வியாழன், 24 செப்டம்பர், 2009

உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு:
மலேசியாவில் நாளை தொடங்குகிறது



சென்னை, செப். 23: பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தொடங்குகிறது. மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 500 தமிழ் அறிஞர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 60 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் வா.மு. சேதுராமன், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசிய அமைச்சர் கோ. சூகூன், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் க. ராமசாமி, பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். 2 நாள்கள் நடைபெறும் மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதி அமைச்சர் க. அன்பழகன், தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர் என்று பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் இயக்குநர் வா.மு.சே. திருவள்ளுவர், செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

கருத்துக்கள்

'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கனவை நனவாக்கவும் ஈழத் தமிழகம் மலரவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வுரிமை பெறவும் மாநாடு வழிகாட்டட்டும்! சீராயும் சிறப்பாயும் நடைபெற வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2009 2:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக