வெள்ளி, 7 டிசம்பர், 2012

மரங்களுக்கும் காப்பீடு - நிறுவன மேலாளர் தகவல்

மரங்களுக்கும் காப்பீடு - நிறுவன மேலாளர் தகவல்

கோவை:""விவசாயிகளின் தோட்டப்பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுவது போல, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கப்
படுகிறது'' என, சென்னை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைமை மேலாளர் புட்தா பேசினார்.கோவை வன மரபியல் அலுவலகம் மற்றும் வன விரிவாக்க மையத்தின்
உதவியுடன் நடத்தப்படும், மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம் சார்பில், கருத்தாய்வு
கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கோவை மருதம் வன மரபியல் வன பாதுகாவலர் ராமச்சந்திரபதி தலைமை வகித்தார். கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க தலைவர் தேவராஜன் வரவேற்றார்.தோட்டப்பயிர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம் குறித்து, சென்னை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைமை மேலாளர் புட்தா பேசியதாவது:மருத்துவ இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள்காப்பீடு திட்டங்கள் இருப்பது போல், விவசாயிகளின் தோட்டப்பயிர் மற்றும் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இப்போது இத்திட்டத்தின் மூலம் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

இதில் மா, தென்னை, வாழை, பப்பாளி,தேக்கு, காகிதம் மற்றும் தீக்குச்சி பயன்பாட்டுக்காக வளர்க்கப்படும் மரங்கள் ஆகிய வற்றுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. மூலிகை செடிகள் வளர்ப்போரும் இன்சூரன்ஸ் பெறலாம்.இயற்கை சீற்றம் மற்றும் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும். பயிரிட்டுள்ள நிலத்தின் அளவு, விளை பொருளின் மதிப்பு ஆகியவற்றை மதிப்பிட்டு இன்சூரன்ஸ் பிரிமியம் நிர்ணயம் செய்யப்படும்.

பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் செய்துள்ள விவசாயிகளுக்கு வங்கிகள் விவசாய கடன் வழங்க முன் வருகின்றன. ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக இன்சூரன்ஸ் செய்யலாம். மரம் வளர்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டம் நல்ல பலன் தரும்.இவ்வாறு, புட்தா பேசினார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மரபுசார் மூலிகை மருத்துவ துறைத்தலைவர் புண்ணியமூர்த்தி, புலவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக