சனி, 26 மார்ச், 2011

Red cross society closed at vavuniya : வவுனியா சர்வதேசச் செஞ்சிலுவை சங்கமும் மூடப்பட்டது

தமிழர் பகுதிகளில் செஞ்சிலுவைச் சங்கம் கூட வைக்க தடை செய்யும் சிங்கள அரசைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!

வவுனியா சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மூடப்பட்டது


கொழும்பு, மார்ச் 25: இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இப்போது மூடப்பட்டுள்ளது.  இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் பிரச்னையை துவங்கியபோது 1987-ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் துவங்கப்பட்டது. 2009-ல் விடுதலைப்புலிகளுடன் நடந்த போருக்குப் பின்னர் பல்வேறு செஞ்சிலுவை சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.  ஆனாலும் வவுனியாவில் இருந்த சங்கம் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது.  இந்த நிலையில் இந்த சங்கம் இப்போது மூடப்பட்டுள்ளது.  இதுகுறித்து செஞ்சிலுவை சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கொழும்பிலிருந்து மட்டும் செஞ்சிலுவை சங்கம் செயல்படவேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வவுனியாவில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம் மூடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  அனைவரும் ஏற்கும் தீர்வை விரும்புகிறோம் - ராஜபட்ச: தமிழர்கள் பிரச்னையில் அனைவரும் ஏற்கும் தீர்வை மட்டுமே விரும்புகிறோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கூறினார்.  இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணிக் கட்சியினருடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைவரும் ஏற்கக்கூடிய சிறந்தத் தீர்வை அடைவதே எனது குறிக்கோள்.  விடுதலைப்புலிகளின் கோரிக்கையான தனி நாடு என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 60 ஆண்டுகளாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்.  தமிழ் தேசிய கூட்டணியுடன் இதுவரை 3 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சு நடத்தி வருகிறது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக