income tax லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
income tax லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கர்நாடக அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை


பெங்களூர், அக்.25: கர்நாடகத்தில் அமைச்சர்கள் ஜனார்தன ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் உள்பட 7 பாஜக எம்எல்ஏக்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பெங்களூர், பெல்லாரியில் சுமார் 60-65 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சில சுரங்க நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. எம்எல்ஏக்களை விலைபேச குதிரை பேரம் நடத்தப்படுவதாக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வந்தன.இந்நிலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

குமாரசாமி முதலான எதிர்க்கட்சியினர் காங்.உடன் இணைந்து பேரம் பேசி வெற்றி கண்டதால்தானே ஆட்சிக்கு எதிப்பான சதி அரங்கேறியது. அவர்கள் வீடுகளில் ஏன் ஆய்வு செய்ய வில்லை? அரசு எந்திரத்தைப் பயன்படுத்தித் தனக்கு எதிரானவர்களை மிரட்டும் காங்.கின் செயல் நாளை அவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதை நினைவில் கொண்டு செயல்படல் நன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/26/2010 2:42:00 AM
தினமனி நல் வழ்த்துகல் நம் நட்டுக்கு தேவை ரானுவ ஆட்சிதான். ஜனனாயகத்தை மூட்டை கட்டி வைக்கலாம்
By M. Annamalai
10/25/2010 9:04:00 PM
ALL MLAs AND MPs AND MINISTERS! FIRST AFFIDAVIT SUBMITED AT THEIR FIRST ELECTION MUST BE SCRUTINISED AND THE PRESENT ASSET MUST BE COMPARED WITH THE AFFIDAVIT AND EXCESS PROPERTY MUST BE CONFISCATED. RAID SHALL BE CONDUCTED AT THE RESIDENCES OF ALL POLITICIANS. WHO IS TO BELL THE CAT?
By M. Annamalai
10/25/2010 8:54:00 PM
INCOME TAX RAID NEED ALL OVER INDIA AND INOME TAX OFFICER HOME ALSO MUST RAID WEEKLY.
By manoharan
10/25/2010 5:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

வருமான வரியைக் குறைக்க புதிய பரிந்துரைகள்



புது தில்லி, ஆக. 12: மாதச் சம்பளதாரர்களின் வருமான வரிச்சுமையைக் குறைக்க புதிய வரி விதிப்பு கையேடு வழி செய்கிறது. இந்தக் கையேட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டனர். புதிய கையேட்டின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும். இப் பரிந்துரைகள் வரி விதிப்பில் எளிமையைக் கையாள உதவும்; தனி நபரும் நிறுவனங்களும் அதிக வரி விதிப்பு விகிதத்திலிருந்து குறைந்த வரி விகிதங்களுக்கு மாற இது பெரிதும் துணை புரியும். ஆண்டு வருவாய் 10 லட்சம் ரூபாய் வரையில் உள்ளவர்கள் இனி தங்களுடைய வருவாயில் 10 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதாவது ஒரு லட்ச ரூபாயை வருமான வரியாகச் செலுத்தினால் போதும். இப்போது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் 10% வருமான வரி விதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் இனி 20% வருமான வரி செலுத்த வேண்டும். அதற்கும் மேல் வருமானம் இருந்தால் அந்த கூடுதல் மதிப்புக்கு 30% என்று வருமான வரி செலுத்த வேண்டும். இப்போது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் 20% வருமான வரி செலுத்துகின்றனர். 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறவர்கள் 30% வரி செலுத்துகின்றனர். அதே சமயம், இப்போது அதிகபட்ச வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1,60,000 ஆக இருப்பதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று கையேடும் பரிந்துரைக்கிறது. அதே போல சேமிப்புகளுக்கு அளிக்கும் வருமானக் கழிவையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ரூ.3 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்குக் கழிவு தர வேண்டும் என்கிறது. இது சேமிப்புகளுக்கு பெருத்த ஊக்குவிப்பாக அமையும். மாதச் சம்பளம் தவிர தரப்படும் இதர படிகள், மற்றும் பணச் சலுகைகளையும் வருமானத்துடன் சேர்த்தே வருமான வரி விதிப்புக்கு உள்படுத்த வேண்டும் என்று கையேடு கூறுகிறது. கம்பெனி வரி: கம்பெனிகள் மீதான அதிகபட்ச வருமான வரி விதிப்பு 30% ஆக இப்போது இருக்கிறது. இதை 25% ஆகக் குறைக்க வேண்டும் என்று கையேடு தெரிவிக்கிறது. இதை கம்பெனிகள் மகிழ்ச்சியோடு வரவேற்கும் என்பதில் ஐயம் இல்லை. குறைந்தபட்ச மாற்றுவரி: அரசு தரும் பல்வேறு வரிச் சலுகைகள் காரணமாக எந்த வரியையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத தொழில் நிறுவனங்கள் மீது குறைந்தபட்ச மாற்று வரியை விதிக்க, அவற்றின் வருமானத்தைக் கணக்கிட புதிய முறை ஒன்றை கையேடு தெரிவிக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் கம்பெனி வரியாக இப்போது 40% செலுத்துகின்றன. அவற்றையும் 25% ஆகக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கிளைகள் ஈட்டும் லாபத்தின் மீது 15% வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் புத்தகக் கணக்கில் காட்டும் லாபத்தின் மீது 15% வரி விதிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அவற்றின் நிகர சொத்து மதிப்பின் மீது 2% குறைந்தபட்ச மாற்று வரியாக விதிக்கலாம் என்று கையேடு பரிந்துரைக்கிறது. வங்கி நிறுவனமாக இருந்தால் அவற்றின் மொத்த சொத்து மதிப்பில் 0.25% ஆண்டுதோறும் வரியாக வசூலிக்கப்பட வேண்டும் என்கிறது பரிந்துரை. பங்கு பரிவர்த்தனை வரியை ரத்து செய்ய வேண்டும், நீண்ட கால மூலதன ஆதாய வரியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கையேடு பரிந்துரைக்கிறது. குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவைக் கொண்டுவர அரசு உத்தேசித்திருப்பதாக பிரணாப் முகர்ஜி அப்போது தெரிவித்தார்.
கருத்துக்கள்

மாதச் சம்பளக்காரர்களை நசுக்காத வருமானவரி முறையே சிறந்தது. அவ்வாறு இல்லாத எதுவும் - இந்த முறை உட்படச் - சிறந்தது இல்லை. சலுகைகள் பணக்கரர்ககள், வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டிடம் நிதி உதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கே என்னும் பொழுது அரசு யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. சேமிப்பிற்கும் முழுத் தள்ளுபடி இல்லாததால், நடுத்தர மக்களால் சேமிக்கவும் இயலவில்லை. மாதச் சம்பளக்காரர் உரூபாய் ஐமபதாயிரம் நிலுவை பெறுகிறார் என்றால், வரிக்கட்டுவதைத் தவிர்க்க இதைப் போல் ஐந்து மடங்கு சேமிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இது மிகவும் மோசடியான முறையல்லவா? எனவே, உழைக்கும் மக்களுக்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கும் நலன் விளையும் வகையில் வருமான வரி முறை‌யை மாற்றுக.

ன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 4:36:00 AM

The Govt is enforcing the law strictly only the salaried people what abt the politicians business nman advocates doctors cine actress who are nw hiding their income and evding their income tax, If the attention of the Govt will go to the abve people vigorously there is large income to Govt Salaried people wont hide their income.

By PG Venkatesan
8/13/2009 11:38:00 AM

The Govt is enforcing the law strictly only the salaried people what abt the politicians business nman advocates doctors cine actress who are nw hiding their income and evding their income tax, If the attention of the Govt will go to the abve people vigorously there is large income to Govt Salaried people wont hide their income.

By PG Venkatesan
8/13/2009 11:38:00 AM

HAPPY NEWS TO THE SALARIED PEOPLE. IT SHOULD BE IMPLEMENTED FAST.

By T VENKU
8/13/2009 10:15:00 AM

A good news for sa;aried peoples and also business people also. we are expecting it should be implemented soon.We are most welcome this direct code policy

By basker
8/13/2009 8:38:00 AM

very easy to know the current news of Tamilnadu and

By sukumaran
8/13/2009 3:06:00 AM

வியாழன், 11 ஜூன், 2009

தலையங்கம்: வட்டி.. வரி.. வயது..



கருத்துகள்

சரியான தீர்வுகளைக் சுட்டிக் காட்டயுள்ளீர்கள்! தற்போதைய வருமான வரி முறையையே அடியோடு மாற்றினால் அரசிற்கும் நன்மை! மக்களுக்கும் நன்மை! அரசு, அரசு அமைப்புகளில் வேலை பார்ப்பவர்கள்தாம் முறையாக வரி கட்டி அல்லலுறுகின்றனர். எனவே, மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் மாதச் சம்பளம் ரூபாய் 20,000 முதல் ரூபாய் 50,000 வரை பெறுபவர்களிடம் மாதம் தோறும் வேறுபாடின்றி 1 விழுககாடு வரி பிடித்தம் செய்யப் பெற வேண்டும். அதற்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் அடுக்கு முறையில் வரி பெற வேண்டும். பிறரிடம் இதே முறையில் தாங்களாகவே வரி செலுத்தும் முறையைப் பினபற்ற வேண்டும். வருமான வரித் துறை என ஒன்று இல்லாமல் மக்கள் தாங்களாகவே வரி செலுத்தும் எளிய முறையைப் பின்பற்றினாலே அரசிற்கு ஆதாயம்தான். ஆனால், ஆளும் கட்சியினர் தனக்கு வேண்டாதவர்களை மிரட்ட முடியாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2009 4:14:00 AM