புதன், 15 ஜனவரி, 2014

தமிழக அரசின் ஒன்பான் விருதுகள்

பண்ருட்டி இராமச்சந்திரனுக்குப் பேரறிஞர் அண்ணா விருது: முதல்வர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், தேமுதிக அவைத் தலைவர் பதவிகளில் இருந்து அண்மையில் விலகி, தீவிர அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கும் பண்ருட்டி இராமச்சந்திரனுக்கு அண்ணா விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் சுலோச்சனா சம்பத், எழுத்தாளர் அசோகமித்ரன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் விழா வரும் புதன்கிழமை (சன. 15) சென்னையில் நடைபெறுகிறது.
இது குறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னமலற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியானவர்களை முதல்வர்  செயலலிதா அறிவித்துள்ளார். விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்:
திருவள்ளுவர் விருது-கவிஞர் யூசி (தைவான்)
தந்தை பெரியார் விருது-சுலோச்சனா சம்பத்
அண்ணல் அம்பேத்கர் விருது-பேராயர் எம்.பிரகாசு.
பேரறிஞர் அண்ணா விருது-பண்ருட்டி இராமச்சந்திரன்.
பெருந்தலைவர் காமராசர் விருது-கி.அய்யாறு வாண்டையார்.
மகாகவி பாரதியார் விருது-கு.ஞானசம்பந்தன்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது-இராதா செல்லப்பன்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது-அசோகமித்ரன்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-வ.செயதேவன்.
விருது வழங்கும் விழா: ஒன்பது விருதுகளையும் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் வரும் புதன்கிழமை (சன. 15) திருவள்ளுவர் திருநாளான்று வழங்க முதல்வர் செயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
  விருது பெறுவோருக்கு உரூ.1 இலட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கிச் சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து விருதுகளையும் வழங்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக