எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிறார் திருவள்ளுவர். தமிழ்ப்பகையாளரின் வாய் உதிர்க்கும் கருத்துகளாய் இருப்பினும் சுடுகின்ற உண்மை வெளிவருகின்றது. சொல்பவருக்குத் தகுதி இருக்கின்றதோ இல்லையோ! சொல்லப்படும் கருத்துகளுக்கு வலிமை உள்ளது. உலகத் தமிழினத் தலைவராய்த் திகழ்ந்த முத்தமிழறிஞர் ஆட்டத்தைத் திருப்பிப் போடாமல் அவரை நம்பியுள்ள தமிழ் மக்களுக்காக விழித்தெழட்டும்! வெங்கொடுமைச் சாக்காட்டில் வருந்தும் தமிழ் மக்களுக்கு ஆறுதலாகச் செயல்படா விட்டாலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கட்டும்! ஈழத்தமிழர்களின் விடியலுக்காக இயன்றதைச செய்யட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/20/2009 2:20:00 AM
இந்திய அரசியல்வாதிகளே! உங்களிடம் ஒரு பணிவான விண்ணப்பம். 'நின்னைச் சில வரங்கள் கேட்போம், அதை நேரே இன்றெமக்குத்தருவாய்! அகதிகளின் முன்னைத் தீயவினைப்பயன்கள் இன்னமும் மூழாதழிந்திடல் வேண்டும்! இனி அவர்களை புதிய உயிராக்கி அவர்களிற்கேதும் கவலையறச்செய்து! மதிதன்னை மிகத்தெளிவு செய்து! என்றும் சந்தேஷம் கொண்டிருக்கச் செய்வாய்' இலங்கைத்தமிழர்களுக்கு உதவிசெய்வதில் உங்களின் போட்டி இருக்கட்டும். தயவுசெய்து இலங்கைத்தமிழர் பிச்சனையை உங்களின் உள்நாட்டுப் பிரச்சனையாக்கி விடாதீர்கள்! நன்றி.
11/20/2009 1:24:00 AM