புதன், 16 மார்ச், 2011

Why grantham in writing Siranjeevi? : சிரஞ்ஜீவியின் மருமகனுக்கு எதிராக விசாரணை தொடக்கம்


கிரந்தத் திணிப்பு  ஏன்? சிரஞ்சீவி என எழுதாமல் சிரஞ்ஜீவி என எழுதுவது ஏன்?  இதைத்தான் அப்பொழுதே குறிப்பிட்டோம். அப்படி எல்லாம் இல்லை என்றார்கள் கிரந்தக் காதலர்கள். தினமணி செய்தியாளர்களுக்குத் தக்க அறிவுரை வழங்கவும். தமிழ்க் கொலை புரிய வேண்டா.  வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /

சிரஞ்ஜீவியின் மருமகனுக்கு எதிராக விசாரணை தொடக்கம்


ஹைதராபாத், மார்ச்.16: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மருமகனுக்கு எதிரான வரதட்சணை புகார் குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் துணை கமிஷனர் சத்யநாராயணா தெரிவித்தார்.கணவர் ஷிரிஷ் பரத்வாஜூம் அவரது தாயார் சூர்யமணியும் கூடுதலாக ரூ 50 லட்சம் வரதட்சணை கேட்டு கடந்த 1 வருடமாக கொடுமைப்படுத்தி வந்தனர் என சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்திருந்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் இருவருக்கு எதிராகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா, தனது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக 2007-ல் ஷிரிஷை திருமணம் செய்துகொண்டார். தனது குடும்பத்தினரிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பின்னர் நீதிமன்றத்தை அணுகி இருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக