காடையாம்பட்டியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் காடையாம்பட்டி நடுநிலைப்பள்ளி, காடையாம்பட்டி பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.
அறிவுரைஞர் (PDI) திருமிகு.இரேகா  பேசுகையில், ‘’ஆணுக்குப் பெண் சமம். எனவே பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள்,  சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தையினை போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
செயலர் இல.அம்பலவாணன்