வெள்ளி, 11 ஜூன், 2010

ராஜ​பட்ச -​ தமி​ழக எம்.பி.க்கள் ​சந்​திப்பு வெறும் நாட​கம்: ​பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன்



சென்னை, ​​ ஜூன் 10: இலங்கை அதி​பர் ராஜ​பட்​சவை,​​ தமி​ழக எம்.பி.க்கள் சந்​தித்​துப் பேசி​யது வெறும் நாட​கம் என்று பா.ஜ.க.​ மாநி​லத் தலை​வர் பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.​ ​​ இது குறித்து அவர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​ ​​ பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​பட்ச புது​தில்லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது.​ ​​ ஏற்​கெ​னவே இலங்கை சென்று ராஜ​பட்​சவை சந்​தித்து வந்த தமி​ழக எம்.பி.க்கள்,​​ இப்​போது மீண்​டும் தில்​லி​யில் அவ​ரைச் சந்​தித்​துள்​ள​னர்.​ இது வெறும் சம்​பி​ர​தாய சந்​திப்​பாக நடை​பெற்​றுள்​ளது.​ ​​ தமி​ழர்​கள் தங்​கள் சொந்த இடங்​க​ளில் இன்​னும் 3 மாதங்​க​ளில் குடி​ம​யர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று எப்​போ​தும் சொல்​வ​தையே இப்​போ​தும் ராஜ​பட்ச சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அத​னைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்​ட​தைப் போல தமி​ழக எம்.பி.க்கள் திரும்பி வந்​துள்​ள​னர்.​​ இலங்​கை​யில் நடை​பெ​றும் கொடு​மை​யை​விட,​​ ஆளும் காங்​கி​ரஸ் கட்சி,​​ தி.மு.க.​ மற்​றும் ராஜ​பட்ச நடத்​தும் நாட​கம் பெரும் கொடு​மை​யாக உள்​ளது.​ ​ ​​ இந்​தியா -​ இலங்கை இடையே இப்​போது 7 ஒப்​பந்​தங்​கள் கையெ​ழுத்​தா​கி​யுள்​ளன.​ ஆனால்,​​ இலங்​கைத் தமி​ழர் பிரச்னை பற்றி மேம்​போக்​கான,​​ கண்​து​டைப்​பான ஒரு ஒப்​பந்​தம் தவிர,​​ திட்​ட​வட்​ட​மான நட​வ​டிக்​கை​கள் எது​வும் இல்லை.​ இதி​லி​ருந்தே,​​ தமி​ழர்​களை ஒழிப்​ப​தில் இந்​தி​யா​வும்,​​ இலங்​கை​யும் கூட்​டாக செயல்​ப​டு​வது வெட்ட வெளிச்​ச​மா​கி​றது.​ ​​ இந்​தி​யா​வில் தேடப்​ப​டும் குற்​ற​வா​ளி​யான இலங்கை அமைச்​சர் டக்​ளஸ் தேவா​னந்​தா​வை​யும் ராஜ​பட்ச தன்​னு​டன் அழைத்து வந்​தி​ருக்​கி​றார்.​ ​​ இந்​திய நாட்​டின் சட்​டம்,​​ ஒழுங்கு எவ​ரை​யும் விட்டு வைக்​காது என்​பதை புரிய வைக்க வேண்​டும்.​ எனவே,​​ டக்​ளஸ் தேவா​னந்​தாவை உட​ன​டி​யாக கைது செய்ய வேண்​டும்.​ ​​ இலங்​கை​யில் நடக்​கும் மறு சீர​மைப்​புப் பணி​க​ளில் சீனர்​க​ளைப் பயன்​ப​டுத்​தக் கூடாது.​ அந்​தப் பணி​களை தமி​ழர்​க​ளுக்கு வழங்க ராஜ​பட்​ச​வி​டம் இந்​திய அரசு வலி​யு​றுத்த வேண்​டும் என்று பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.
கருத்துக்கள்

நாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன்ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக