வெள்ளி, 7 அக்டோபர், 2011

apple founder Steve Jobs died: ஆப்பிள் நிறுவனர் ஃ ச்டீவு சாப்சு மரணம் !

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 56.
கணினி தொழில்நுட்ப உலகுக்கு பேரதிர்ச்சியைத் தரும் இந்தத் துயரத் தகவலை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே தனது பணியையை வெகுகாலம் தொடர்ந்தவர் என்பது கவனத்துக்குரியது.
ஜனவரி முதல் மருத்துவ விடுமுறையில் இருந்து வந்த அவர், ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.
தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே விட்ட ஜாப்ஸ், தன்னுடைய பள்ளி நண்பரான ஸ்டீஃபன் வோஸ்னியாக்குடன் இணைந்து 1976-ல் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல் தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
மீண்டும் 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுப்பிடுப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தை புதுப்பித்தார்.
கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார்.
ஐபோன் (iPhone) எனும் புதிய படைப்பைத் தொடர்ந்து, நுண்ணறி பேசி (Smart Phone) சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது.
காலப்போக்கில் ஆப்பிள் தன் ஐபோன்களில் பல பதிப்புகளை (Versions) வெளியிட்டு தொழில்நுட்பச் சந்தையில் லாபம் கண்டது மட்டுமின்றி மகத்தான சாதனையும் படைத்தது.
சிலிகான் வேலியில் கால்பதித்து தொழில்நுட்ப செயற்களங்களில் (Technology Arena)புரட்சியை ஏற்படுத்தி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சின் இழப்பு, உலகளாவிய சமகால கணினித் துறையால் ஈடுசெய்ய முடியாதது.
//மகா.தமிழ்ப் பிரபாகரன்

நன்றி : விகடன்
 

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு

First Published : 07 Oct 2011 12:24:16 AM IST


நியூயார்க், அக்.6: ஐ-பாட் மற்றும் ஐ-போன் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த "ஆப்பிள்' நிறுவன மேதை ஸ்டீவ் ஜாப்ஸ் (56), புதன்கிழமை மருத்துவமனையில் காலமானார்.கடந்த ஏழு ஆண்டுகளாக கணைய புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் விளைவாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு நான்கு முறை கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகிய அவர், அப்பதவிக்கு டிம் குக் என்பவரை நியமித்தார். இருப்பினும் நிறுவனத் தலைவர் பதவியை தொடர்ந்து வகித்து வந்தார்.""தொலைநோக்கு சிந்தனை உள்ள ஒரு மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநரை இந்த உலகம் இழந்துவிட்டது,'' என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே மருத்துவ விடுப்பில் இருந்து வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சில முக்கியமான தருணங்களில் மட்டுமே நிறுவனம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த மார்ச் மாதத்தில் ஐ-பாட் அறிமுக விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்தில் கலந்து கொண்டார்.கடந்த ஜூன் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் ஐ-கிளவுட் பற்றிய கருத்தரங்கில் தனது கருத்துகளை வெளியிட்டார். அப்போது கிளவுட்-அடிப்படையிலான கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளை வெளியிட்டார்.ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளான ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் ஆகியன இவரது தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையில் உருவானவையாகும்.மிகக் குறுகிய காலத்தில் உலகின் பலரது கவனத்தையும் ஈர்த்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்தது, இத்துறையைச் சார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.உலகம் முழுவதிலிருந்து பல தொழிலதிபர்களும், இத்துறை வல்லுநர்களும், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நாட்டு தலைவர்களும் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் மைக்ரோசாஃட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸýகர்பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி லேரி பேஜ் ஆகியோரும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.ஆப்பிள் நிறுவனத்துக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பேற்ற பிறகுதான் இசை சார்ந்த மின்னணு பொருள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் விளைவாக நிறுவனத்தின் புகழை உலகறியச் செய்த ஐ-பாட், ஐ-போன் போன்ற பொருள்கள் உருவாயின. கல்லூரி படிப்பை பாதியில் விட்ட போதிலும் ஆப்பிள் நிறுவனத்தை உலகறியச் செய்ததில் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு மகத்தானது. புத்த மதத்தைச் சார்ந்த பெற்றோரால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் வளர்ந்து புகழின் உச்சியை எட்டிய இவரது சொத்து மதிப்பு 610 கோடி டாலர் என போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக