ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

A tale of truth silenced in Sri Lanka

August 21, 2009 10:39 IST

The family of a Sri Lankan human rights activist, who was shot dead last year, is living in constant fear in an NGO in Kerala's [ Images ] Thrissur district.

Sugath Nishanth Fenando's widow Surangi Sandamali, daughter Kalpani Dilrukshi (17) and son Saneesh Anjana (13) are wary of an action from the Sri Lankan police. The family has been living in India for the past two months after the Asian Human rights organization directed them to Thrissur-based 'Nervazhi'.

Surangi told rediff.com the Sri Lankan police hated Sugath as he was constantly opposed the alleged human rights violations by the Sri Lankan police throughout the Island nation under the guise of hunting the Liberation Tigers of Tamil Eelam and other Tamil militant organizations.

Sugath was shot dead by two unidentified youths on a motorbike on September 20, 2008.

Surangi said Sugath and the whole family were brutally beaten up by the police a day before he was shot dead.

The family said that Sugath had purchased a lorry from a police office in 2004 and he had probed the records of the lorry. The detailed study into the documents gave Sugath an idea of how the police and certain influential sections in the Sri Lankan establishment were using the trouble-torn issues in the Emerald Island to their own benefit.

Sugath found out that most of the lorries and other vehicles, which were sold in the second hand market, had a stamp of the Sri Lankan police's interference and according to Sugandhi, the police were selling lorries and other vehicles that were either stolen property or which were confiscated from the militants.

When Sugath found out that there was a big cartel within the police, which was behind this racket, he promptly gave a written petition to the authorities. According to Sugandhi, Sugath refused to withdraw the petition despite pleas. He was brutally attacked and thrashed at their home by a group of 60 policemen led by the district Superintendent of Police the day before he was to depose before the court.

Following the assault, Sugath was taken to a police station and beaten up again. On his release from the station, he moved court against 14 top police officials who were involved in the attacks. The next day, Sugath was shot dead in front of his son.

Sugandhi told rediff.com that they were in constant fear even in Thrissur and had received a threatening phone call the other day in Sinhalese language. However, Sugandhi is determined to depose before the court again.

Arun Lakshman in Thiruvananthapuram
சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் பிரகடனம்
பிரசுரித்த திகதி : 21 Aug 2009

ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்: உலகத் தமிழர் பிரகடனம்.

ழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.

சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், தற்பொழுது நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு :

1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு�கிறோ�ம்.

3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6. அளப்ப�ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

பிரசுரித்த திகதி : 22 Aug 2009

இடைத்தங்கல் முகாம்களில் 8000 மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில் அவதியுறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 8000 சிறுவர் சிறுமியர் தரம் ஒன்றுக்கு செல்வதற்கான வயதெல்லையில் காணப்படுவதாக கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கில் உள்ள 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா சொலமன் சிறில் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணிகளினால் முகாம்களில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கில் உள்ள 17 பாடசாலைகள் விரைவில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனவும், பெரும்பாலும் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

புலிகளுடனான போரில்
14,000 இராணுவத்தினர் கால்களை இழந்துள்ளனர்
பிரசுரித்த திகதி : 22 Aug 2009

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைப்பெற்ற போரில் 14 ஆயிரம் படையினர் தமது கால்களை இழந்துள்ளனர் என்று செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் அவாஸ் இன்டர்நெஷனல் என்ற அமைப்பு சேகரித்துள்ள தரவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

படையினருக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் பணியினை இந்த அமைப்பு எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. கால்களை இழந்தவர்களில் ஒரு காலை மற்றும் இரண்டு கால்களையும் இழந்தவர்களும் அடங்குவர் என்று தெரிய வருகின்றது.

இது பற்றி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவியப்பொழுது இந்த எண்ணிக்கை பற்றி உறுதியான தகவலை தெரிவிக்க மறுத்து விட்டார்.

நோர்வே தூதுவரான மோனா ஜூல் கடிதத்தால்
பான் கீ மூனுக்கு நெத்தியடி
பிரசுரித்த திகதி : 22 Aug 2009

ஐ.நா செயலர் பான் கி மூன் தலைத்துவமேந்த அருகதை இல்லாதவர், மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடத் தெரியாதவர், கோபக்காரர் என பல குற்றங்களை ஐ.நா வுக்கான நோர்வே தூதுவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நோர்வே ஒஸ்லோ பத்திரிகை ஆஃப்டன்போஸ்டன் கூறியுள்ளது. நோர்வே தூதுவரான மோனா ஜூல், ஜ.நாவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மற்றும் சர்வதேச தலையீடுகள் தேவைப்பட்ட சந்தர்ப்பத்திலெல்லாம் பான் கி மூன் அமைதியாக இருந்துள்ளார். பான் கீ மூன் ஒரு தகுதியில்லாத செயலர் என்ற கோணத்தில் அவருடைய பதவி நோக்கப்படுவதற்கு இலங்கை ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு படை நடவடிக்கையில் நடைபெற்ற பாரதூரமான மானித அவலங்களை அவர் நேரடியாகச் சென்று பார்த்தும் கூட அதுபற்றி எதுவித அக்கறையும் மகிந்த அரசுக்குக் காண்பிக்கவில்லை.

இது போல படு மோசமான அராஜக இராணுவ ஆட்சி நடந்து வருகின்ற மியன்மாரில் எதிர்க்கட்சித் தலைவியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ குயி வீட்டுக்காவலில் இருப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க பான் கி மூன் தவறியுள்ளார் என இக்கடிதத்தில் திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கடிதத்தின் ஆங்கீகாரம் பற்றி, நோர்வே வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். நோர்வே மொழியில் உள்ள இக்கடிதமானது, பான் கி மூன் நோர்வேக்கு வருகின்ற 31 ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள நிலையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல பாகிஸ்தான், டார்பர், சோமாலியா, சிம்பாவே மற்றும் மிகச் சமீபமாக கொங்கொ நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகளுக்கும் பான் கி மூன் ஒருவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

இவரோடு சர்வதேச விவகாரங்களை பேச முடியாதுள்ளதாகவும், எப்படி உலக விவகாரத்தை கையாள்வது என்ற தொழில் நுட்பம் தெரியாத ஒருவராகவும், பேசும்போது கோபமாக சகலதையும் நிராகரிப்பவராகவும் இவர் இருப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் கூறப்படுகிறது. இவ்வாறான குற்றச் சாட்டுகளால் பான் கி மூனின் நோர்வே விஜயம் ரத்துச் செய்யப்படுமா என்று கேட்டபோது அவ்விஜயம் திட்டமிட்டபடி நடக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஐ.நா ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி
ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்
பிரசுரித்த திகதி : 22 Aug 2009

ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறீலங்கா துணைத் தூதரகத்தின் முன்பாக வெள்ளி மதியம் 12 மணியிலிருந்து மாலை 7 மணிவரை ‘எங்களை வாழவிடு’ ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது.


கடந்த மே மாதம் இலங்கைத் தீவின் வடபகுதியில் சிறீலங்கா அரசபடைகள் மேற்கொண்ட பாரிய மனித அவலத்தின் போது இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் சொந்த இடங்களில் மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும் என சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ‘எங்களை வாழவிடு’ நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மேமாதம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையில் நடைபெற்று வந்த யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த சிறீலங்கா அரசாங்கம், இப் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் 180 நாட்களிற்குள் அவர்களது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என அறிவித்திருந்தது. ஆயினும் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு மீள்குடியமர்த்தல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இம் மக்களின் தேவைகளை சிறீலங்கா அரசாங்கம் அலட்சியம் செய்யும் வேளையில் இதனை உலக நாடுகளிற்கு எடுத்துக் கூறும் வகையிலும், முகாம்களில் உள்ள மூன்று இலட்சம் மக்களை விடுவிக்க சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டி அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

சிறீலங்கா அரசால் சர்வதேசத்திற்கு உறுதியளித்தபடி இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் தெரிவித்துள்ளது.

கடந்த 100 நாட்களிற்கு மேலாக நலன்புரி நிலையங்கள் என சிறீலங்கா அரசால் சொல்லப்படும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பெய்த பெருமழையில் அவர்களது குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளமையும், அடிப்படை வசதிகள் எதுவும் அற்று தற்காலிக கழிவறைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

"நாம் தமிழர் இயக்கம்' அரசியல் இயக்கமாக மாறும்:
இயக்குநர் சீமான்



தூத்துக்குடி, ஆக. 22: "நாம் தமிழர் இயக்கம்' 2010-ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, இயக்குநர் சீமான் தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை ஐ.நா. மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தக் கோரியும், "நாம் தமிழர் இயக்கம்' சார்பில் ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக இம்மாதம் 29-ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். தமிழ் இனம், மொழிக்காக போராடுவதற்காக கடந்த மே மாதம் உருவானதுதான் "நாம் தமிழர் இயக்கம்'. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது இந்த இயக்கம். தமிழ் இனம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம் என்றார் சீமான்.
கருத்துக்கள்

சீமானின் முயற்சி வெல்க! உலகத் தமிழர்களை ஒற்றுமைப்படுத்தவும் எங்கு வாழ்ந்தாலும் உரிமையுடன் வாழவும் பிற இனத்தவருடன் ஒத்து வாழவும் முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெறுக! தமிழ் ஈழம் உலக அரசுகளால் ஏற்கக் கடமை யாற்றுக! 'தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்! தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்' என்னும் பேராசரியர் சி.இலக்குவனாரின் பொன்மொழியை இலக்கு மொழியாகக் கொண்டு செயல்பட்டு மொழியும் இனமும் உரிமை பெற்று இலங்கப் பாடுபட்டு உயர்க! வெல்க! ஓங்குக!

வாழ்த்துகளுடன் இலககுவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2009 3:39:00 AM

The first religion is landuage(Thamizh). All other religions are secondary. World over countries are formed based on language which as said before is the religion. That is the logic for existence of a country. It brings with it the culture. It brings with it the oneness. It brings with it pride. To keep up the pride the people will be united and work towards a common goal. If somebody is going against this logic, then he is an obvious 100% idiot, Kudhuramutta, komali, simpleton, fool.

By anban
8/23/2009 1:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது சரியல்ல: ரேவண்ணா



பெங்களூர், ஆக. 22: மண்டியா மாவட்டம் முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது என்று அறிவித்துவிட்டு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டிருப்பது சரியல்ல என்று சட்டப்பேரவை மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார். பெங்களூரில் சனிக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: வறட்சி குறித்து கர்நாடக அரசு சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடகத்தில் 20 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் 3.5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நாசமடைந்துவிட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்ட முக்கிய அம்சம் காவிரி பாசன பகுதியில் உள்ள மண்டியா மாவட்டம் முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிட அம்மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். காவிரியில் தமிழகத்துக்கு ஜூன் மாதம் 4.9 டிஎம்சி, ஜூலையில் 38.71 டிஎம்சி, ஆகஸ்டில் இதுவரை 24.20 டிஎம்சி தண்ணீர் விடப்பட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை 67 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகம் 76 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் இவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதே சரியல்ல. மாவட்டமே வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர். இவ்வாறு தண்ணீர் திறந்துவிடும் முன் அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அரசு பேசியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு பேசாமல், நமது விவசாயிகளுக்குப் போதிய தண்ணீர் உள்ளது. கூடுதலாக வரும் தண்ணீரைத்தான் தமிழகத்துக்குத் திறந்துவிடுகிறோம் என்று அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது ஏற்கத் தக்கது அல்ல. காவிரியில் தண்ணீர் கேட்டு கர்நாடகத்தை வலியுறுத்தும் தமிழகம், சிவனசமுத்திரம் மின் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ள தமிழக முதல்வரை பெரிய அண்ணன் என்றும், தன்னை சின்ன தம்பி என்றும் எடியூரப்பா அழைத்து உள்ளார். அதுபற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. இருப்பினும் தமிழகத்தின் போக்கை முதல்வர் எடியூரப்பா புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கருத்துக்கள்

சின்னத்தம்பியும் பெரிய அண்ணனும் என்ன சொல்லப் போகிறார்கள்? நாய் வாலை நிமிர்த்தினாலும் கன்னடர்களின் வெறிப்போக்கை மாற்ற முடியாதே! மாநிலங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி ஒருமைப்பாட்டிற்கு உலை வைப்போரை மத்திய அரசு காலவரையறை இன்றிச் சிறையில் தள்ளட்டும்! மாறாக மனித நேயம் கொண்டு கோரிக்கை வைப்பவர்கள்மீது வழக்கும் சிறைவைப்பும் என்னும் போக்கில்தானே அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

அன்புடன் இலககுவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

First Published : 23 Aug 2009 11:24:00 PM IST

Last Updated :

சென்னை, ஆக. 22: தனது பிறந்தநாளில் "பெண்களே நாட்டின் கண்கள்' என்ற புதிய வறுமை ஒழிப்பு திட்டம் தொடங்கப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் பிறந்தநாள் வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுவையில் அரசு மருத்துவனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மாவட்டந்தோறும் 10 குழந்தைகள் வீதம் தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.33 லட்சம் வைப்புநிதி செலுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு பிறந்தநாளன்று ராமாபுரத்தில் இயங்கும் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.50,000 வழங்கப்படும். கொரட்டூர் அருணோதயம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, சைதாப்பேட்டை கருணை இல்லம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மற்றும் கூடுவாஞ்சேரி நந்திவரம் பிரபாவதி டிரஸ்ட் ஊனமுற்றோர் சிறப்பு பள்ளி ஆகியவற்றுக்கு தலா ரூ.25,000 என ரூ.75,000 வழங்கப்படும்.

விருத்தாசலம் தொகுதியில் 10 ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.

பெண்கள் இல்லையேல் உலகம் இல்லை. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால்தான் அது குடும்பமாகும். இத்தகைய பெண்ணின் பெருமையை சமுதாயம் போற்றி மதிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் ஒரு கிராம் தங்கம் கூட ஏழைகளால் வாங்க முடியாது. இதனால் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த அவலநிலையை உணர்ந்துதான் 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10,000 வங்கியில் வைப்பு தொகையாக வைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

இதன் மூலம் பெண் குழந்தை திருமண வயதை எட்டும்போது அந்த தொகை வளர்ந்து சுமார் ரூ.2 லட்சம் கிடைக்கும் என்றும் தெரிவித்தேன். இது ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கைச் சுமையை பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகும்.

இதன்படி எனது பிறந்த நாளன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு சென்னையில் 20 குழந்தைகளுக்கும், மற்ற மாவட்டங்களில் தலா 10 குழந்தைகள் என்ற விகிதத்தில் தமிழ்நாட்டில் 31 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 10 குழந்தை என மொத்தம் ரூ.33 லட்சம் எனது சொந்த பணத்தில் வைப்புநிதியாக செலுத்த உள்ளேன்.

இதேபோல் கட்சியினரும் என்னுடைய பிறந்தநாளில் அவரவர் சக்திக்கு ஏற்ப ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றார் விஜயகாந்த்.


கருத்துக்கள்

வாழ்க கொடை உள்ளம்! அவரது கட்சியினரும் வேண்டுகோளை ஏற்று அறப்பணியில் ஈடுபடட்டும்! பிற அமைப்பினரும் அறச் செயல்களில் ஈடுபடட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2009 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்