திங்கள், 22 மே, 2017

பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு, மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா





பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு

ஆகத்து 2017

 மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா


அன்புடையீர்,
வணக்கம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும்.  இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
 தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

படைப்புகளுக்கான விதிமுறைகள்;
  • அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள கருத்துகளை ஒட்டியோ அமைதல் வேண்டும்.
  • படைப்புகள்,
 என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  ஆனி 16 / சூன் 30 ஆம் நாளுக்குள் கிடைக்குமாறு அனுப்புதல் வேண்டும்.  மேலும், படைப்புகளின் எழுத்துருவானது (font size)  ஒருங்கு குறியீட்டில்  ( Unicode), “12” என்ற அளவில் இருக்க வேண்டும்.
  • படைப்பானது, 10 பக்கங்களுக்கு  (A4 Paper size, 10 page) மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு படைப்போடும், 300 சொற்களுக்கு மிகாமல், படைப்பின் சுருக்கத்தையும் (Abstract),இணைக்கவும்.
  • படைப்பாசிரியரின் தற்குறிப்பு (Bio-data) 150 சொற்கள் அளவில் இருத்தல் வேண்டும்.
  • மேற்கூறிய விதி முறைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகள் மறுக்கப்படும்.
அன்புடன்,
முனைவர் இர. பிரபாகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக