சனி, 6 ஏப்ரல், 2013

சத்தில்லாத சருக்கரை!




சத்தில்லாத சருக்கரை!

சர்க்கரையின் தயாரிப்பு முறைகளால் ஏற்படும் பாதிப்புகளை கூறும், மருத்துவர் பி.சவுந்தரபாண்டியன்: இனிப்பு சுவையுடைய சர்க்கரை, கரும்பு, பனை, தென்னை என, பல தாவரங்களில் இருந்து கிடைத்தாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதி, கரும்பிலிருந்தே கிடைக்கிறது. சத்து மிக்க பொருளாக விளையும் கரும்பு, சர்க்கரையாக புது வடிவம் பெறும் போது, ஏன் நச்சுப் பொருளாக மாறுகிறது? இதற்கு காரணம், கரும்பிலிருந்து சர்க்கரையை சுத்திகரிக்கும் முறை தான்.வயல்களில் விளையும் கரும்பு, சர்க்கரை ஆலைக்குள் சென்று, வெள்ளை நிறச் சர்க்கரையாக மாறுவதற்கு, பல்வேறு வேதியியல் பொருட்கள் கலப்பதே காரணம். கரும்பை துண்டுகளாக்கி, அதன் சாற்றைப் பிழிந்து, சுண்ணாம்புடன் கொதிக்க வைத்த பின், சர்க்கரை பாளங்கள் கிடைக்கின்றன.பாளங்கள், திடமான கரும்பு சாற்றில் கலக்கப்படுகின்றன. இப்படிச் செய்யும்போது, சாற்றின் பழுப்பு நிறம், சற்று மாறுகிறது. அடுத்த கட்டமாக, "கார்பனேஷன் அல்லது பாஸ்படேஷன்' முறையில், கரும்புச் சாற்றை சுத்தப்படுத்தும் போது, சாற்றில் உள்ள சத்துக்கள் நீக்கப்படுகின்றன. "ஆக்டிவேட்டட் கார்பன்' என்ற எலும்புச் சாம்பல் படுகையில், கரும்புச் சாறு செலுத்தப்படுவதால், சர்க்கரைக்கு வெள்ளை நிறம் கிடைக்கிறது.

சாறு பிழிந்தது போக, மீதம் இருக்கும் சக்கை கலவையான, "மொலாசசில்' மட்டுமே, 30 சதவீதம் சுக்ரோஸ், 25 சதவீதம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ், இரும்புத்தாதுக்கள் இருக்கின்றன. சுத்திகரிப்பு என்ற பெயரில், இத்தகைய வேதியியல் நடைமுறைகளால் சுண்ணாம்பு, இரும்பு, மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சோடியம், வைட்டமின் போன்ற, சத்துக்களை நீக்குகின்றனர்.மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பலால் தான், சர்க்கரைக்கு வெண்மை நிறம் கிடைக்கிறது. கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்து இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாகவே பயன்படுத்துவதால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொடர்புக்கு:9865582142.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக