வியாழன், 14 ஜூலை, 2011

Newzeland refuses to give asylum for eexham thamizhs: இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தர நியூசிலாந்து மறுப்பு

இந்தோனேசியாவும் நியூசிலாந்தும் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் நாட்டு மக்களுக்கு இணையான உரிமையும் வசதிகளு்ம் பெறும் வகையில் அடைக்கலம் தர வேண்டும். தமிழ் ஈழ அரசு அமைந்ததும் உரிய  செலவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் தர நியூசிலாந்து மறுப்பு

First Published : 13 Jul 2011 12:00:00 AM IST


மெல்போர்ன், ஜூலை 12: அடைக்கலம் கோரி நியூசிலாந்து நாட்டை நோக்கிச் சென்ற இலங்கை அகதிகளை ஏற்க அந்நாடு மறுத்துவிட்டது.இலங்கை அதிகதிகள் 88 பேர் சிறிய ரக கப்பலில் அகதிகளாக நியூசிலாந்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா கடற் பகுதியில் கடந்த சனிக்கிழமை அவர்கள் சென்றபோது அந்நாட்டு கடற்படையினரால் அவர்கள் வழிமறிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் நியூசிலாந்து நாட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மேலும் நியூசிலாந்து நாட்டை வாழ்த்தும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.இதுபற்றி இந்தோனேஷியா அதிகாரிகள் நியூசிலாந்து நாட்டுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இலங்கை அகதிகளை அந்நாடு அனுமதிக்கவில்லை, அவர்கள் நியூசிலாந்து நாட்டுக்கு வருவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த 88 அகதிகளும் எந்த நோக்கத்தில் நியூசிலாந்து நாட்டுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை என அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் ஜோநாதன் கோல்மன் தெரிவித்தார்.இதுபற்றி நியூசிலாந்து பிரதமர் ஜான் கி கூறுகையில், அகதிகள் நியூசிலாந்து நாட்டுக்கு வரும்போது அதை மிகவும் கவனமாகவே நாங்கள் கையாளுவோம். இதை நாங்கள் நியூசிலாந்து சட்டத்திட்டப்படியே அணுக முடியும். இதை நாங்கள் கடுமையாக கடைப்பிடிக்காவிட்டால், நியூசிலாந்தில் அகதிகள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். அவ்வாறு அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றார் ஜான் கி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக