வியாழன், 6 டிசம்பர், 2012

மீனவர் தகுதியைஇழந்திருப்போம்!

சொல்கிறார்கள்:

"காப்பாத்தலேன்னா மீனவர் தகுதியைஇழந்திருப்போம்!'

நீலம் புயலின் போது, தரை தட்டிய பிரதிபா காவேரி கப்பல் ஊழியர்களை காப்பாற்றிய, வடிவேல், கலைமணி, கோபி, மதன், உதயமூர்த்தி ஆகிய மீனவர்களின் அனுபவம்: நீலம் புயல் அடித்த போது, பயங்கரக் காற்றுடன், கடலில் பெரிய அலைகள், ஆக்ரோஷமாக எழுந்தன. மதியம், 1:30 மணியளவில், எங்கள் ஊரூர் குப்பத்தில், கப்பல் தரை தட்டி நின்று விட்டது. உடனே, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம்.இதற்கிடையில் கப்பலில் வேலை செய்த, 25 ஊழியர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, "லைப் போட்' மூலம், தப்பிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவர்கள் ஏறி வந்த, லைப் போட், பாதி வழியில், இன்ஜின் பழுதாகி நின்று விட்டது. அடுத்த சில நிமிடங்களில், ராட்சத அலையில் சிக்கிய அந்த போட், கடலில் குப்புறக் கவிழ்ந்தது. அதிலிருந்து, கப்பல் ஊழியர்கள் தண்ணீரில் தத்தளித்தனர்; நீந்தி வந்துவிடுவர் என, நம்பிக்கையுடன் இருந்தோம்.

அந்த சமயம், "கப்பல் ஊழியர்கள் ஆபத்தில் உள்ளனர், உதவி வேண்டும்' என்று கூறி, வானத்தை நோக்கி சுட்டனர். அதில் ஒன்று, நாங்கள் இருக்கும் பகுதி நோக்கி வந்தது. உடனே, அவர்களைக் காப்பாற்ற, அதிகாரிகள் அனுமதியுடன், படகின் மூலம், கிளம்பினோம்.அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றால், நாமெல்லாம் மீனவனாக இருக்கவே, தகுதியே இல்லை என, தோன்றியது. கடலுக்குள் போகும் போது, உயிருக்கு போராடுபவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஓரளவு கப்பல் அருகில் நெருங்கி விட்டோம்; ஆனால், அலையின் சத்தத்தில், கடலில் தத்தளித்தவர்களுக்கு கேட்கவில்லை.பின், கஷ்டப்பட்டு ஐந்து பேரை மட்டும், கரைக்கு கொண்டு வந்தோம். ஊர் மக்களும், கடற்படையும் சேர்ந்து மற்றவர்களை மீட்டனர். நாங்கள் செல்வதற்கு முன்னரே, ஐந்து பேர் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர்.

எங்கள் ஊர் பெயரே, இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த சம்பவத்திற்குப் பின், எங்கள் மூலம், தெரிய ஆரம்பித்துள்ளது. ஊரில் அனைவரும் எங்களை பெருமையாக பார்க்கின்றனர். நாங்கள் செய்த செயல் மனதிற்கு நிறைவாக உள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக