அழை-திருக்குறள்கல்வெட்டு01 :azhai_thirukkuralkalvettu01
வணக்கம்.
பேரன்புடையீர்!
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன்  கல்வெட்டுகளாக்க வேண்டும் என்று  குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.
இதன் தொடர்ச்சியாக முதல் குறள் மலைமீது கல்வெட்டாகப் பொறிக்கப்படும் பணிகள் நிறைவடைந்து,  ஆனி 19, 2047 /  2016 சூலை 3 ஆம்  நாளன்று திறப்பு விழா நடைபெற உள்ளது.
 குருமகாசந்நிதானங்களின் அருளாசியுடன், மதிப்புமிகு நீதியரசர். ஆர்.மகாதேவன் அவர்களும், உயர்திரு விஞ்ஞானி. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், உயர்திரு.மதிவாணன் அவர்களும், திரு வி.சி.சந்தோசம் அவர்களும் முதல் குறளைத்திறந்து வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்கள். அதுசமயம் தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அழை-திருக்குறள்கல்வெட்டு02 :azhai_thirukkuralkalvettu02 அழை-திருக்குறள்கல்வெட்டு03 :azhai_thirukkuralkalvettu03
நன்றி
வணக்கம்.
பா.இரவிக்குமார்
நிறுவனர்
குறள் மலைச்சங்கம்
9380277177
9382677177
9543977077