தற்போதைய செய்திகள்
தமிழக எம்.பி.,கள் ராஜினாமா செய்ய வேண்டும்: விஜயகாந்த்
First Published : 14 Dec 2011 05:45:05 PM IST
Last Updated : 14 Dec 2011 05:48:36 PM IST

தேனி, டிச. 14: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேனியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.தேனியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் விஜயகாந்த் பேசியது: முல்லைப் பெரியாற்று தண்ணீரை குடித்து வளர்ந்தவன் என்ற முறையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன். கேரள மக்களின் பாதுகாப்பில் தமிழர்களுக்கு அக்கறை உண்டு. அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை கேரள மக்கள் நம்பக் கூடாது. அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக எம்.பி.,கள் கேட்டதற்கு, கேரள அரசிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். மத்திய அரசு மெத்தனப் போக்குடன் நடந்து வருவதாக இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார்.தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்தும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தேனி மாவட்ட மக்கள் தற்போது தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு போராடி வரும் மக்களுக்கு போலீஸ் தடியடிதான் பரிசாக கிடைத்துள்ளது. கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்.பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினமா செய்ய வேண்டும். தேசிய சாலைகளைப் போல, நதிநீரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும். அணையில் நீர்தேக்கும் அளவு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு மற்றும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பெரியாறு அணை பிரச்னையில் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
கருத்துகள்


By gopal
12/14/2011 9:41:00 PM
12/14/2011 9:41:00 PM


By விஸ்வகர்மன்
12/14/2011 9:36:00 PM
12/14/2011 9:36:00 PM


By annakan
12/14/2011 9:31:00 PM
12/14/2011 9:31:00 PM


By P .Padmanaabhan
12/14/2011 9:27:00 PM
12/14/2011 9:27:00 PM


By radhakrishnan
12/14/2011 9:13:00 PM
12/14/2011 9:13:00 PM


By ram
12/14/2011 9:08:00 PM
12/14/2011 9:08:00 PM


By Kamalar
12/14/2011 8:49:00 PM
12/14/2011 8:49:00 PM


By இரா.இராவணன்
12/14/2011 8:43:00 PM
12/14/2011 8:43:00 PM


By ர.ராஜன்,cheyyar
12/14/2011 8:26:00 PM
12/14/2011 8:26:00 PM


By மணிகண்டன்
12/14/2011 8:25:00 PM
12/14/2011 8:25:00 PM


By BKV
12/14/2011 8:14:00 PM
12/14/2011 8:14:00 PM


By ramachandhirasekaran.
12/14/2011 7:36:00 PM
12/14/2011 7:36:00 PM


By Tamilian
12/14/2011 7:12:00 PM
12/14/2011 7:12:00 PM


By திண்டல் சங்கர நாராயணன்
12/14/2011 7:00:00 PM
12/14/2011 7:00:00 PM


By தனபால்
12/14/2011 6:57:00 PM
12/14/2011 6:57:00 PM


By ssrinivasan
12/14/2011 6:57:00 PM
12/14/2011 6:57:00 PM


By ரசிகா
12/14/2011 6:40:00 PM
12/14/2011 6:40:00 PM


By Baalaa
12/14/2011 6:36:00 PM
12/14/2011 6:36:00 PM


By கி.பிரபா
12/14/2011 6:27:00 PM
12/14/2011 6:27:00 PM


By K. ராஜன், திருநெல்வேலி
12/14/2011 6:15:00 PM
12/14/2011 6:15:00 PM


By SARAVANAN
12/14/2011 6:04:00 PM
12/14/2011 6:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
பதிலளிநீக்குமேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று