வெள்ளி, 6 ஏப்ரல், 2012

No fear of power-cut

 எங்கள் மகன் பொறி.தி.ஈழக்கதிர் கடந்த ஆண்டு ஃபோம்ரா பொறியியல் கல்லூரியில் பட்டம் பயின்றவன்.  அவன் அங்கு மூன்றாம் ஆண்டு பயிலும் பொழுதே அப்போதைய முதல்வர் முனைவர் மகேசு அவனிடம்  கதிரொளி மின்வசதிக்கான பொறுப்பை ஒப்படைத்தார். அவன் தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து சூரிய ஒளியைப்பயன்படுத்திக் கல்லூரி விடுதிக்கும் கல்லூரிச் சாலை விளக்குகளுக்கும்  சமையல்அறைக்கும் வேண்டிய மின்வசதியை உருவாக்கிக் கொடுத்தான். இதைப்போல் ஒவ்வொரு  கல்வி நிறுவனமும் தனியார் நிறுவனங்களும் தத்தமக்கு வேண்டிய மின் வசதியை ஏற்படுத்திக் கொள்ள அரசு  ஆணையிட்டு அவற்றுக்கு வேண்டிய பொருள்களை வரியின்றிக் குறைந்த விலையில் கிடைகக ஏற்பாடு செய்தால் மின்வெட்டே இருக்காது. அடுக்குமாடி கட்டுநர்கள் கட்டாயமாகச் சூரிய ஒளி மின்சாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயமாக ஆக்க வேண்டும். ஓராண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே சூரியனைப் பார்க்கும் செருமனியில் கதிரொளி மின்சாரம் எளிதாக நிறைவேற்றப்படும் பொழுது நம் நாட்டில் முயன்றால் கட்டடங்களுக்கு மட்டுமல்லாமல் ஊர்திகளுக்கும் குளு குளு வசதி செய்து தரலா‌மே.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /











இனி "பவர்கட்' பயமில்லை!


சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் சுரேஷ்: நான், சென்னை ஐ.ஐ.டி., யில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஆமதாபாத், ஐ.ஐ.எம்.,மில், எம்.பி.ஏ.,வும் படித்தவன். நான் படித்த படிப்புகள், நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணமே, சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற, என் முயற்சிக்குக் காரணம்.
ஆண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே, சூரிய வெப்பம் உள்ள ஜெர்மனியில், சோலார் மின் உற்பத்தி சாத்தியம் எனில், ஆண்டில் எட்டு மாதங்கள் வெப்பம் உள்ள நம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், ஏன் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியாது?
எங்கள் வீட்டின் கீழ்தளத்திலும், மேல் தளத்திலும், ஏழு அறைகள் உள்ளன. இந்த அறைகளில், பல்புகளும், மின் விசிறிகளும் இயங்க, ஒரு கிலோவாட் மின்சாரம் தேவை. இந்தத் தேவைக்காக, பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். இந்தத் தகடுகள், சிலிக்கானால் ஆனவை. சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக் கதிர்கள், இந்தத் தகட்டின் மீது படும்போது, இதிலுள்ள சிலிக்கான், இக்கதிர்களை மின் ஆற்றலாக மாற்றும். இந்த மின்சார ஆற்றல், ஒயர்களின் வழியாக, மெயின் போர்டில் சேரும்படி, இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டு சோலார் இன்வெர்ட்டர் பேட்டரிகளிலும், மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
சூரிய வெளிச்சம் உள்ள பகல் நேரத்தில் மட்டும் தான், இந்தத் தகடுகளில், மின்சாரம் பெற முடியும். சேமிக்கப்பட்ட இன்வெர்ட்டர்கள் மூலம், இரவு நேரங்களில் மின்சாரம் பெறுகிறோம். சோலார் தகடு, இன்வெர்ட்டர், பேட்டரிகள் அனைத்தையும் சேர்த்து, இரண்டரை லட்சம் ரூபாய் செலவானது. வீடு முழுவதும், சோலார் மின் இணைப்புக் கொடுத்திருப்பதால் தான், இத்தொகை. நடுத்தர சிறிய வீடுகளில் இத்தொகை பாதியாகக் குறையும். ஒரு வீட்டில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சோலார் இணைப்புக் கொடுத்தால் செலவு குறையும்.
சோலார் தகடுகளை ஒருமுறை பொருத்திவிட்டால், 25 ஆண்டுகளுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. எட்டு பேட்டரிகளுக்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. இந்த பேட்டரிகளை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக