திங்கள், 12 ஜூலை, 2010



தமிழ்வழி பொறியியல் படிப்பில் ஏராளமானோர் சேருவர்: மாணவர்கள் மீது கருணாநிதி நம்பிக்கை



காங்கிரசு ஆட்சியில் ஒப்புக்குச் சப்பாணியாக ஒரே ஒரு கல்லூரியில் மட்டும் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்திய பொழுது அத்திட்டம் எவ்வாறு பயன்தரவில்லையோ அவ்வாறுதான் இப்பொழுதும் அமையும். முதல்வரின் நம்பிக்கையால் பயன் இல்லை. படிக்க வருவோருக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கைதான் தேவை. அதற்கான முன்னுரிமை ஆணையை உடனே அரசு பிறப்பித்தால் ஏராளமான மாணவர்கள் தமிழ்வழியில் பயில முன் வருவர். இதற்கு மாறான பொய்யான நம்பிக்கை வாழ்வளிக்காது. அதேநேரம் தமிழ் வழியில் உயர்கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எதிராக நேயர் ஒருவர் கருத்து பதிந்துள்ளதும் தவறாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2010 3:42:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக