புதன், 23 மார்ச், 2011

heroic death

வல்லரசுகளுக்கு எதிரான போரில் மட்டுமல்லாமல் நல்லரசு நடத்துவதிலும் வெற்றி காண வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

வீரமரணம் அடையத் தயார்: கடாஃபி


திரிபோலி, மார்ச் 23- லிபியாவின் வெற்றிக்காக வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன் என்று அந்நாட்டு அதிபர் கடாஃபி (68) கூறியுள்ளார்.பொதுமக்களிடையே கடாஃபி உரையாற்றுவதை லிபியாவின் அரசுத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது. அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்."மேற்கத்திய நாடுகளின் செயல் நியாயமற்றதாகும். எங்களுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு வெற்றி நிச்சயம். லிபியாவுக்காக நான் வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன்." என்றார் கடாஃபி.லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடங்கிய பின்னர், முதன்முதலாக அவர் மக்களிடையே நேரில் தோன்றி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 41 ஆண்டுகளாக லிபியாவின் அதிபராக கடாஃபி இருந்து வருகிறார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரு முத்துக்குமார் அவர்களே! நல்லரசை நடத்தச் சொல்லுகிறேன். அவரை நீக்க வேண்டும்  எனில் அந்நாட்டு மக்கள்தான் முயன்று வெற்றி காண வேண்டும். ஈழத் தமிழர்கள்  கொன்றொழிக்கப்பட்டபோது தடுக்காமல் ஊக்குவித்த வல்லரசுகள்  இப்பொழுது மட்டும் மக்கள் நலனுக்காகப் போர் தொடுப்பதாகக் கூறுவது நம்பும்படியாகவா உள்ளது. மக்களுக்கு உதவ எண்ணினால் உணவின்றித் தவிக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு உணவு, மருந்து வழங்கலாமே! படைக்கருவிகள்கூடக் கொடுக்கலாம். ஆனால், நேரடியாகப் போரில் ஈடுபடுவது எந்த வகையில் முறையாகும்? ஓடி ஒளியாமல் களத்தில் நின்று வீரமரணத்திற்கு ஆயத்தமாக இருப்பதால் பாராட்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


pengaludan கும்மாளம் , ராஜபக்ஷேவுடன் நட்பு ....... இலங்கைக்கு பண உதவி .......... கடாபி நி பரலோகம் போகும் நாளை ஆவலுடன் எதிர் பாக்கும் ........ தமிழ்நாட்டு மதுரை தமிழன்
By Prabhakaran
3/23/2011 10:40:00 PM
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே, நல்லரசு இதுவரை அவர் நடத்தவில்லை; மக்கள் பொங்கி எழுந்ததே அதற்குச் சான்று!
By முத்துக்குமார்
3/23/2011 9:36:00 PM
அன்புள்ள...........மேதகு கடாபி, எதார்த்தமாக சித்தித்து, அந்த நாய்களுக்கு எதிராக உங்கள் நாட்டு மக்களை ஒரு நீண்ட போரட்டத்திற்கு தயார் படுத்துங்கள். அவர்களிடம் எதிரியின் நியாயத்தை தெரியபடுத்துங்கள். வாழ்த்துக்கள். மகோ.கண்ணன்
By மகோ.Kannan
3/23/2011 7:52:00 PM
வல்லரசுகளுக்கு எதிரான போ ரில் மட்டுமல்லாமல் நல்லரசு நடத்துவதிலும் வெற்றி காண வாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2011 6:37:00 PM
No other go, has to face similar to Saddam. So long as Arab countries are not united and supporting blindly Nato, not only Libia where all oil rich wells are available, will be taken over by Nato. When Saddam was in trouble, Arab countries would have settled their own problems, how so ever but depending on US, have to face. More over, after disintegration of USSR,.US has become completely out of control, every where and anywhere stretch their hands. Arab countries have supported for UN resolution recently, now repent. Even now can raise alarm joining rest of world and give stiff resistance to Nato.
By V Gopalan
3/23/2011 4:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக