வியாழன், 4 ஏப்ரல், 2013

மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை அட்டூழியம்

நடுக்கடலில் இராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை க் கடற்படை அட்டூழியம்
 
இராமேசுவரம், ஏப். 4-

ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்களை தாக்குவதோடு, அவர்களது வலைகள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். 16 நாட்களாக நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அவர்களது பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலில் கரைக்கு திரும்பிய அவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதல் பற்றி புகார் கூறினர். தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது மீனவர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக