செவ்வாய், 1 ஜூன், 2010

டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் எடுக்கலாம்: விரைவில் அமலாகும்

புது தில்லி, மே 30: வங்கி டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.÷அதேபோல ரூ.1.25 லட்சம் வரை டெபிட் கார்ட் மூலம் கடைகளில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல ரூ.3 லட்சம் வரை பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு ஒரே நாளில் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.÷இதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிகள் பணியாற்றும் நேரத்திலேயே ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்கு ஓட வேண்டியுள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக ஜூன் 1-ம் தேதி முதல் நாளொன்றுக்கு டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் எடுக்கும் வசதியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.÷மேலும் ரூ.1.25 லட்சம் வரை கடைகளில் டெபிட் அட்டைகள் மூலம் ஷாப்பிங்கும் வாடிக்கையாளர்கள் செய்துகொள்ளலாம்.÷இந்த அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் கூடுதலாக பணம் எடுக்கும் வசதி ஜூன் 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
கருத்துக்கள்

கடன் அட்டையில் மிகுதியாகப் பணம் எடுக்கும் வாய்ப்பிருப்பினும் சேமிப்பு அட்டையில் இருப்பில் பணம் இருந்தும் எடுக்க முடியாத இன்னல் நீங்குகிறது. பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/1/2010 3:06:00 AM

While it may be good for customers allowing them with higher limits for purchases and cash withdrawals from ATM by Debit Cards - debit card assumes a significant importance from the angle of safety and protection. Otherwise, if DC gets lost, the customer run a risk of his card being used by unscrupulous eliements unless there is protection given by way of pw before useing DC at commerical places. Banker stand to gain by lesser disbursement activities in counter and can reordine manpower in bank.

By veeram
5/31/2010 11:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக