திங்கள், 21 மார்ச், 2011

.Jaya regrets about M.D.M.K. decesion: மதிமுக தேர்தல் புறக்கணிப்பு:செயலலிதா வருத்தம்

உண்மையிலேயே வருததப்பட்டார் எனில் ௧௬௦ தொகுதிகளில் ௨௧  இடங்களை ஒதுக்கலாமே!  நேரில் சென்று சந்திக்க இயலா விட்டாலும் தொலைபேசியில் அவரிடம் பேசலாமே! என்றாலும் தன்  கட்டளைக்கு அடிபணியாத எதிர்க்குரல் வந்தது என்று வருத்தம் இருக்கலாம். ( நவாசு  கருத்தில் உள்ள செய்தி நாவலரைப்பற்றி அல்லவா? ௨.) எதற்கெடுத்தாலும் சசிகலா அல்லது அவர் குடும்பம் மீது பழி சுமத்துபவர்கள்  இவருக்கென்று தற் சிந்தனை இல்லை என்று எண்ணுகிறார்களா?)
வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழியை உடைக்க வேண்டா எனக் கருதினால், செயாதான் தன் முடிவை மாற்றிக் கொண்டு ம.தி.மு.க. கேட்கும் தொகுதிகளை விட்டுத்தர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /



மதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஜெயலலிதா வருத்தம்

சென்னை, மார்ச் 20- சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என்ற மதிமுகவின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோவுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது."உங்கள் கட்சியின் செயல்பாட்டை முடிவு செய்யும் அனைத்து உரிமையும் உங்களுக்குத்தான் உள்ளது. எனினும், உங்கள் சகோதரி என்ற முறையில் உங்கள் மீதான மதிப்பு அப்படியே உள்ளது. கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் நீங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க இயலவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் இச்சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்." என்று ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மதிமுக சார்பில் 21 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் 12 தொகுதிகள் வழங்க அதிமுக முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்

அன்பு சகோதரி அன்பு மடல் அற்புதம் நல்லவர்களை எல்லாம் தரக் குறைவாக நடத்துவது அம்மணிக்கு கைவந்த கலை. பெரியவர் மூப்பனார் அவமான படுத்தப்பட்டு எனது ரோமத்திற்கு சமம் என்று சொன்ன பெண்மணி. எங்கள் பாசத்திற்குரிய மாமா வைகோவை மிகவும் வேதனைபடுத்திவிட்டார். இனியும் ரோசமுல்லவர் அம்மணியிடம் செல்லமாட்டார். நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார். தனியாக. நவாஸ்.
By Nawaz
3/20/2011 10:27:00 PM
தினமணி! EVENTHOUGH YOU SUPPORT JAYA SHE IS NOT GOING TO CHANGE HER FACE. WAIT AND SEE.
By Abdul rehman
3/20/2011 9:22:00 PM
ஜெயலலிதா வின் மனித பண்பு வியக்க வைக்கிறது. ஆதி மு க வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது.
By Varadh
3/20/2011 9:15:00 PM
அம்மா நீ ஒரு நடிகை என்பதை நிருபித்துவிட்டாய்.மீதமுள்ளவர்கள் விரைவில் அறிவார்கள் உங்களைப்பற்றி.
By மதன் ராஜா
3/20/2011 9:15:00 PM
இந்த தேர்தலில் கருணாநிதியையும் அவரது தோழமை கட்சிகளையும் தோற்கடிக்க எதிர் கட்சி ஒன்று திரள வேண்டும் ஆதலால் வைகோ இந்த தேர்தலில் கலந்து கொள்ளவேண்டும்
By lakshminarayanan
3/20/2011 8:45:00 PM
எங்களுக்கு திமுக வர கூடாது என்ற எண்ணம் உள்ளது. அதனால் அதிமுகவுக்கு ஓட்டு போடுவோம். ஆனால், அம்மா வெற்றி மிதப்பில் அம்மா சசி கலா குடும்பத்தை கட்சி, மற்றும் ஆட்சியில் அனுமதிக்கும் உள் எண்ணத்தில் செயல் பட்டால், கடவுள் அதிமுகவை வெற்றி செய்ய விட மாட்டான். அம்மாவுக்கு, கடவுள் கிருபையால் முதல் அமைச்சர் பதவி வந்த்தது. இவர் உழைத்து முன்னேறினார் என்று சொல்ல முடியாது. இவரின் பூர்வ ஜென்ம புண்ணியம் இவரை எம்.ஜி.ஆர் வாரிசாக்கியது. இவர் அதை காப்பாற்றி கொள்ளவில்லை. மாறாக, இவர் சசி கலா குடும்பத்தை உள்ளே விட்டது, இவரை அடி பாதாளத்தில் தள்ளியது. இவர் இன்னும் வழக்கில் சிக்கி தவித்து கொண்டு இருப்பது, இவர் தவறான பாதையில் சென்றதன் பலன். இவர் சுற்றிலும் நல்ல ஆலொசகர்களை, திறமையானவர்களை சுற்றி வைக்காத காரணத்தால் இவர் இந்த நாட்டுக்கே பிரதமர் ஆகும் வாய்ப்பை இழந்தார். இவர் சசி குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நல்ல ஆட்சி செய்ய முயற்சி செய்ய வேண்டும். எம்.ஜி,ஆர் சாகும் வரை அசையா சக்தியாக இருந்ததற்கு காரணம், அவர் கீழீருந்து மேலே வந்தார். அவர் மூன்று முறையும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். காரணம் அவருடைய நல்ல எண்ணம்
By ராஜா ரத்தினம்
3/20/2011 8:14:00 PM
Jayalaitha lost winning formula..
By Karisal
3/20/2011 8:11:00 PM
தியாகமும் நேர்மையும் இல்லாதவர்கள் தனது பேராசையை நிறைவேற்ற முயலும்போது இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
By வ.க. சேகரன்
3/20/2011 7:47:00 PM
பாவம் வை கோ எவ்வளுதான் பொறுப்பார் கடைசிவரை ஏமாற்றி விட்டார்கள் தற்போது முதைக்கன்நீர் வடிப்பது வேறு இந்த அரசியல் வாதிகள் எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் இவர்கள் சினிமாவிலிருந்து வந்தவர்கள் அல்லவா அதனால்தான் சிறப்பாக நடிக்கிறார்கள்
By mohan
3/20/2011 7:45:00 PM
பாவம் வைகோ.அன்பு சகோதரியை வருத்தப்படவைத்து விட்டார்.கொண்டுவந்தால் தங்கை ‘தூக்குதூக்கி’யில் சிவாஜி போல் பாடம் கற்றுக்கொண்டார்,.
By சுகுமாரன்
3/20/2011 7:36:00 PM
இப்ப வைகோ ! தேர்தலுக்கு பிறகு யார் ? ? ?.,
By nrm
3/20/2011 7:00:00 PM
வைகோவை இழப்பது நல்லது அல்ல. இதற்காக வருந்தவேண்டிவரும. காலம்தான் ஜயாவை திருத்தவேண்டும். நல்லவர்களுக்கு அரசியலில் இடம் இல்லை. மக்கள் லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் ஆண்டவன்தான் மக்களை காப்பற்ற வேண்டும். வியாபாரம் செய்ய வந்தர்வர்கள் நாட்டை ஆண்டார்கள். நடால வந்தர்வகள் வியாபாரம் செய்கிறார்கள். கயவன் கருணாநிதி உள்ளவரை தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை. குடும்பதிற்காக இலங்கை தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவன்.
By thamizhan
3/20/2011 6:59:00 PM
இது வருத்த மடல் அல்ல. தேர்தல் நேரத்தில் தேவைப்படும் முதலைக் கண்ணீர்.
By கோபால்
3/20/2011 6:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

2 கருத்துகள்:

  1. தினமணியில் வெளியிட வில்லை. வாழ்க தினமணியின் நடுநிலைமை!
    அன்புடன்
    இலக்குவனார் திருவள்ளுவன்
    தமிழே விழி! தமிழா விழி!

    பதிலளிநீக்கு
  2. நேற்று இரவு 8.30 மணிக்கு மீள் பதிவு செய்தேன். தினமணியில் வந்து விட்டது.
    அன்புடன்
    இலக்குவனார் திருவள்ளுவன்
    தமிழே விழி! தமிழா விழி!

    பதிலளிநீக்கு