ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசின் நிலையில் மாற்றம்: இலங்கை எம்.பி தகவல்

கொழும்பு, ஜூலை.25: கடந்த காலத்தைவிட ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இதை சமீபத்திய தமது இந்தியப் பயணத்தின்போது அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியை இலங்கைத் தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:புதுதில்லிக்கு 6 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தன் தலைமையில் சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விரிவாக உரையாடினோம். மேலும் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினோம்.இலங்கையில் இன்னும் 50 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில்தான் உள்ளனர். அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து இந்தியப் பிரதமரிடம் பேசினோம்.இதுதொடர்பாக இந்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார். ஒட்டுமொத்தமாக இந்தியா-இலங்கை இடையே நிலவும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை காக்க இந்திய அரசு முழுமூச்சுடன் செயல்படும் என மன்மோகன் சிங் தெரிவித்தார்.கடந்த காலங்களைவிட இந்திய அரசின் நிலைப்பாட்டில் தற்போது நிறைய முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியா மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க முயற்சிக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு முனைப்புடன் உள்ளதும் உண்மை. தில்லியில் இலங்கை அரசுத் தரப்புக்கு எந்தளவு கெளரவம் அளிக்கப்பட்டதோ அதே அளவு வரவேற்பும், உபசரிப்பும் தமிழ் மக்கள் சார்பாக சென்ற எங்களுக்கும் கிடைத்தது. இது மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

பாவம் அப்பாவிகள்! தாங்களும் ஏமாற்றமுற்று பிறரையும் ஏமாற்றப் பாதையில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்களா அல்லது வேறு வழியின்றிக் கூறுகிறார்களா எனத் தெரியவில்லை. கொள்ளையடித்த பங்காளிகளில் சண்டைவரும்பொழுது ஒருவன் உடைமையாளனிடம் நீதிமான் போல் பேசினால் அவன் மேலும் வஞ்சகனாகத்தான் கருதப்படுவான். கூட்டுக் கொலைகாரன் அவ்வாறு கூறினால் அதன் காரணத்தை அறிய வேண்டும். தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டிய இந்தியா குறைந்தது சம உரிமை தராவிட்டாலும் மீனவர்படுகொலையை நிறுத்தா விட்டாலு்ம் தமிழ் ஈழத்திற்கு அங்கீகாரம் சொல்வோம் எனக் கூறினால் அதுதான் உண்மையான மாற்றம். பிறவெல்லாம் நமக்குத் தருவன வெறும் ஏமாற்றம் மட்டுமே. 
ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/25/2010 10:11:00 PM
இலங்கை பிரச்சினையை நீங்க பார்த்துக்கோங்கன்னு இந்தியா சொன்னால் நாங்க பார்த்துக்கொள்வோம் என்று சொல்லுவது சரி அல்ல .இந்தியா தலை இடாது என்று வைத்துக்கொண்டால் வேறு ஒரு நாட்டு உதவி யை தைரியமாக அப்போது இலங்கை களத்தில் இறக்கும் .அப்போது தமிழன் நிலைமை பாடு மோசம் ஆகும் அப்போது நீ எங்கே பார்ப்பாய் அயல் நாட்டில் இருந் து கொண்டு கருத்துக்களை அள்ளிவிட்டு தமிழன் வாழ்வில் மண்ணை போடாதீர்கள் அகதிகள் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு படிப்பு ,வேலை வாயிப்பு அளிக்கும் இந்தியாவை குறை சொல்பவன் உண்மையான இலங்கை தமிழன் அல்ல .
By தேசநேசன்
7/25/2010 9:21:00 PM
ஒப்சேவர் என்ற பெயரில் எழுதிய நண்பனே நாங்களும் அதைதான் விரும்புகிறோம். இந்தியா தன் பாட்டிலிருந்தால் நாங்கள் எங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்வோம்.ஆனால் இந்தியா சத்தமில்லாது சிங்களவர்களுக்கு உதவி எங்களை அழிக்க முனைகின்றது.....
By Karan
7/25/2010 8:55:00 PM
செங்கம்பள வரவேற்பா? ஓ தமிழ் நாட்டின் தேர்தல் தேதியும் நெருங்குகிறது.. thedipaar.com
By ki
7/25/2010 8:04:00 PM
THIS THIRD RATE PUBLICITY MAN WHOIS ALWAYS AGAINST INDIAS UNITY SSEMAN SHOULD NOT BE RELEASED FORM JAIL. ON BEHALF OF ALL INDIAN PEOPLE WE REQUEST OUR INDIAN GOVT THAT HE SHOULDNOT RELEASE FROM JAIL. HE SHOULD KNOW THE VALUE OF INDIANS UNITY AND IF HE WANTS HE CAN GET OUT OF INDIA. HE IS POISONING YOUNGSTERS IN INDIA WITH EMOTIONAL WAY.NOW BY READING THIS ARTICLE PEOPLE SHPOULD KNOW THE TRUE COLOUR OF THESE THRIRD RATE POLITICIANS WHO ARE BARKING FOR MONEY FROM FOREIGN LIVING REFUGEES NOW FROM CANADA AND OTHER PLACES ALL REFUGEES ARE GOING FOR HOLIDAYS AND BUYING PROPERTIES IN SRILANKA. THEY ENJOY FOREIGN LIFE AND MAKE DRAMAS TO CREAT THE PROBLEMS.OTHERWISE THEY WILL BE SENT BACK BY FOREIGN GOVTS TO SRILANKA.IF THEY CAN GO AND ENJOY FOR A HOLIDAY OF TWO MONTHS IN LANKA WHY CANNOOT THEY LIVE?IF THEY CAN SELL AND IMPORT PRODUCTS FROM SRILANKA WHY CANNOT THEY GO BACK.TO EXTEND THEIR LUXURIOUS LIFE THESE DRAMAS ARE GOING.NOE THEIR ONLY SLOGAM IS ANTI INDIA.
By INDIAN
7/25/2010 7:56:00 PM
India is a country born with peaceful independence.With out any terror only with satyagraha we got our valuable frredom and we love each other and live in unity withour different language and religion and region. INDIAN GOVT IS ALWAYS HELPING SRILANKA ISSUE IN APROPER LEGALWAY.SOME PEOPLE LIKE VAIKO,SEEMAN ETC.,MAKE THEM SELVES AS HERO TO GET CHEAP PUBLICITY USING THE EMOTION OF FOREIGN LIVING REFUGEES AND SOME YOUNGSTERS IN TAMILNADU,tHEY ARE GOOD FOR NOTHING.THEY CAN BARK.IF SSEMAN LOVES REALLY SRILANKAN TAMILS HE SHOULD GOTO THE POOR SRILANKAN PEOPLE WHO CANNOT MOVE FROM SRILANKA AND DO LOT OF SOCIAL SERVICE AS THER LOT OF SOCIAL SERVICE ORGANISATION.INDIAN GOVT WILL DO ITS DUTY WHAT IS POSSIBLE FOR A FOREIGN GOVT.THERE IS NO NEED FOR ADVICE OR AGITATION AND DRAMA FROM SEEMAN ETC., ATLEAST NOW INDIAN AND SRILANKAN PEOPLE SHOULD KNOW THW TRUE COLOURS OF THESE PEOPLE . THE REAL CAUSE IS FOREIGN LLIVING REFUGEEES LOVING FOR THEIR LUXURIOUS LIFE AND THESE THIRDRATE BARKING PEOPLE
By INDIAN
7/25/2010 7:48:00 PM
Persons like Vaiko and others who pose themselves as saviers of Srilanka Tamils should read this and act accordingly.there is no point in fishing in dirty waters.
By K.Thirumalairajan
7/25/2010 6:56:00 PM
நமக்கு இருக்கற ப்ரிச்சனை போறதுன்னு இந்த இலங்கை பிரிச்சனைய வேற சும்மா பேசி பேசி கழுதருகரங்க. தீவரவாதி பிரபாகரன தான் சேது போயிடேனைய சும்மா ஏன்யா ஏங்க உயிரை எடுகிறீங்க. இந்திய வ விட்டு தொலைங்க நிம்மதியா. உங்க ப்ரிச்சனை நீங்க பார்த்துக்கங்க. எங்கள கேட்ட பிரபாகரன் தமிழர்களை கொலை பண்ணினான். பொய் ஒழுங்க வேலைய பாருங்க. ஏங்க கழுத
By Observer
7/25/2010 6:48:00 PM
War crime inquiery is now strated by the UN for what happend in Sri Lanka. This is surely going to implicate India for its role in Sri Lanka during the closing stages of the war. They never got their price - to caputre and bring Parabaharan to justice . Sarath Fonseksa also wanted to do the same but Gotabaya sent Sarath Fonseka to China and cheated the Indians also with Mass Murder India will never ever be able to match the Jakallish diplomacy of the Sri lankan sinhalese the Indian leadership is no match for the Rajapakse brothers who also know how to buy support if needed and I am sure they have already done it several times
By sena
7/25/2010 6:36:00 PM
இந்திய அரசால் 13வது திருத்தச்சட்டத்தை 1987ம் இந்திய இலங்கை அரசுகள் நடைமுறை படுத்தி இருக்க வேண்டும். பிரபாகரன் தான் மறுத்துவிட்டான். இந்தியரசால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட வரதராஜபெருமாள் ஆட்சியில் உள்ளபோதும் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை.வரதராஜபெருமாள் இலங்கையில் இருந்து வெளியேறும்(1991) போது என்ன கூறினார் இலங்கையரசு ஏமாற்றிவிட்டது.சட்டத்தை நடைமுறை படுத்தவில்லை. இனி கடவுள் தான் தமிழரை காக்க வேண்டும் என்று கூறினார். தமிழர்கள் சிங்களவரால் ஏமாற்றப்படுவது 1948ல் இருந்து. தமிழருடைய பிரச்சனையை 1955 இருந்து சட்டசபையில் தமிழருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் .என்று முத்தமிழ் வேந்தன் சகலகலாவல்லவன் கருணாநிதி கீறினார்.
By kuru
7/25/2010 6:08:00 PM
அப்படியாயின் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் தான் இன்று இன பிரச்சனை உருவானதுக்குரிய காரணிகள். இந்தியா என்ன அமெரிக்கா வந்தாலும். இலங்கையை எவரும் நிர்ப்பந்திக்க முடியாது.கட்டுப்படுத்தவவும் முடியாது. காரணம் சிங்களவர்கள் பொய்யிலையே வாழ்ந்து பொய்லையே வளர்பவர்கள். மற்றது சிங்களவர்கள் தாங்களை ஒரிசா வங்காளி தான் தன்னுடைய மூதாதையர் இனம் என்று கூறி இன்னும் அவர்களுடம் தெடர்பில் இருப்பவர்கள் பிரனாப் முகர்ச்சி போன்ற அவர்களுடைய இனம் சிங்களவருக்கு உறுதுணையுடன் இருந்து உதவி செய்கிறார்கள். தமிழருக்கு எவர் உதவி செய்கின்றனர்??? தமிழனை அழிக்கும் விரோதிகளுக்கு தமிழன் என்று கூறிக்கொள்ளப்படுவர்களால் தமிழனை அழிக்கும் சிங்களவருக்கு 1955ல் இருந்து பொன்னாடை போர்த்தி மகிழ்கிறார்கள்
By kuru
7/25/2010 6:07:00 PM
தமிழர்கள் சிங்களவரால் கொன்றெழிக்கப்படுவது தாக்கப்படுவது தினசரி நிகழ்வாகும் ஒரு மிருகங்களை எப்படி சித்திரவதை செய்து துன்புறுத்தி வாழ்வார்களே. அதை போலவே தமிழரை சித்திரவதை செய்து சிங்களவன் துன்புறுத்தி ஆனந்தப்படுகிறான் புலிகள் இருக்கும் வரை தமிழரை நிமிர்ந்து பார்கக பயந்த சிங்களவன் இன்று இந்திய மத்திய மானில அரசுகளின் அஜாயகங்களேடு கொன்றொழிக்கப்பட்ட இல‌ட்சக்கணக்கான தமிழர்களின் மயான பூமியின் மேல் ஏறி நின்று தெடர்ச்சியாக சிங்களவன் தமிழிச்சிகளை கர்ப்பழித்து ஆறு தலைமுறை தமிழர்களை கொல்(ன்று)லும் அரக்கனுக்கு செம்கம்பள வரவேற்பை கொடுத்து தமிழரை தொடர்ச்சியாக கொல்வதற்கு ஊக்கமழிக்கும்
By முத்தமிழ்
7/25/2010 4:54:00 PM
செம்கம்பள வரவேற்பை கொடுத்து தமிழரை தொடர்ச்சியாக கொல்வதற்கு ஊக்கமழிக்கும் இந்திய தேசமே கொலைகார தேசம் .கருணாநிதியால் நடத்தப்பட்ட தாமிரபரணி கொலை தாண்டவத்தை போல் இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பான‌ முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வரலாற்றில் ஏந்திநிக்கும் இந்த கயவர்களிடம் மனுகொடுக்கவும் ஆதரவு கோட்கவும் புறப்படும் எருமை மாட்டு கூட்டங்கள் திருந்த போவதுமில்லை இலங்கை தீவின் தமிழின அழிப்பின் முடிவுரை தீரும் வரை இந்த கூட்டங்கள் தமிழீழ தமிழக மக்களை கொலை செய்தே தீருவன் என்பதில் பிடிவாதமாக நிற்கின்றனர் தமிழருக்கும் இவர்கட்க்கும் எதுவிதமான. சம்மந்தமிமும் இல்லாத இனமென்பதால் தமிழரை அழித்தே வார் தமிழர்கள் விழித்துக்கொண்டு தங்களை பலப்படுத்தாது விடின் தமிழர் என்ற இனம் வாழ்ததுக்குண்டான அடையாளத்தை இழக்கும்
By முத்தமிழ்
7/25/2010 4:53:00 PM
புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சட்டபூர்வ நடவடிக்கைகளை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். எம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள வுயுபு இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞசம் நிறை;நத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாது
By naam tamilar
7/25/2010 4:13:00 PM
. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள வுயுபு இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞசம் நிறை;நத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைத்துள்ளார். அவரது தமிழின விரோதப் போக்கை புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழக முதல்வருக்கு கண்டனக் கடிதங்கள் அனுப்பியிருப்பதை கேள்விப்பட்டு பெரிதும் மகிழ்ந்தேன். அளவற்ற உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றைக்கும் சீமான் நன்றி சொல்வதோடு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போர்க்குணத்தோடு வாழ்வான் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
By naam tamilar
7/25/2010 4:12:00 PM
உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் உறுதுணையாக இருந்தவர்கள்.இந்திய அரசாங்கமும, தமிழ்நாட்டு அரசாங்கமும் தான் இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார். இலங்கை நாட்டு அதிபர் இராஜபக்சே இந்தியாவிற்கு துணிச்சலாக வருவதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்த ஆதரவினால் அந்த இன படுகொலையாளி இந்தியாவிற்க்கு துணிச்சலாக வருகிறார் இலங்கை தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்தியாவை குறை சொன்ன எனக்கு தடை விதித்தாலும் சரி அனுமதி வழங்கினாலும் மாவீரன் பிரபாகரனே என் தலைவர் என்று பேராசிரியர் கூறினார். நேற்று மரியாதை நிமித்தமாக மலேசியாவிற்க்கான இந்தியர் தூதர் விஜய்கோகுலே பினாங்கு மாநில முதலமைச்சரை சந்திக்க வந்திருந்தார் அந்த சந்திப்பு கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டிர்களா என்று டாக்டர் இராமசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது. என்னை தங்கள் நாட்டிற்குள் (இந்தியா) நுழையக் கூடாதென கூறியவர்கள
By arivu
7/25/2010 3:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக