வெள்ளி, 20 நவம்பர், 2009

பிரபாகரன் மீது பழி போடுவதா? கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு



சென்னை, நவ. 19: இலங்கை பிரச்னையில் பிரபாகரன் மீது பழியை சுமத்தி, தான் செய்த தவறுகளை முதல்வர் கருணாநிதி மறைக்கப் பார்க்கிறார் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். ""நம் மெüன வலி யாருக்குத் தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு, தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். தனது அறிக்கையில், எம்.எல்.ஏ. பதவிகளை தூக்கி எறிந்ததாக அவர் கூறியிருக்கிறார். சட்டப்பேரவை தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக எனக் கூறி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் 1984-ம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். தோல்வியிலிருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது. 1991 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. அப்போது ஒரே இடத்தில் வெற்றி பெற்று, படுதோல்வியை தழுவிய கருணாநிதி, எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். தனி நபராக ஆளும் கட்சியை எதிர்க்க துணிவில்லாமல்தான் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தாரே தவிர, எந்த லட்சியத்துக்காகவும் தியாகம் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களுக்காக இரு முறை ஆட்சியை இழந்ததாகக் கூறியிருக்கிறார் கருணாநிதி. 1976-ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும்தான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வாறு பேசும் கருணாநிதி, 2008-ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருந்த மத்திய அரசு உதவியுடன், இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களைக் கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்? அதுபற்றி ஒரு வரி கூட தெரிவிக்கவில்லையே. கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருந்தால், அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். இதைச் செய்யாததன் மூலம், தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை கருணாநிதி செய்துவிட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கியக் காரணமாகிவிட்டார். தன்னலம் காரணமாக, தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில், ""பிரபாகரன் தீவிரவாதி அல்ல; எனது நண்பன்'' என்று கூறினார் கருணாநிதி. ""நாங்களே அடிமைகளாக இருக்கிறோம்'' என்று கூறி தன் இயலாமையை தெரிவித்தார். அதையெல்லாம் மறந்து, இப்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி, தான் செய்த தவறுகளை மூடி மறைக்கப் பார்க்கிறார் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிறார் திருவள்ளுவர். தமிழ்ப்பகையாளரின் வாய் உதிர்க்கும் கருத்துகளாய் இருப்பினும் சுடுகின்ற உண்மை வெளிவருகின்றது. சொல்பவருக்குத் தகுதி இருக்கின்றதோ இல்லையோ! சொல்லப்படும் கருத்துகளுக்கு வலிமை உள்ளது. உலகத் தமிழினத் தலைவராய்த் திகழ்ந்த முத்தமிழறிஞர் ஆட்டத்தைத் திருப்பிப் போடாமல் அவரை நம்பியுள்ள தமிழ் மக்களுக்காக விழித்தெழட்டும்! வெங்கொடுமைச் சாக்காட்டில் வருந்தும் தமிழ் மக்களுக்கு ஆறுதலாகச் செயல்படா விட்டாலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருக்கட்டும்! ஈழத்தமிழர்களின் விடியலுக்காக இயன்றதைச செய்யட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/20/2009 2:20:00 AM

இந்திய அரசியல்வாதிகளே! உங்களிடம் ஒரு பணிவான விண்ணப்பம். 'நின்னைச் சில வரங்கள் கேட்போம், அதை நேரே இன்றெமக்குத்தருவாய்! அகதிகளின் முன்னைத் தீயவினைப்பயன்கள் இன்னமும் மூழாதழிந்திடல் வேண்டும்! இனி அவர்களை புதிய உயிராக்கி அவர்களிற்கேதும் கவலையறச்செய்து! மதிதன்னை மிகத்தெளிவு செய்து! என்றும் சந்தேஷம் கொண்டிருக்கச் செய்வாய்' இலங்கைத்தமிழர்களுக்கு உதவிசெய்வதில் உங்களின் போட்டி இருக்கட்டும். தயவுசெய்து இலங்கைத்தமிழர் பிச்சனையை உங்களின் உள்நாட்டுப் பிரச்சனையாக்கி விடாதீர்கள்! நன்றி.

By Ravi
11/20/2009 1:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக