திங்கள், 12 ஜூலை, 2010


இலங்கையில் இருந்து வந்த தமிழரை திருப்பி அனுப்ப ஏற்பாடு



சென்னை, ஜூலை 11: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்த இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மறுபடி திருப்பி அனுப்பப்பட்டார்.ஈரோடு அருகே பவானிசாகர் முகாமில் இருந்த சந்திரலோகு (32) - கடந்த ஆண்டு இலங்கை சென்றார்.  அவருடைய மனைவி, ஊனமுற்ற குழந்தை இன்னும் இங்கு உள்ளனர்.இலங்கையில் இருந்து தன் குடும்பத்தினரைப் பார்க்க சனிக்கிழமை இரவு விமானம் மூலம் சந்திரலோகு சென்னை வந்தார். ஆனால் அவரை இறங்கவிடாமல் தடுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள் மறுபடி இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு  கொண்டவர் என்று தமிழக க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் சந்திரலோகுவை திருப்பி அனுப்ப மத்திய அரசு கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் விமானம் மூலம் அவர் திருப்பி அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னை வந்தபோது இதேபோல திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

சம உரிமையுள்ள குடிமக்களாகத் தமிழர்கள் இல்லை என்றும் தமிழ்நாடு இந்தியாவின் பகுதி அல்ல என்றும் காந்தியம் என்று சொல்லி ஆரியத்தை நிலைக்கச செய்வதே இந்திய அரசின் அடிப்படைச் செயல் என்றும் மத்திய அரசிற்குத் துதி பாடும் தமிழ்நாட்டரசு அடிமை அரசு என்றும் மத்திய அரசு தொடர்ந்து உணர்த்தினாலும் நாம் புரிந்து கொள்வதில்லை. இருப்பினும் இது போன்ற செயல்களால் தன்னுடைய தமிழின எதிர்ப்புப் போக்கை மத்திய அரசு வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. புரிந்து கொள்ளத்தான் உரிமை உணர்வு நம்மிடம் இல்லையே! தமிழ் இந்தியக் கூட்டரசு நாடுகள் என நாட்டமைப்பை மாற்றினால்தான் தமிழர் வாழ்வர்! தமிழும வாழும்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2010 3:08:00 AM
Shame on India and its bloody immigration officials, they simply suck-up to singhalese. Bastards, they will rott in hell
By Sunil
7/11/2010 11:19:00 PM
This is thw beginning of end of Indian Domination over Tamils. The anti-Tamils like Harunanidhi, his family, sonia, bearded, and turbaned religious fanatic Manmohan, Jeyalailitha are soon on their way out. They should also be enquired by the UN commission appointed to find out the atrociti to Tamils. LOng live Tamils, and Tamil Eelam.
By ATamil
7/11/2010 9:02:00 PM
Hey Karunakaran, It not too late. Even now you can correct your mistake!
By Truth
7/11/2010 8:40:00 PM
When Canada says that all tamil refugee allowed to land in Canadian shore is not LTTE and when Australia is all the Tamil refugees inside their country, India is the only country refusing tamils inside India either for treatment or for visiting their child. It has become our habit to obey only court orders for everything. If I have a rebirth, I wish to be born again as a Tamil but never in India.
By karunakaran
7/11/2010 7:52:00 PM
இதன் மூலம் கொலைஞர் கருணாநிதியும் அம்மா ஜெயலலிதாவும் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள். இருவருக்கும் இடையில் வேற்றுமை இல்லை.
By Nakkeeran
7/11/2010 7:15:00 PM
இதன் மூலம் கொலைஞர் கருணாநிதியும் அம்மா ஜெயலலிதாவும் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள். இருவருக்கும் இடையில் வேற்றுமை இல்லை.
By Nakkeeran
7/11/2010 7:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக