வியாழன், 14 ஜூலை, 2011

பேசும் ஊர்திகள் விரைவில் அறிமுகம்

பேசும் கார்கள் விரைவில் அறிமுகம்

First Published : 14 Jul 2011 12:00:00 AM IST


லண்டன், ஜூலை 13: வாகனங்கள் தகவல்களை பறிமாறிக்கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எனவே, ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டே சாலைகளில் விரையும் கார்களை விரைவில் நாம் பார்க்க முடியும்.போலோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழுவினர் பேசும் இந்த கார்கள் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் குழுத் தலைவர் பேராசிரியர் மார்கோ ரோசெட்டி இதுபற்றி கூறியது: ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னால் சாலையில் என்ன நடக்கிறது என்பதை சென்சார் மூலம் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடு இவ்வகைக் கார்களில் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்தில் சிக்காமல் தப்புவதுடன், வீண் அலைச்சலை 40 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றார்.நாம் கார்களில் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஏதாவது விபத்து ஏற்பட்டிருந்தால், விபத்தில் சிக்கிய வாகனத்தை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் சென்சார் பொருத்தப்பட்ட கார்கள், தானாகவே இயங்கி வேகத்தை உடனடியாகக் குறைத்து நின்றுவிடும். இதனால் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.அதோடு நின்றுவிடாமல், குறிப்பிட்ட காரில் இருந்து வெளியாகும் சென்சார் தகவல், அடுத்தடுத்து வரும் கார்களை சென்றடைந்து எச்சரிக்கும். இதனால் விபத்து குறித்து அறிந்துகொள்வதுடன், மாற்று வழியில் செல்லவும் நமக்கு ஏதுவாகும். புதிய சென்சார் அமைப்பை கார்களில் பொருத்திக்கொள்ளலாம், அல்லது அதிநவீன வசதிகள் கொண்ட தொலைபேசி போன்றவற்றை கார்களில் வைத்துக்கொள்வதன் மூலமும் இத்தகைய வசதிகளை பெற முடியும். ஆனால், அனைத்து கார்களிலும் இதற்கான மென்பொருளை பொருத்தினால் மட்டுமே தடையின்றி தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். இவ்வகை சென்சார் பொருத்தப்பட்ட கார்களை வரும் ஆகஸ்டில் சாலைகளில் சோதித்துப் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர் மார்கோ ரோசெட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக