செவ்வாய், 24 மார்ச், 2015

தேவதானப்பட்டி : வறண்ட மேய்ச்சல் நிலங்கள்

71varandameyachalnilangal

தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு

முன்பே வறண்ட மேய்ச்சல் நிலங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு முன்பே மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போனதால் கால்நடைகள் அடிமாடுகளுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி முதலான சிற்றூர்களில் கால்நடைகளும், வேளாண்மையும் முதன்மைத் தொழிலாக உள்ளது. தற்பொழுது கோடைக் காலத்திற்கு முன்பே இப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்கு நிலம் இல்லாததால் காய்ந்த சருகுகளையும், காய்ந்த புற்களையும் கால்நடைகள் உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள உழவர்கள் இப்பகுதியில் தங்கள் கால்நடைகளை அடிமாட்டிற்காக விற்பனை செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிருவாகம் உழவர்களின் கால்நடைத் தொழில் பாதிக்கா வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி வேளாண் பெருமக்கள்.
71vaigainaneesu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக