செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

புது தில்லி, ஏப்.19: விடுதலைப் புலிகள் தலைவர் வி. பிரபாகரனின் தாயாருக்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசு மீது திமுக கடுமையான குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கவேயில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் உயிரிழந்தார். இவரது தாய் உடல் நலக்குறைவால் மலேசியாவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக கடந்த வாரம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் இவருக்கு குடியேற்ற உரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்து மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்தப் பிரச்னையை மக்களவையில் திங்களன்று அக்கட்சித் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பினார். கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்னை எழுப்பினார். உடனே பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான திமுக இக்குற்றச்சாட்டைக் கூறுவது விநோதமாக உள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, பிரபாகரனின் தாயார் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு நபர் என்றே பேசினார். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவேயில்லை. அவர் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த அவரை திருப்பி அனுப்பியது ஏன்? என்பது புரியவில்லை என்றார்.இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, அவருக்கு விசா வழங்கிய நிலையில் இங்குள்ள அதிகாரிகள் அவருக்கு அனுமதி மருத்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்றார்.2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பார்வதி மற்றும் அவரது கணவர் திருச்சியிலிருந்து இலங்கைக்குச் சென்றபோது மீண்டும் அவர்களிருவரும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.இதனால் அதிமுக உறுப்பினர்கள் மிகுந்த கோபமடைந்தனர். உடனே அதிமுக கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பித்துரை குறுக்கிட்டு, அப்போது திமுக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.மருத்தவ சிகிச்சைக்காக வந்தவரை மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பிய மத்திய அரசின் செயலை மன்னிக்க முடியாது என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பார்வதியை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு ஏதுமில்லை. அவரை திரும்ப சென்னைக்கு வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக கூறினார். இதை வெளிப்படுத்தும் விதமாக டி.ஆர். பாலுவின் பேச்சு மக்களவையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

டி.ஆர்.பாலுவைப்பாராட்ட வேண்டும் என முழுச் செய்தியைப் படிக்கும் பொழுது ஒருநபர் எனறே பேசியுள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆக, உணர்வின் அடிப்படையிலான பேச்சு அல்ல இது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் காங்.உடன் இணக்கமாக உள்ள ஒரே கட்சி தி.மு.க.என இதழ்கள் குறிப்பிடுகின்றன. அந்தக் கட்சிக்கு இந்த அவமான நிலை. மாநிலத் தன்னாட்சி கேட்கும் தி.மு.க. இந்த அவமானததை எப்படி தாங்கிக் கொள்கிறது? பதவி பேரத்திற்குக் கருவியாகவா? தன்மானத்திற்கு ஏற்பட்ட அறைகூவலாகவா? 2003 இல் மறுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு என்றால் காமராசு குறிப்பிட்டது போல், இதனை அறிந்து புறம் தள்ளித்தான்அல்லது அப்படி எதுவும் குறிப்பு இல்லாமல்தான் புகுவுரிமை (விசா) வழங்கப்பட்டிருக்க வேண்டும். மூவேந்தர்களுக்குப்பின் அமைந்த மாவீரர் அன்னைக்கு இழைத்த அநீதிக்கு அனைவரும் கண்டனம் தெரிவிப்போம். இனியேனும் கொலைகாரக் கூட்டணியை ஆட்சிப் பீடத்தில் அமர விடாது தக்கவர்க்கு வாக்களிப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 2:57:00 AM

எட கொலைஞ்யன் பாதகா தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பார்வதியை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு ஏதுமில்லை. அவரை திரும்ப சென்னைக்கு வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக கூறினார். வம்பில பரம்பில பிறந்த பாதகா கொடியவனே தி மு கா வில் இருந்த தமிழரை வெட்டி சாய்த்த பாதகா ஈழதமிழரை கொலை செய்ய நீ அனுப்பிய கடிதங்கள் போதாதா நீ அனுப்பிய தந்திகள் போதாதா தொலைபேசி உரையாடல்கள் போதாதா நீ அனுப்பிய கடிதங்களால் தந்திகளால் தொலைபேசி உரையாடல்களால் மூன்று இலட்சம் பேரை அகதியாக்கி தொன்னூறாயிரம் பேரை உணமாக்கி நாப்பதிணாயிரம் உயிரை குடித்தாயே வரலாற்றி உன் முகம் துரோகி என்று பதியப்பட்டுள்ளதை மறந்தாயா பாதகா சிறுமிகளை கற்பளித்த காமுகா

By muth tamil
4/20/2010 2:07:00 AM

HAHAHA! very funny! They open visa office and they want to steal Srilankans' money as fees for the visa. Then when the srilankan Tamils arrive in the Indian airports, they deport in the same fights.So, it is kinda unscruopous work by the indian Government. Therefore, all Srilankan do not go to visa offices and not pay any fees for the Indian visa around the world. In other words, Srilankan Tamils do not visit India that never respect humanity and human rights. தொப்புள்கொடி உறவைக் கருத்தில்கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிக கரிசனை மே 5 இல் விசா அலுவலகம் அங்குரார்ப்பணம் இந்திய தூதுவர் அசோக் காந்தாயாழ்.குடாநாட்டுக்கும் தமிழகத்திற்கும் இடையில் தொப்புள்கொடி உறவு இருப்பதைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிகளவுக்கு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, மே 5 ஆம் திகதி முதல் இந்திய விசா வழங்கும் அலுவலகம் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்கா

By Manithan
4/20/2010 1:38:00 AM

பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் உயிரிழந்தார். தினமணி ஆசிரியர் பொறுப்பாளர் குழுமத்துக்கு ஈழத்தமிழனுக்காக உலகத்தமிழனுக்காக நீங்கள் ஆற்றும் பணிக்கு சிரம்தாழ்த்தி தலைவணங்குகிறோம் ஐயா பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் உயிரிழந்தார். என்று செய்தி வெளியிட்டூள்ளீர்கள் பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு நோய்க்கு மருந்து கொடுக்காமல் வன்னியில் நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியாக இருந்தவரை சிங்களம் சித்திரவதை செய்து கொண்டது இது தான் உண்மை

By கரிகால்சோழன்
4/20/2010 1:11:00 AM

பார்வதி அம்மாளுக்கு சிகிட்சை கொடுக்க மறுத்து சித்திரவை செய்து திருப்பி அணுப்பப்பட்டது போல் காரணம் பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கவிட்டால் சோனியா இராஜபக்சை கொலைஞ்யன் செய்த பட்டுகொலைகள் பத்திரிகை வாயிலாக தமிழக மக்களிடம் சென்று சேர்ந்து விடும் என்று கொலைஞ்யன் தட்சணாமூர்த்தி அஞ்சுகிறான் 2011 வரும் தேர்தலில் பார்வதிஅம்மாளிடம் இருந்து வரும் வாக்கு மூலம் தன்னுடைய கொலை கரத்தை தமிழகத்துக்கு அடையாளம் காட்டி விடுமோ என்று அஞ்சுகிறான் இந்த தெலுங்கன்

By கரிகால்சோழன்
4/20/2010 1:11:00 AM

VANAKKAM. ENNA AYYA KODUMAYAGA IRUKKU, PRABAGAN ANUMATIKKA MUDIYAATUNA ETO OTTUKKALAM, AVARIN AMMA ENNA KUNDA VAIKKAP PORANGGA, ENNA MANUSANUNGA, SARI VIDUNGGAYYA, MUGAVARIYA SOLLUNGGA. NANGGA AVUNGGALAI KAVANICHIKKIROM. ENNAI KUPPIDUNGGAL. NA,JEYABALAN MANGAI, ULU TIRAM JOHORE, MALAYSIA. TOLAI PESI 65 016 7651774

By NA,JEYABALAN MANGAI. JB.MALAYSIA
4/20/2010 1:08:00 AM

KARUNANIDHI IS THE NUMBER ONE CHEATER.HOW LONG OUR TAMILIANS WILL SUPPORT HIM? FOR HIS BENEFIT HE WILL SAY ANY THING,AND HE WILL DO ANY THING,ALLAH PLEASE SAVE MY TAMIL COMMUNITY FROM THIS OPPURTUNIST

By A.RIAZ
4/20/2010 12:30:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக