வெள்ளி, 3 டிசம்பர், 2010

இராசபட்ச மீது போர்க்குற்றம்: விக்கிலீக்சு அம்பலம்

உலகறிந்த செய்தியைச் சொல்வது கமுக்கப்பொருளை அம்பலப்படுத்துவது ஆகாது. போர்க்குற்றவாளிகளுக்குத் துணை நின்ற பிற நாட்டுத் தலைவர்கள், பிற நாட்டு அதிகாரிகள், நடைபெற்ற ஊழல், பேரங்கள் முதலானவற்றையும் விக்கிலீக்சு வெளியிட வேண்டும். வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ராஜபட்ச மீது போர்க்குற்றம்: விக்கிலீக்ஸ் அம்பலம்



வாஷிங்டன், டிச.2: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள்

கருணாநிதி செய்த பாவத்திற்கு எந்த காலத்திலும் மன்னிப்பு கிடையாது .
By செந்தில்
12/2/2010 11:09:00 PM
இலங்கையின் ஜனாதிபதி போர்குற்றவாளி என்று சொல்வது யார்? அவர் மனிதகுலத்தின் துயர் துடைக்க வந்த புத்தரின் வாரிசு தமிழ்மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய் ஆடுமாடுகளாய் கிடந்து துன்பத்தில் உழலுகிறார்களே என்ற பச்சாதாபத்தில் அவர்களை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்த உத்தமர் அவரை குற்றவாளி என்றால் பூமி தாங்காது இப்படித்தான் இந்திய அரசாங்கம் நினைக்கிறது இந்த எண்ணம் மாறுகின்றவரை யார் என்ன சொல்லியும் எதுவும் ஆகாது இதுதான் தமிழனின் தலைவிதி !
By யோகி ஸ்ரீ ராமானந்த குரு
12/2/2010 10:54:00 PM
இவனுக்கும் முசோலினி போல வளமான வாழ்வுகாத்துள்ளது... இலண்டனில் உள்ள எதிர்ப்பு கூட இங்கு இல்லையே... எந்த மொழியில் இவனை திட்ட மிக கேவலமான இழிசொற்கள் உள்ளது யாரவது சொல்லுங்களேன்... என்ன செய்வது வேறு எதுவும் செய்யமுடியவிள்ளையே....
By arun
12/2/2010 9:50:00 PM
இந்த செய்தியை தினமணியில் பார்த்துவிட்டு "மக்கள் தொலைகாட்சி" பார்த்தேன். "அங்காடி தெரு" என்ற நிகழ்ச்சி. அவர்களுக்கு தேவை திமுக உறவு. தேவையற்றது தொப்புள் கொடி உறவு. நன்கு கவனியுங்கள் இனி அவர்கள் இலங்கை அரசை மட்டுமே குறை கூறுவார்கள். தமிழக மற்றும் மத்திய உறவு தேர்தல் வரை இனிக்கும். அம்மையார் கட்சி வென்றால் "நான் ரசிகன்" என்று கூவிக்கொண்டே அங்கே ஓடி விடுவார்கள்.
By நல்லவன்
12/2/2010 9:16:00 PM
ஓட்டுக்கு பணம், அண்ணா சமாதியில் நான்கு மணி நேர உண்ணாவிரதம் இது போதும் தமிழக மக்களுக்கு தமிழின படுகொலையை மறைக்க என்று நிருபித்தவர் நம் தலைவர். விக்கி லீக்ஸ் என்ன உலக மக்களையே திசை திருப்புவார் நம் தலைவர்.
By தமிழன்
12/2/2010 9:15:00 PM
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டையில் இருந்தாலும் சரியே!(அல் குரான் -4;78)
By ilyas
12/2/2010 8:30:00 PM
தமிழக முதல்வருக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! உங்கள் தமிழினப் பற்று குறித்து கவிதையிலும் இலக்கியத்திலும் பார்த்து மகிழ்ந்தவன். ஆனால் இலங்கை தமிழன் கொல்லப்பட்ட பொது நீங்கள் நடந்து கொண்ட முறைகள் வெறும் கேலிக்கூத்து என்பதை நெஞ்சுக்கு நீதி எழுதிய உங்களுக்கே நன்றாகத் தெரியும். இன்று விக்கி லீக்ஸ் ராஜபக்ச ஒரு கொலைகாரன் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டது. இதற்கு துணையாக நின்ற உங்கள் டில்லித் தோழிகளும் தோழர்களும் குற்றவாளிகள் தான். அவர்களுடைய தயவில் வாழும் நீங்களும் குற்றவாளிகள் தான். நீங்கள் பார்க்காத பதவி, புகழ் இல்லை. இனிமேலாவது மனச்சாட்சியைத் தொட்டு நேர்மையாக இலங்கைத் தமிழனுக்கு எதையாவது செய்ய முடியுமா? பாவம் அவர்களை வைத்து ஏமாற்றி வாழ்வது ஒரு வாழ்க்கையா? மிகுதி நாட்களையாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கப் பயன்படுத்துவீர்களா? வேண்டாம் இந்த ஊழல் வாழ்க்கை. சோனியாவை திருப்திப்படுத்த பல ஆயிரம் தமிழர்களை காவு கொடுக்க உடந்தையாக இருந்தீர்கள். அதை நாமும் மறக்கின்றோம். மாறுவீர்களா?
By VIJI
12/2/2010 8:12:00 PM
எங்கள் தொப்புள்கொடி உறவே எங்களை கொடியவர்களிடம் இருந்து காப்பாத்து
By sasikumaran
12/2/2010 7:47:00 PM
இப்படி புலம்புவதால் என்ன பயன், ஒரு உயிருக்கு 10௦ உயிர் எடுக்க ஏன் இந்த ஈழத் தமிழர்க்கு தோன்ற வில்லை?
By thamizhan
12/2/2010 7:29:00 PM
RAJAPAKSE IS A WAE CRIMINAL MAN AMERICA IMMEDIATELY TAKE SERIOUS ACTION AGAINST RAJAPAKSE AND IMPOSE ECNOMIC BAN AND TAKE FAIR ENQUIERY IN WARCRIMES TO WORLD COURT KARUNANITHI MANMOHAN SONIA CHIDAMBARAM ALSO INVOLVE AND INDIRECT SUPPORT TO RAJAPAKSE TAMILNADU PEOPLE GIVE REPLY SHORTLY, NITHYANADHAM MUMBAI
By nithyanandham
12/2/2010 7:14:00 PM
வெட்கம் கெட்ட தமிழர்கள் நாம் , நமக்கு ஒரு தட்டுகெட்ட தமிழ் தலைவர்கள் , இந்த அரசியல் நாய்கள் காசு காசு என்று தமிழனையே கூறு போட்டு விற்கும் கூட்டம் , தரம் கெட்ட முதல்வர் அவரின் வாரிசுகள் ... தமிழனை பிச்சை காரனாகவே மாற்றி , வசியம் செய்து நாட்டையே சூறை ஆடி கொண்டிருக்கும் இவர்கள் காட்டில் aடை மழை பெய்கின்றது .. எப்போது நமக்கு சொரணை வரும் என்று தெரியவில்லை. தமிழனை தமிழன் தான் கெடுக்கின்றான் ..
By veera
12/2/2010 7:11:00 PM
THE SINGALAVA CRIMINALS SHOULD BE PUNISHED FOR THE TAMIL GENOCIDE. TAMIL ELLAM SHOULD BE LIBERATED FROM SINGALAVA DOGS. UNION INDIAN GOVT SHOULD BE ALSO ASHAMED FOR WELCOMING THESE MAN EATERS. LONG LIVE TAMIL ELLAM. LONG LIVE TAMIL.
By Paris EJILAN
12/2/2010 7:08:00 PM
இது அனைவருக்கும் தெரியும். தமிழக முதல்வருக்கும் தெரியும். புதியது அல்ல. இந்தியாவின் பெயர் வெளிவராமல் இருக்க இந்திய அரசும் ஊடகங்களும், முனைகின்றன. தமிழக் முதல்வர் ஜால்ரா அடிக்கின்றார். எந்த இலங்கைத் தமிழனும் கருணாநிதியின் பாவத்தை மன்னிக்கமாட்டான். கேவலமான வாழ்க்கை. காங்கிரஸ் - மு.க குட்டனி பற்றி செய்தி வரும். வெட்கம் இல்லாதவர்களுக்கு மானம் கெட்ட பிறவிகளுக்கு அரசியல் ஒரு கேடா?
By kannan
12/2/2010 6:58:00 PM
இனி யார் இனத்தைச் சொன்னாலும் என்ன பயன்? கருணா,இராசபட்ச,கருணாநிதி,சோனியா கூட்டணியால் மூன்று இலச்சத்திற்கும் மேற்பட்ட ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உலகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது? மனித உரிமை பேசும் அறிஞர்கள் முடிவு கூறுவார்களா?
By VENDHAN
12/2/2010 6:50:00 PM
Rajapakse should resign on moral grounds for killing thousands of innocent Tamil people.
By ssk
12/2/2010 6:38:00 PM
இனி யார் என்னத்தைச் சொன்னால்தான் என்ன?கருணா,கருணாநிதி,சோனியா,இராசபட்ச கும்பல் திட்டம் போட்டு தமிழர்களைக் கொன்றுபோட்டுவிட்டதே! மனித நேயம்,மனித உரிமை என்பதெல்லாம் தான் செய்த தவறுகளை மறைப்பதற்குத்தான் போலும்!
By vendhan
12/2/2010 6:28:00 PM
ஐயோ! ராஜபக்ச அப்படியான மனிதன் அல்ல. அவர் குற்றவாளி என்றால் கலைஞ்சர் , சோனியா, முகர்ஜி, அவங்களுமா? ஐயோ. 40 000 தமிழர்கள் கொல்லப்பாட்டால் என்ன? அதுக்காக சோனியாஜி, மகிந்த அரசைக் கண்டிப்பதா? என்ன அநியாயமா இருக்கு? யாருமே கேக்கமாட்டிங்க்களா?
By kannan
12/2/2010 6:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக