புதன், 18 மே, 2011

பெருந்துயர நாளும் நினைவேந்தல் நாளும்

 பெருந்துயர நாளும் நினைவேந்தல் நாளும்
 
*இலங்கை ஒரே  நாடு என்றால் தன் நாட்டுத் தமிழ் மக்களையே  கொன்றொழித்த /- தமிழ் ஈழம் தனி நாடு எனில், அண்டை நாட்டுத் தமிழர்களை அழித்தொழித்த மிகப் பெரும் அவலத் துயரத் திங்கள் மேத் திங்கள்! துயரம தந்தவர்கள் துரத்தப்படுவது எப்போது?
**பல்லாயிரக்கணக்கானவர்களின் உடைகளைக் கிழித்தெறிந்து கொடூரமாகச் சிதைத்துக்
கொன்ற துயரத் திங்கள் மேத்திங்கள்!*
*சிதைத்தவர்கள் அழுகிச் சாவது எப்போது?*

*பெண்களைக் கொடூரமாகக் கொன்ற பின்பும் சிங்களர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து
கொண்டு கயமைக்கு இரையாக்கிய துயரத் திங்கள் மேத்திங்கள்.கயவர்கள் எமனுக்கு
இரையாவது எப்போது?*

*உலகத்தில் எங்கே துன்பம்  நேர்ந்தாலும் குரல்   கொடுத்து உதவும் தமிழ்
நாட்டினர் எல்லையில் ‌ சொந்தங்கள் கொடுமைக்கு ஆளானாலும் ஊமை ஆனதால் 200,000
தமிழர்கள் படுகொலையான பெரும் துயர நாள்  இன்று (18/5).
இறந்தவரை வணங்கி, இனி இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி இடச் செய்வோம்!

தமிழ் ஈழம் மலரட்டும்!*

போர்நிலத்திலும் வாழ்நிலத்திலும் களப்பலியானவர்களுக்கான
நினைவேந்தலுடனும்
துயரத்துடனும்
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக