வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை: அரசின் நிலையைத் தெரிவிக்க ஆணை



சென்னை, ஏப். 29: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலையை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.வழக்கறிஞர் கருப்பன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக வழக்கறிஞர் கருப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெறுவதற்காக கடந்த 16-ம் தேதி இரவு மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், அவர் அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.முறையான விசாவோடு வந்த பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது சட்ட விரோதம். தனி விமானம் மூலம் அவரை சென்னைக்கு மீண்டும் அழைத்து வந்து சிகிச்சை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கோரினார்.நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, குடியுரிமை அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:பார்வதி அம்மாளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் 2003-ம் ஆண்டு கோரிக்கை வந்தது. அதனடிப்படையில், அவருக்கு இந்திய விசா வழங்கக் கூடாது என்று வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.ஆனால், கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு தவறுதலாக விசா வழங்கியுள்ளது. இந்தியாவுக்குள் நுழையும் எந்த வெளிநாட்டவரையும் திருப்பி அனுப்புவதற்கான அதிகாரம் இந்திய குடியுரிமை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே, பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று மனுவில் குடியுரிமைத் துறை தெரிவித்துள்ளது. பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன என்பதை அறிந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

இப்படியெல்லாம் கேட்டால் என்ன செய்வது? மத்திய அரசைக் ்காட்டிக் கொடுத்தால் தமிழக அரசு நிலைக்க முடியுமா? தமிழக அரசு உடந்தையாக இருந்ததைத்தான் ஒத்துக கொள்ள முடியுமா ? ஏற்னெவேதான் விரும்பினால் கேட்டால் கேட்டு முடியாது என்ற மறுமொழியைத் தெரிவிப்பதாகக் கூறியாயிற்றே! இதை விட வேறு வளா வளா கொளாகொளா விடை வேண்டுமா? சாமானியர்கள் ஆட்சி செய்வது மேட்டுக்குடி நீதிபதிகளுக்குப் பிடிக்கவில்லையா? எதிர்க்கட்சியாக இருந்தால் வீரமாக நடந்து கொள்வோம என்பதும் இல்லையேல் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடப்போம் என்பது்ம் இவர்களுக்குத் தெரியாதா என்ன? சரி! சரி! மாநாடு முடியும் வரையாவது வழக்கினை ஒத்தி வைக்கச் செய்வோம்.

(இலக்குவனார் திருவள்ளுவன்)

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 2:59:00 AM

§"$&/$&((//$/%$"///&%$§(/%/§///%%$§)(=/($$"§/=)((&%$§"&%&(%&(%/§$§"&%%§"&%%$$%$$§%$$§%$$$%$"%&&%"!$$/((%$§$%$§§/&%(/%&&§§"%%&$"%%&%%&%%$::...இது என்னடான்னு பாக்குறீங்களா !...தமிழ்நாடு அரசு சீலிடப் பட்ட கவருல நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கை !!! @ rajasji

By rajasji
4/30/2010 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக