சனி, 6 பிப்ரவரி, 2010

தமி​ழில் மொழி பெயர்க்​கும் வசதி​ "மக்​க​ள​வைத் தலை​வரை விரை​வில் சந்​திப்​பேன்'



மதுரை, ​​ பிப்.​ 5:​ மக்​க​ள​வைத் தலை​வர் மீரா​கு​மாரை நேரில் சந்​தித்து நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில் மொழி பெயர்ப்பு வசதி வேண்​டும் என வலி​யு​றுத்த இருப்​ப​தாக மத்​திய ரசா​ய​னம் மற்​றும் உரத் துறை அமைச்​சர் மு.க.அழ​கிரி தெரி​வித்​தார்.​​ ​ ​ மது​ரை​யில் அவர் வெள்​ளிக்​கி​ழமை அளித்த பேட்டி:​​ ​ நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில்​தான் பேசு​வேன் என நான் கூறி​ய​தாக அண்​மை​யில் வெளி​யான செய்தி தவ​றா​னவை.​​ ​ நாடா​ளு​மன்​றத்​தில் மொழி பெயர்ப்பு வச​திக்​காக அமைச்​சர்​கள் அம​ரும் இடத்​தில் 8 பொத்​தான்​கள் உள்​ளன.​ முதல் பொத்​தானை அழுத்​தி​னால் ஆங்​கி​லத்​தில் பேசு​வது ஹிந்​தி​யில் மொழி பெயர்த்து தெரி​விக்​கும்.​ அதே​போல் 2}வது பொத்​தானை அழுத்​தி​னால் ஆங்​கி​லத்​தில் பேசு​வது ஹிந்​தி​யில் கேட்​கும்.​ இதே​போல் தமி​ழில் மொழி பெயர்க்​கும் வசதி வேண்​டும் என்​று​தான் நான்,​​ தொல்.​ திரு​மா​வ​ள​வன் முஸ்​லிம் லீக் கட்சி உறுப்​பி​னர் உள்​ளிட்​டோர் வலி​யு​றுத்​தி​னோம்.​ ​ ​ இது​தொ​டர்​பாக எங்​க​ளது கட்​சி​யின் எம்.பி.க்கள் குழு​வி​னர் மக்​க​ள​வைத் தலை​வர் மீரா​கு​மாரை தில்​லி​யில் சந்​தித்​த​போது,​​ நான் இந்​தோ​னே​ஷி​யா​வில் இருந்​தேன்.​ அடுத்த முறை தில்லி செல்​லும்​போது அவ​ரைச் சந்​தித்​துப் பேசு​வேன் என்​றார்.​​ ​ தொழில் வளர்ச்சி நட​வ​டிக்​கை​க​ளுக்​காக வெளி​நாடு செல்​லும் திட்​டம் ஏதும் உள்​ளதா என்று கேட்​கி​றீர்​கள்.​ ​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ் ஆகிய நாடு​க​ளுக்​குச் செல்​லத் திட்​ட​மி​ருந்​தேன்.​ ஆனால்,​​ அங்கு கடும் குளிர் இருப்​ப​தால்,​​ பய​ணம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.​ தற்​போது ஆஸ்​தி​ரே​லியா செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளேன்.​ விரை​வில் அதற்​கான தேதி அறி​விக்​கப்​ப​டும் என்​றார் அழ​கிரி.
கருத்துக்கள்

அடச்சே! இதற்குத்தானா இந்த அலபபறை எல்லாம். ஏதோ கூட்டரசு அமைப்பில் தேசிய மொழிகளுக்கான சமஉரிமை கேட்டுப் போராடி வெற்றி காண்பார் என்றால் காதில் பூ சுற்றுகிறாரே! உண்மை இதுதான் என்றால் தொடக்கத்தில் இவரது கருத்தைப் பிறர் வரவேற்ற பொழுது இவரது கருத்தை ஏற்குமாறு குமரி அனந்தன் அவர்கள் நாடாளுமன்ற அவைத்தலைவருக்கு மடல் எழுதியதாகச் செய்தி வந்த பொழுது மறுத்திருக்கலாமே! பகுத்தறிவுடன் சிந்தித்தால் கோரிக்கை தவறாகிறதே! ஏன் எனில் நாடாளுமன்றங்களில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசலாம் என்னும் பொழுது இவர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலப் பேச்சு புரியும். எனவே, இந்தி அல்லது ஆங்கில மொழி பெயர்ப்பு போதுமானது. பிற மொழிகளில் பேச உரிமை இல்லாத பொழுது பிற மொழிகளுக்கான மொழி பெயர்ப்பு தேவைப்படவில்லை. அஞ்சாநெஞ்சன் பெயரை வைத்துக் கொண்டு அஞ்சும் நெஞ்சனாகத் தடம் புரளுவது வேதனையாக உள்ளது. தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தவரின் மைந்தன் தமிழுரிமை காக்கத் துணிவார் எனக் கருதியது தவறு போலும்.மத்திய அமைச்சராக இருந்தும் மதுரை மண்டலத்தில் மட்டும் வலம் வந்துகொண்டிருப்பவரிடம் தமிழ்த் தேசிய உரிமையைக் காப்பார் என

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 10:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக