செவ்வாய், 27 ஜனவரி, 2015

தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை


63vedimarunthuthirikal

தேவதானப்பட்டியில் தடை செய்யப்பட்ட வெடிகள் மிகு விற்பனை

  தேவதானப்பட்டியில் கையால் தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் வீடுகளில் பதுக்கி வைக்கப்படுவதால் கண்டம்(அபாயம்) ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
  தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறும் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா, இறப்புச்சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் வெடிவகைகள் வெடிக்கப்படுகின்றன. இவ்வெடிகள் உரிமமின்றி உருவாக்கப்படுவை ஆகும்.
  சோழவந்தான், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி பகுதிகளில் இருந்து இம்மாதிரியான வெடிகளை வாங்கிவந்து அளவுக்கதிமான கருமருந்துகளை ஏற்றி வெடிக்கச்செய்கின்றனர். இவ்வாறு வெடிகள் அளவுக்கதிமாக அரசு வரையறுத்துள்ள விகித அளவைவிட அதிகமான சத்தத்துடன் வெடிப்பதால் காதுகள் செவிடாகும் தன்மை ஏற்படுகிறது.
  மேலும் இதய நோயாளிகள், சிறு குழந்தைகள் போன்றவர்கள் பாதிப்படைகின்றனர். மனிதனின் உயிருக்குப் பேரிடர் ஏற்படுத்தும் இவ்வகையான வெடிகள் தடை செய்யப்பட்டவை ஆகும். இருப்பினும் தேவதானப்பட்டிப் பகுதியில் இவ்வெடிகளை மிக இயல்பாக எல்லா நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துகிறார்கள். இம்மாதிரியான வெடிகள் வெடிப்பதற்குதம் தேனி மாவட்டத்தில் கூடலூர், முதலக்கம்பட்டி முதலான ஊராட்சி, நகராட்சிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
  எனவே காவல்துறையினர் பேரிடரான – அபாயகரமான – வெடிகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
vaigai aneesu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக