவீடன் அரசுடன் தில்லி அரசு உடன்பாடு செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளது.இதிலிருந்து தயாரிக்கப்படும் பயோகேஸ் மூலம் தில்லியில் உள்ள அரசு பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பயோகேஸ் தயாரிக்கப்படவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் தயாரிக்கப்படும் பயோகேஸில் மீத்தேன் வாயுவின் அடர்த்தி 60 சதவீதம் இருக்கும். இதனை சிஎன்ஜி வாயுவாக ஆக்க மீத்தேனின் அடர்த்தி 90 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும். உலகிலேயே பயோகேஸ் மூலம் அரசு பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவது தில்லியில்தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.இந்த திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான 50 சதவீத நிதியை சுவீடன் அரசும் எஞ்சிய தொகையை தில்லி அரசும் தரவிருக்கின்றன. இந்தத் திட்டம் வரும் செப்டம்பரில் தொடங்கக்கூடும் எனத் தெரிகிறது.இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தலாம் என மாற்றத்தக்க மின்உற்பத்தி நிர்வகிப்பு மையம் யோசனை தெரிவித்து அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது. 2010-ல் சுவீடன் அரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதையடுத்து தில்லியில் உள்ள துவாரகா, கேஷோபூர், காரனேஷன் பார்க், ஓஹ்லா ஆகிய இடங்களில் உள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுவீடன் நாட்டு நிபுணர்கள் 3 மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இவற்றில் கேஷோபூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் பயோகேஸ் தயாரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மற்ற இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மிக பழையவை அல்லது பயன்படாதவை என நிராகரிக்கப்பட்டன.இந்த புதிய முயற்சி வெற்றிபெற்றால் தில்லியில் உள்ள 17 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் பயோகேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் தில்லியில் இயக்கப்படும் அரசு பஸ்களின் பெரும்பாலான பஸ்களின் சிஎன்ஜி தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படக்கூடும் என்கின்றனர் அதிகாரிகள்.ஒவ்வொரு சிஎன்ஜி வாயு ஆலை அருகிலும் சிஎன்ஜி வாயுவை நிரப்பும் லாயங்களை அமைக்க வேண்டியதுதான் உடனடியான தேவை. கேஷோபூர் காய்கறி மார்க்கெட்டில் வீணாகும் திடக்கழிவுகள் அடர் சிஎன்ஜி வாயு தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக