ஞாயிறு, 18 ஏப்ரல், 2010


திருப்பி அனுப்பியது சரியே: சுப்பிரமணியன் சுவாமி



சென்னை, ஏப்.17: மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது சரியான நடவடிக்கையே என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது அறிக்கையில், பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல. ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம் என்றார்.
கருத்துக்கள்

ஈனப்பிறவிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்பொழுது ஊடகங்கள் நினைவு படுத்திக் கொண்டே இரு்க்கின்றன. என் செய்வது? பெரும்பான்மையர் உரிமைக்கு எதிராகச் சிறுபான்மையர் ஆட்சி செய்வதுதானே மக்களாட்சி! சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய் ; உடைத்துப் பாரத்தால் ஒன்றுமே இல்லை என்னும் நாட்டு வழக்குதான் நினைவிற்கு வருகின்றது. ஒன்றுமில்லாததை உயர்த்துவதும் உயர்ந்துள்ளதை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதும்தானே ஊடகங்கள் வேலை!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 5:23:00 AM

இந்தியா இவர்களுக்கு (குறிப்பிட்ட ஜாதியினருக்கு) மட்டும் சொந்தம் போல பேசி இருக்கிறார்... முதலில் அயிரகணக்கான மக்களை கொன்றதுக்கு நீயும் உன் கூட்டமும் கண்டனம் தெரிவி.. மற்றதை பிறகு பார்க்கலாம்..

By tamilan
4/18/2010 5:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக