வியாழன், 4 ஏப்ரல், 2013

கடல் எல்லை எச்சரிக்கும் கருவி: புதிய கண்டுபிடிப்பு


மீனவர்களுக்கு க் கடல் எல்லையை எச்சரிக்கும் கருவி: கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

 மீனவர்களுக்கு கடல் எல்லையை எச்சரிக்கும் கருவி: கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
சிவகாசி, ஏப். 2-

சிவகாசி அருகே உள்ள பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ராஜேந்திரபிரசாத், முனியசாமி, முருகேசன், நாகராஜ், நிவாஸ்குமார், ராஜேந்திர தினேஷ் கண்ணன். இவர்கள் அனைவரும் இணைந்து மீனவர்கள் கடல் எல்லைக்குள் நுழையும்போது எச்சரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இதை கப்பல் அல்லது படகில் பொருந்திய பின்பு கடல் எல்லையை நெருக்கும் 100 மீட்டருக்கு முன்பே நமக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும். அப்போதும் நம் கப்பல் நம் எல்லைக்குள் வரவில்லை என்றால் கப்பல் தானாகவே நின்றுவிடும். இதனால் எக்காரணத்தை கொண்டும் படகு மற்றும் கப்பல்கள் நமது எல்லையை தாண்ட முடியாது. இதன் மூலம் மீனவர்கள் எல்லை பகுதியை அறிந்து மீன் பிடிக்க முடியும்.

இது இரவிலும், பகலிலும் இயங்கக்கூடியது. இந்த கருவியின் செயல்பாடு வியப்பை தருவதாக உள்ளது. ஆர்.பி. டிரான்ஸ் மீட்டர் எனப்படும் சிக்னல் டிரான்ஸ்மீட்டரை கடற்கரையில் பொருத்த வேண்டும். இந்த ஒரு டிரான்ஸ் மீட்டர் அனைத்து கப்பல்களுக்கும் சிக்னல்களை கொண்டு செல்லும். இந்த சிக்னல் இலங்கை எல்லை தொடங்கும் 100 மீட்டர் முன்பு வரை தொடர்ந்து டிரான்ஸ்மீட் செய்ய வேண்டும்.

இந்த கருவியை அனைத்து கப்பல்களிலும் பொருத்தி விட வேண்டும். கப்பல்களில் பொருத்தப்பட்ட இந்த கருவி டிரான்ஸ்மீட்டர் தரும் சிக்னல்களை உள்வாங்கி கொண்டே இருக்கும். எப்போது நமது கப்பல் இலங்கை எல்லையை நெருக்க போகிறதோ அப்போது 100 மீட்டருக்கு முன்பு சிக்னல் கிடைக்காது. அதனால் மைக்ரோ கண்ட்ரோலரை பயன்படுத்தி கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து ஸ்பீக்கர்களிலும் எச்சரிக்கை மணி ஒலிக்கும். இதன் மூலம் இலங்கை எல்லையின் ஆரம்பத்தை அறிந்து கொண்டு மீனவர்கள் செயல்பட முடியும்.

இதன்மூலம் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது முன்பே எச்சரிக்கை மணி ஒலிக்கும் என்பதால் மீனவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த கருவி ஈரோட்டில் நடந்த மாநில அளவிலன கண்காட்சியில் முதல் பரிசை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தாளாளர் சோலைச்சாமி, கல்லூரி இயக்குனர்கள் அருண், சுந்தர், டீன் மாரிச்சாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக