வியாழன், 27 அக்டோபர், 2011

ஈழத்தில் இராசீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (1) – புரட்சிப்பெரியார் முழக்கம்

ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (1) – புரட்சிப்பெரியார் முழக்கம்

ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகடிநத்திய போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு: அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன்னரே முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைச் சுற்றி வளைத்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு முகாமை வெடி வைத்துத் தகர்த்தனர்.
10.10.87
இன்று அதிகாலை 5 மணியளவில் யாடிந
நகருக்குள் உள்ள ஈழ முரசு, முரசொலி ஆகிய 2
தினசரித் தமிடிநப் பத்திரிகை அலுவலகங்களுக்கு
புகுந்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு
வேலை செடீநுது கொண்டிருந்த ஊழியர்களை ஆயுத
முனையில் கைது செடீநுததுடன் அலுவலகங்களை
யும், அச்சு இயந்திரங்களையும் வெடிகுண்டுகள்
வைத்துத் தகர்த்தனர்.
அதே தினத்தில் கொக்குவில் என்னும் இடத்தில்
இருந்த விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி
சேவையான ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி நிலையத்
துக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சி
ஒளிபரப்பு உபகரணங்களை அபகரித்துச் சென்றனர்.
(விடுதலைப் புலிகள் திருட்டுத்தனமாக வைத்
திருந்த ரேடியோ சாதனங்களைத் தாம் கைப்பற்றி
யதாகவும், இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத்
தூண்டிப் பிரசுரங்களை வெளியிட்டு வந்த
அச்சகங்களைத் தாம் முடக்கி வைத்திருப்பதாகவும்
இந்திய அமைதி காக்கும் படையினர் தம்
நடவடிக்கைகள் குறித்து சமாதானம் கூறினர்.)
1. விடுதலைப் புலிகள் தங்களது ரேடியோ,
தொலைக்காட்சி சேவைகளைப் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். விடுதலைப்
புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி
சேவையில் ஒளிபரப்பப்பட்ட பல நிகடிநச்சிகளை
இந்திய அரசு அதிகாரிகள் வேண்டிப் பெற்று
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பி
யிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று
எந்தவித தகவலும் கொடுக்காமல் தொலைக்
காட்சி நிலையத்தினுள் புகுந்து அங்குள்ள
சாதனங்களை அத்துமீறித் தூக்கிச் சென்றதானது
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக
எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையேயாகும்.
2. இலங்கை அரசினால் செடீநுதிப் பத்திரிகைகளாகப்
பதிவு செடீநுயப்பட்டு, பல ஆண்டுகளாக வெளி
வந்து கொண்டிருந்த ஈழ முரசு, முரசொலி ஆகிய
பத்திரிகை அலுவலகங்களை இந்திய அமைதி
காக்கும் படையினர் தாக்கித் தகர்த்ததாவது, தமது
ஜனநாயக உரிமைகளை நசுக்கிய செயலாகவே
ஈழத் தமிடிந மக்கள் கருதுகின்றனர்.
மதியம் 2.15 மணியளவில் இந்திய அமைதி
காக்கும் படையினர் கோட்டைப் பக்கமாகவும்,
கோப்பாடீநு பக்கமாகவும், முத்திரைச் சந்திப்
பக்கமாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செடீநுதபடி
முன்னேறியதைத் தொடர்ந்து, மக்களையும்,
தங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் விடுதலைப்
புலிகள் தற்காப்பு யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய
கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். யாடிந குடா நாடு
முழுவதிலும் இந்திய இலங்கை இராணுவம்
கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தியதில் 100-க்கும்
மேற்பட்ட பொது மக்கள் கைது செடீநுயப்பட்டனர்.
வடமராட்சிப் பகுதியில் தேடுதல் வேட்டை
நடத்திய இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு
பத்துப்பொது மக்களைச் சுட்டுக் கொன்றனர்.
11.10.87
இன்று காலையில், இந்திய அமைதி காக்கும்
படையினரால் ஏவப்பட்ட செல் கைலாசப்
பிள்ளையார் கோவில் மீது விழுந்து வெடித்ததில் 12
பொது மக்கள் கொல்லப்பட்டனர். 20 பேர்
காயமுற்றனர்.
பனையில் விடுதலைப் புலிகளின் வேன் ஒன்றை
விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமற் போகவே
ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும் படையினர்
திரும்பிச் செல்லும் வழியில், எதிர்ப்பட்ட
மக்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
இதில் இரு குழந்தைகள் உட்பட 13 பேர் இறந்தனர்.
இரவு யாடிநப்பாணத்தைக் கைப்பற்றும்
முயற்சியில் இந்திய அமைதி காக்கும் படையினர்
முழு மூச்சாக இறங்கினர். இரவு 1 மணியளவில்
யாடிநப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடப்
பகுதியில் ஏராளமான இந்திய அமைதி காக்கும்
படையினர் கெலிகாப்டர்கள் மூலம் வந்திறங்கினர்.
அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
8 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற கடும்
சண்டையில் 40க்கும் மேற்பட்ட இந்திய அமைதி
காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 20 எ°.எம்.ஜி., 6
எ°.எல்.ஆர்., 3 எல்.எம்.ஜீ., 2 ஜி.பி.எம்.ஜீ., ஒரு
ராக்கட், லோஞ்சர் உட்பட ஏராளமான ஆயுதங்
களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
அதனால் ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும்
படையினர் பொது மக்களைத் தாக்கினர். அதில் 30
பொது மக்கள் கொல்லப்பட்டனர். 250 பேர்
காயமுற்றனர்.
12.10.87
இன்று நடைபெற்ற சண்டையிலும் ஏராளமான
இந்திய அமைதி காக்கும் படையினர் கொல்லப்
பட்டனர். இந்திய அமைதி காக்கும் படையினர்
மேற்கொண்ட மோட்டார் பீரங்கித் தாக்குதல்களின்
போது பல பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய அமைதி காக்கும் படையினர் பொது
மக்களை வீதியில் நிறுத்தி மிகக் கொடூரமான
முறையில் அவர்கள் மீது கவச வாகனங்களையும், ஜீப்
வண்டிகளையும் ஏற்றி நசுக்கிக் கொன்றனர். சுமார் 40
பொது மக்களின் சடலங்கள் உருத் தெரியாதவாறு
சிதைந்து அப்புறப்படுத்த முடியாத நிலையில்
காணப்பட்டன.
யாடிந பல்கலைக்கழகத்தினுள் விடுதலைப் புலி
களிடம் சிக்கியவர்களை மீட்க என பாராசூட்டின்
மூலம் இறக்கப்பட்ட இந்திய அதிரடிப் படையினர்
படுமோசமான செயல்களில் இறங்கினர். அவர்கள்
திரும்பிச் செல்லும்போது 12 சடலங்களை மட்டுமே
எடுத்துச் சென்றனர்.
விடுதலைப் புலிகள் தங்களிடம் சிக்கிய இந்தியப்
படையினரின் 29 சடலங்களை செஞ்சிலுவைச்
சங்கத்தின் மூலம் இந்தியத் தரப்பினரிடம் கொடுக்கும்
ஒழுங்குகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த 29
பேரின் சடலங்கயையும் அப்போது இருந்த
சூடிநநிலையில் தாங்கள் பொறுப்பெடுத்துச் செல்வது
சாத்தியமில்லை என்று இந்திய இராணுவப்
பொறுப்பதிகாரி யாடிந மாவட்ட அரசாங்க அதிபர்
மூலம் விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்ததைத்
தொடர்ந்து 29 சடலங்களும் அங்கேயே தகனம்
செடீநுயப்பட்டன.
பாராசூட் மூலம் இறங்கிய இந்திய அதிரடிப்
படையினர் படுதோல்வியுடன் திரும்பி ஓடினர்.
உரும்பராயில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில்
இந்தியப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய
தாக்குதலின்போது அப்பாவிப் பொது மக்கள் பலர்
(இரு மூதாட்டிகள், இரு குழந்தைகள் உட்பட)
கொல்லப்பட்டனர்.
12 ஆம் தேதி மாத்திரம் 104 பொது மக்கள்
செல்காயங்களினால் பாதிக்கப்பட்டு யாடிந
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப்
படையினர் பெண்களைக் கொடூரமான முறையில்
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் கொலை
செடீநுதுள்ளனர். பெற்றோருக்கு முன்பாகவே
அவர்களது பிள்ளைகள் பயங்கரமான முறையில்
கொலை செடீநுயப்பட்டனர். உடம்பின் பல பகுதிகள்
கெட்டுப் போன நிலையில் இவர்கள் இறந்து கிடக்கக்
காணப்பட்டனர்.
சுதுமலை, உரும்பராடீநு, கொக்குவில் ஆகிய பகுதி
களில் ஏராளமான பெண்கள் இந்தியப் படையின
ரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக்
கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய 13 பெண்கள்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம் பொத்துவிலில் பேச்சு
வார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளின்
அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரை ஒரு
கோயிலுக்கு அழைத்த இந்திய அமைதி காக்கும்
படையினர் அவரைக் கைது செடீநுது கொண்டு
சென்று விட்டனர்.
13.10.87
இன்று யாடிந கோட்டை இராணுவ முகாமி
லிருந்து ஏவப்பட்ட மோட்டார் செல்கள் விழுந்து
வெடித்ததனால் யாடிந போதனா வைத்திய சாலையில்
3 இடங்கள் பெரும் சேதமுற்றன. கூரைகள் உடைந்து
மருந்துப் பொருட்களும் பெருமளவில் சேதமுற்றன.
மருத்துவமனை வீதியிலுள்ள மாதா கோயில் வளவில்
பாதிரியார் தங்கும் விடுதியும் செல் விழுந்து சேத
முற்றது. யாடிந நகரில் பரவலாகப் பல இடங்களிலும்
செல் விழுந்து வெடித்ததனால் ஏராளமான பொது
மக்கள் கொல்லப்பட்டனர். வீதிகளில் மக்கள்
நடமாட்டம் இல்லை.
அதிகாலையிலேயே தேடுதல் வேட்டை என்ற
பெயரில் வீடுவீடாகச் சென்ற இந்திய அமைதி
காக்கும் படையினர் குழந்தை, சிறுவர், முதியோர்,
பெண்கள் என்று பாராமல் 60 அப்பாவிப் பொது
மக்களைக் கொன்று குவித்தனர். வீடுகள், வீதிகள்
எனக் காணும் இடமெங்கும் பிணங்களே
தென்பட்டன. வீதிகளில் கிடந்த பிணங்கள்
அனேகமாக எல்லாமே இராணுவ வாகனங்களினால்
நசுக்கப்பட்டுச் சிதைவுற்றுக் காணப்பட்டன.
14.10.87
இன்று திருகோணமலை மாவட்டம் சாம்பல்
தீவுப் பாலத்துக்கு அண்மையில் வைத்து விடுதலைப்
புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15
இந்திய அமைதி காக்கும் படையினர் பலியாயினர்.
உடுவிலில் 15 பெண்கள் இந்திய அமைதி காக்கும்
படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி
கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்களின்
அங்கங்கள் கடித்துக் குதறப்பட்டிருந்ததாகவும்,
உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் இருந்ததாகவும்
பின்னர் இவர்களது உடல்கள் செயின் பொருத்திய
கவச வாகனங்களில் கீடிந போடப்பட்டு நசுக்கப்
பட்டதனால் உடல்கள் ரொட்டி போலச் சிதைந்து
விட்டதாக இவற்றை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்த வெறிச் செயலைச் செடீநுத இந்திய அமைதி
காக்கும் படையினர் திரும்பிச் செல்கையில்
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்
தாக்குதலில் அவர்கள் சென்ற கவச வாகனம் முற்றாக
வெடித்துச் சிதறியது. அதில் சென்ற அனைவரும்
கொல்லப்பட்டனர்.
வடமராட்சியிலுள்ள தொண்டமானாறு
முகாமிலிருந்து யாக்கரைக்கு வந்த இந்திய அமைதி
காக்கும் படையினரின் டிரக் வண்டி ஒன்றுக்கு,
இராணுவ முகாமிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள
யாக்கரைப் பிள்ளையார் கோயிலுக்கருகில் வைத்து
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்
தாக்குதலில் வண்டியில் வந்த 8 இந்திய அமைதி
காக்கும் படையினரும் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான்
எனுமிடத்தில் வைத்து இந்திய அமைதி காக்கும்
படையினரை இடை மறித்து விடுதலைப் புலிகள்
நடத்திய தாக்குதலில் 3 இந்திய படையினர்
கொல்லப்பட்டனர். நால்வர் காயமடந்தனர்.
இந்திய இராணுவத்துக்கு உதவியாக குண்டுவீச்சு
விமானங்களும் கெலிகாப்டர்களும் டாங்குகளும்
வந்தன. ஏராளமான இந்தியப் படை வீரர்கள் யாடிந
முற்றுகைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு
வருகின்றனர். 14.10.87 அன்று மட்டும் நகரை நோக்கி
70 மோட்டார் செல்கள் இந்தியப் படையினரால்
ஏவப்பட்டன. குண்டு வீச்சு விமானங்களிலிருந்தும்
கெலிகாப்டர்களில் இருந்தும் 90 கலிபர், 50 கலிபர்
கனரக இயந்திரத் துப்பாக்கிகளினால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டன. விமானத்திலிருந்து குண்டு
களும் போடப்பட்டன.
14 ஆம் தேதி வரை 21 இந்திய அமைதி காக்கும்
படையினர் விடுதலைப் புலிகளால் கைது
செடீநுயப்பட்டனர். 40 எ°.எல்.ஆர். 20க்கும்
மேற்பட்ட எ°.எம்.ஜி, 2 ராக்கட் சோலஞ்சர், ஒரு
மோட்டார், 3 கவச வாகனங்கள் என்பவற்றையும்
இந்தியப் படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள்
கைப்பற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக