புதன், 30 டிசம்பர், 2009

ஜெயங்கொண்டம் : வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நேற்று(29ம்தேதி) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பாமக மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். செந்தில்குமார், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐகோர்ட் வக்கீல்பாலு, வன்னியர் சங்க தலைவர் குரு மற்றும் பலர் பேசினர். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தியும் இதுவரை திட்டம்தொடங்கப்படவில்லை.



கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியது கண்டிக்கதக்கது. இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும்என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் . இல்லாவிட்�டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்தபோராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள 6 கோடிபேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆட்சியை பிடித்துவிடலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும். ஐகோர்ட் நீதிபதிகள் 60 பேரில் ஒருவர் மட்டும் தான் வன்னியர் உள்ளார். இதே போல அரசு செயலாளர்கள் 36 பேரில் ஒருவர் மட்டும்தான் வன்னியர் உள்ளார்.



இந்நிலையை போக்க வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும். 1987ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீட பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும். சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குசெல்ல தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம் சார்பில் கல்வி வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் ராமதாசிடம் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.



தமிழ் உணர்வு வெளிப்படும் வண்ணம் நாளிதழையும் தொலைக் காட்சியையும் நடத்தி வரும் இராமதாசு விரக்தியின் விளிம்பில் இருந்து மீள வேண்டும். அல்லது வன்னியர் சாதிக் கட்சி என்று தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி வெறி பிடித்து அலைந்து இருக்கின்ற வாக்கு வங்கியையும் இழக்க வேண்டா. தொடர்ந்து வன்னிய தாசனாகத்தான் இருப்பனே என்றால் அவரது அழிவை யாராலும் தடுக்க முடியாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக