karaikudi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
karaikudi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 டிசம்பர், 2013

துண்டுத் தாளில் 140 அடி உயர வள்ளுவர் ஓவியம்: 1,147 மாணவர்கள் அருந்திறல்

துண்டுத் தாளில் 140 அடி உயர 
வள்ளுவர் ஓவியம்:
 1,147 மாணவர்கள் அருந்திறல்

காரைக்குடி: "லிம்கா' சாதனைக்காக, துண்டு வண்ண காகிதம் மூலம், 140 அடி உயர, திருவள்ளுவர் ஓவியத்தை, காரைக்குடி லீடர்சு பள்ளி மாணவர்கள் செய்துள்ளனர். காரைக்குடி, லீடர்சு பள்ளியைச் சேர்ந்த, 1,147 மாணவர்கள், 140 அடி உயரம், 50 அடி அகலம் கொண்ட, கன்னியாகுமரி ஆளுயரத் திருவள்ளுவர் சிலை ஓவியத்தை, துண்டுத்தாள்களைக் கொண்டு செய்தனர். இதற்காக,  200 கிராம் கொண்ட, 1,450 பெவிக்கால் குப்பிகள், 1,750 வரைபட அட்டை, 50 ஆயிரம்  மெருகுத்தாள் பயன்படுத்தப்பட்டன.
ஆறு மணி நேரத்தை இலக்காகக் கொண்டு, காலை, 9:30 மணிக்குத் தொடங்கி, மாலை, 3:00 மணிக்குள், ஓவியத்தை நிறைவு செய்தனர். 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. லிம்கா குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில், குழுவினர் ஓவியத்தைப் பதிவு செய்தனர்.

பள்ளி இயக்குனர் ஞானகுரு கூறுகையில், ""மாணவர்களிடையே ஒற்றுமையையும், படைப்பாற்றலையும், தமிழ்ப் பற்றையும் வளர்க்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
Click Here

சனி, 3 ஆகஸ்ட், 2013

பள்ளி மாணவர்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு : "சரக்கு' உந்து சிறைப்பிடிப்பு

பள்ளி மாணவர்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு : "சரக்கு' உந்து சிறைப்பிடிப்பு

காரைக்குடி : காரைக்குடி ரயில்வே- கல்லூரி சாலையில், டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, "சரக்கு' ஏற்றி வந்த லாரியை, பள்ளி மாணவர்கள் சிறை பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள், கோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அமைக்க, டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் இயங்கிய மதுக்கடை, காரைக்குடி ரயில்வே- கல்லூரி சாலைக்கு மாற்றப்பட இருந்தது. நேற்று, கடை மேற்பார்வையாளர் ஜாகீர்உசேன் மற்றும் விற்பனையாளர்கள், "சரக்கு', தளவாட பொருட்களை லாரியில் ஏற்றி வந்தனர். மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள், சதானந்த சன்மார்க்க நிலைய துவக்க பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். லாரியை சிறைபிடித்த மாணவர்கள், கோஷம் எழுப்பினர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள், லாரியுடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர் திலகம் கூறுகையில், ""எங்கள் பள்ளியில், கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகள்தான் படிக்கின்றனர். மதுக்கடை திறந்தால், பெண்கள் நடக்க முடியாத நிலை ஏற்படும்,'' என்றார்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கோபிநாத் கூறுகையில், ""அங்கு மதுக்கடை திறக்கப்படாது. வேறு இடம் பார்த்து வருகிறோம்,'' என்றார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

Music contests at Karaikudi: காரைக்குடியில் மாநில அளவிலான இசைப் போட்டிகள்

காரைக்குடியில் மாநில அளவிலான இசைப் போட்டிகள்

First Published : 02 Aug 2011 01:16:07 AM IST


காரைக்குடி, ஆக.1: காரைக்குடி தமிழ் இசைச் சங்கம் சார்பில் மாநில அளவிலான இசைப் போட்டிகள் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவுள்ளன. காரைக்குடி மகரிஷி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, பரத நாட்டியம் ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். வாய்ப்பாட்டு, வீணை, பரத நாட்டியம் ஆகியவற்றில் பெருநிலையில் பங்கேற்பவர்கள் 16 முதல் 25 வயதுக்குள்பட்டவராகவும், இளநிலையில் பங்கேற்பவர்கள் 15 வயதுக்குள்பட்டவராகவும், மிருதங்கப் போட்டியில் பங்கேற்பவர்கள் 15 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.இப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ரூ.20 மணியார்டர் மூலமோ அல்லது நேரிலோ செலுத்தி, விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 13.8.2011. விண்ணப்பங்களை வி.நீலாயதாட்சி, இசைப் போட்டிக் குழுத் தலைவர், 3, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், 8-வது வீதி, காரைக்குடி- 630 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.தொடர்புக்கு: தொலைபேசி எண் 04565- 230911, 94861 01905. இத் தகவலை தமிழ் இசைச் சங்கத்தின் செயலரான வி. சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.