திங்கள், 10 டிசம்பர், 2012

கூடங்குளம் : நடுக்கடலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் : நடுக்கடலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்




கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தியைத் துவக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருநெல்வேலி மீனவர்கள் படகுகளில் வந்து நடுக்கடலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் தலைமை வகித்தார்.
இப்போராட்டத்தின் போது உச்சநீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் நகல்களை போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் கடலில் வைத்து எரித்தனர். போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சுப. உதயக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது அணுமின் சக்தி மற்றும் நாட்டில் உள்ள அணு உலைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்களிடைய பொது விவாதம் நடத்த வேண்டும். பொது விவாதத்துக்குப்பின் பெரும்பான்மையான மக்கள் அணு சக்திக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தால், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அருதிப் பெரும்பான்மைக் கிடைத்தால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட தயார் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரை பகுதியில் போலிஸார் நுழைவதற்கு முயற்சித்ததால், பதற்றம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்பு போலிஸார் அங்கிருந்து விலகியதால் பதற்றம் தணிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக