maharastra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
maharastra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 நவம்பர், 2009

மராத்தியச் சீற்றம் மாண்புடையதே!



"போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்' என்று மராத்தியர்களின் வீரத்தைத் தூக்கிப் பிடிக்கிறான் பாரதி. இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்திலும் அதன் மீட்டெடுப்பிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கு உண்டு. சிவசேனையின் வரவுக்குப் பின்னர் மராத்திய இலக்கியங்கள் போற்றப்பட்டன. மராத்தியர் என்னும் இன உணர்வு வளர்க்கப்பட்டது. மராத்தி மொழி, மராத்திய வீரம், மராத்தியப் பண்பாடு என்று இவை இனங்கண்டு போற்றப்படுவதற்கு அவர்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது என்பது ஒரு சோகந்தான்! ÷இவ்வளவுக்கும் பெறற்கரிய மாவீரன் சிவாஜியைப் பெற்றவர்கள் அவர்கள், ஒரு பஞ்சு மிட்டாய் பெறுவதற்குக் கூட வெள்ளைக்காரனுக்கு மனுப்போட்டு மண்டியிட்டு நின்ற மிதவாதிகளிடமிருந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தை மீட்டு, அதற்கு வேகங்கொடுத்து அந்தப் போரை முன்னெடுத்துச் சென்ற மகான் திலகரைப் பெற்றவர்கள் அவர்கள்.மராத்தி மொழியில்தான் பதவி ஏற்பு உறுதிமொழியைப் படிக்க வேண்டும் என்று குட்டிச் சிவசேனா வீறு கொண்டு கிளம்பியது மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில். ஆனால் இந்தியில்தான் உறுதிமொழியை ஏற்பேன் என்று முலாயம்சிங் கட்சிக்காரர் வம்பு செய்தார். மராத்தியர்களின் வாக்குகளைப் பெற்று, மராத்தியர்களுக்குத் தொண்டு செய்வதற்காக, மகாராஷ்டிர சட்டமன்றத்துக்குள் நுழைகிறவன், தன்னுடைய தொண்டினை மராத்திய மொழியிலிருந்து தொடங்குவதுதானே நியாயம்! மராத்தி மொழி தெரியாதென்றால் "அதைக் கற்றுக் கொள்ள ஆறுமாதம் அவகாசம் கொடுங்கள்' என்று சொல்லியிருந்தால் ஒப்புக் கொண்டிருப்பார்களே! அதை விட்டுவிட்டு "இந்திதான் தேசிய மொழி; அதில்தான் உறுதி எடுப்பேன்' என்றால், இந்திமொழி ஆட்சி மொழியாக இருக்கும் உத்தரப் பிரதேசத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ போக வேண்டியதுதானே! மும்பையில் என்ன வேலை? ஆனால் சிவசேனைக்காரர்களிடம் உள்ள ஒரு மோசமான பழக்கம், ஒத்துவராதவர்களை உதைப்பது. இப்படிச் செய்வதால் கடைசியில் மராத்தி மொழி நியாயங்கள் மறக்கடிக்கப்பட்டு, வன்முறை குறித்த விவாதமும், வன்முறையாளர்களிடம் மக்களுக்குள்ள வெறுப்பும்தான் தலைதூக்கி நிற்கும். நியாயமான தாய்மொழிக் கொள்கை தோற்றுப் போகும் நிலை ஏற்படும். தாயையும், தாய்மொழியையும் போற்றச் செய்வதற்குக்கூட அடியாள்களின் பக்கபலம் வேண்டுமென்பது நினைக்கவே அருவருப்பானது. தமிழ்நாட்டில் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரை தமிழ் வளர்த்த யாரும் தாதாக்களுமில்லை; தாதாக்களின் துணையை நாடியவர்களுமில்லை. மேலும் பால்தாக்கரேயை விமர்சித்துவிட்டு, யாரும் தப்பிச் சென்றுவிட முடியாது என்று வெளிப்படையாக மிரட்டுவது, முற்ற முழுக்கச் சிவசேனையைத் தாதாக்களின் கூட்டமாகவே காட்டுகிறது. கடவுளும் காந்தியும்கூட விமர்சனத்துக்கு உள்பட்டவர்கள்தான் என்றால், பால்தாக்கரே எந்த மூலைக்கு? விமர்சனத்தை அனுமதித்துத் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளாத எந்தத் தலைவனும், தன்னுடைய செயல்களின் பாரம் தாங்காமல் ஒருநாள் முறிந்து போவான். நடந்து முடிந்த தேர்தலில் சிவசேனை வாங்கிய அடி கடுமையானதுதான். அதில் மனங்கலங்கிப் போன பால்தாக்கரே நாற்பது ஆண்டுகளாகத் தான் செய்த பணியை மறந்து நன்றி கொன்றுவிட்டார்களே என்று மராத்தியர்களை வசை பாடியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி பால்தாக்கரேயிடமிருந்து விலகி வந்த ராஜ் தாக்கரேக்கும், தமிழ்நாட்டில் விஜயகாந்துக்கும், ஆந்திரத்தில் சிரஞ்சீவிக்கும், தனித்தனியே நிற்பதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, வாக்குகளைச் சிதறடித்து, நாடாளுமன்றத்தில் ஐம்பது இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்றியது. சிவசேனை கட்டிக் காத்த மராத்திய உணர்வு தோற்றுவிட்டது என்பது சரியான மதிப்பீடு ஆகாது. அந்த உணர்வை முன்னெடுத்துச் செல்லும் வல்லமையும், தலைமைக் கூறுகளுமுடைய அண்ணன் மகன் ராஜ் தாக்கரேயை விரட்டி விட்டு, ஒரு திறமையுமில்லாத, சவசவத்த உப்புக்குச் சப்பாணியான தன் மகனைத் தலைவர் பதவிக்கு உயர்த்திய வாரிசு அரசியலுக்குப் பால்தாக்கரே கொடுத்த விலைதான் சிவசேனையின் சரிவு. இப்போது இந்தத் தள்ளாத வயதிலே அண்ணன் மகனோடு போட்டி அரசியல் நடத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். எவ்வளவு நாளைக்கு மகனைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பொத்திக் காக்க முடியும்? பொதுவாக ஒரு வெறுப்பின்மீது கட்டப்பட்டு, வெறுப்பின் மீதே வளர்க்கப்பட்ட கட்சி சிவசேனைக் கட்சி. அது குறுகிய காலத்துக்குப் பயனளிக்குமே ஒழிய, நீண்ட காலத்துக்கு உகந்த அரசியல் ஆகாது. தன்னினத்தை நேசிப்பது என்பது வேறு; மாற்றினங்களின் மீது வெறுப்பை உமிழ்வது என்பது வேறு. மராத்தியர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க வந்தவர்கள் என்று தொடக்ககாலத்தில் தமிழர்களைச் சிவசேனை அடித்து விரட்டியது. பெருந் தொழில்நகரமான மும்பைக்குத் தொழிற்சாலைகளிலும் தனித்தும் கூலி வேலை செய்ய வந்தவர்கள்தாமே தமிழர்கள். ஆசியாக் கண்டத்தின் அசிங்கமான பகுதி என்றும், ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் கொட்டில்கூட இன்னும் சுகாதாரமாக இருக்கும் என்று சொல்லத்தக்க அளவுக்குள்ள தாராவிச் சேரிதானே தமிழர்களின் வாழிடம். இதில் போட்டிக்கும் பொறாமைக்கும் என்ன வேலை? அவர்கள் சுரண்ட வந்தவர்கள் இல்லையே; சுரண்டப்பட்டு எலும்பும் தோலுமாய் ஆனவர்கள்தாமே. அண்ணாந்து பார்த்து வியக்கின் எழில் மிகுந்த மும்பையை உருவாக்கும் முயற்சியில் எழில் குலைந்து போனவர்கள்தாமே. உனக்கு வெளி முதலீடு வேண்டும்; அந்த முதலீட்டைக் கொண்டு வருபவன் எந்த இனமாகவும், எந்த நாடாகவும் இருக்கலாம். சுரண்டுபவனிடம் உனக்கு இனப் பகை இல்லை; சுரண்டப்படுபவனிடம் இனப் பகை கொள்கிறாய். மாற்று இன முதலாளிகளையும் வெளியேறச் சொல்ல வேண்டியதுதானே. இப்போது தமிழர்களை விட்டுவிட்டார்கள்; ஏழைப் பிகாரிகளின் மீது பாயத் தொடங்கியிருக்கிறார்கள். பாகுபடுத்தி அறியத் தெரியாத சிவசேனையின் குருட்டுத்தனமான இனப் போற்றுதலில் ஒரு குற்றமுண்டு. ஏராளமான புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான மராத்திப் பெண்மணியான பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி தர்மத்தை உடைத்துக் கொண்டு போய் ஆதரித்தார்கள். தவறானவர்களால் நாடு கெடுவது ஒருபுறமிருக்கட்டும்; உங்கள் இனமாவது வாழுமா? பால்தாக்கரேயை இடத்தில் வைத்தால் கருணாநிதியை வலத்தில் வைக்க வேண்டும். இருவருமே ஒரே மாதிரியான கோணல் சிந்தனையாளர்கள். ஆ. ராசா ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துவிட்டாரே என்னும்போதும், உயர் நீதிமன்ற நீதிபதி தினகரன் அரசு நிலத்தை வளைத்துக் கொண்டு விட்டாரே என்னும்போதும், அவர்களெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் மேல்ஜாதியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லி அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு இயந்திரத்தை வேறு பயன்படுத்துவார் கருணாநிதி. கருணாநிதி, பால்தாக்கரேக்கெல்லாம் தடித்த நாக்கு; எதையும் பேசுவார்கள். நல்லவன் தன் இனத்துக்கும் மாற்றானுக்கும்கூட நன்மையே செய்வான். கெட்டவன் மாற்றானுக்கு மட்டுமில்லை; தன் இனத்துக்கும் கூடக் கேடே செய்வான். இப்போது சச்சின் டெண்டுல்கர் இன உணர்வுக் கொள்கைக்கு எதிராகக் கொம்பு சீவி விடப்பட்டுள்ளார். ""நான் முதலில் இந்தியன்; இரண்டாவதாகத்தான் மும்பைக்காரன்; மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம்'' இது டெண்டுல்கரின் ஞானமொழி! ஒருகாலத்தில் மும்பைக்குக் குஜராத்திகள் சொந்தங் கொண்டாடினார்கள். அப்போது மும்பையை மீட்பதற்குத் தன்னுடைய ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காத டெண்டுல்கர், இப்போது மும்பையை இந்தியாவுக்குத் தானம் வழங்குகின்ற ஞானகுருவாக மாறிவிட்டார்.÷ஆனால் டெண்டுல்கரின் முதிர்ச்சியற்ற இயற்கை அல்லாத பேச்சு நேர்மையே வடிவான பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் பிகாரிகளைப் போட்டுச் சிவசேனை குதறி எடுத்ததுதான். பால்தாக்கரே போன்ற முறையற்ற வழிமுறைகளைக் கையாளுவோரால், நியாயமான மொழி வழி இனக் கொள்கை கூடச் சிக்கலுக்குள்ளாகிறது.÷ ஒருகாலத்தில் "மதராஸ் மனதே' என்று தெலுங்கர்கள் சென்னைக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அப்போது கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அன்றைய முதலமைச்சர் ராஜாஜி, மத்திய அமைச்சரவையில் அமைச்சராவதற்குத் தனக்கொரு மகன் நரசிம்மன் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்குத் தனக்கொரு மகள் நாமகிரி இருந்தும், தெலுங்கர்களின் மாபெரும் கிளர்ச்சிகளுக்கிடையே, தன்னுடைய நிகரற்ற செல்வாக்கை தில்லியிலே செலுத்திச் சென்னையை மீட்டுத் தந்தார். ராஜாஜி இல்லாவிட்டால் சென்னைதான் எங்கே? ÷மும்பை இந்தியாவுக்குச் சொந்தம் என்று ஒரு மராத்தியன் டெண்டுல்கரே சொல்கிறான் என்றால் பால்தாக்கரே கொதித்தெழ மாட்டாரா?÷மும்பை இந்தியாவுக்குச் சொந்தம் என்று டெண்டுல்கர் சொன்னவுடன் மகாராஷ்டிர காங்கிரஸ் முதலமைச்சரும் கைதட்டுகிறார். ஏதாவது புரிந்துதான் கைதட்டுகிறாரா?÷உலகம் யாவையும் தாம் உளவாக்கி, பின்பு அவற்றை நீக்கி, தான் மட்டும் நீங்காமல், எல்லையிலா விளையாட்டுக்குடையவனாகத் திகழ்கிறானே எம்பெருமான், அவனுக்குத் தானமாகக் கொடுப்பதற்கு வள்ளல் மாபலிக்குச் சொந்தமாக இரண்டடி மண் இருந்தது.÷இந்தியாவுக்குச் சொந்தமாக அந்த இரண்டடி மண்ணையாவது டெண்டுல்கர் காட்டட்டுமே. எல்லா மண்ணும் மொழிவழி இனங்களுக்குத்தானே சொந்தம்.÷இந்தியா சீனாபோல் ஒரே மொழி; ஒரே இனம் என்னும் அமைப்புடைய நாடில்லை. இந்தியத் தாய்க்குப் பதினெட்டு நாக்குகள்; இருநூறு கோடி கைகள்!÷பந்தடிக்கிறவன் பந்துதான் அடிக்க வேண்டும்; பாரதி போல் ஞானம் புகலக் கூடாது.÷பாரதி வரிசைப்படுத்துவான்: ""வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு''.÷மொழிவழி இனங்களை எம்மான் காந்தி இனங்கண்டு உடன்பட்டதால்தான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. அவற்றிற்கான அரசுகளும் பிறந்தன.÷சிவசேனையின் வெறுப்பு அடிப்படையிலான மூர்க்கப் போக்குகள் நல்ல கொள்கைகளையும், நிலைகொள்ள விடாமல் செய்து விடுகின்றன என்றாலும் பால்தாக்கரேயின் மராத்தியச் சீற்றம் மாண்புடையதே!
கருத்துக்கள்

எல்லா மண்ணும் மொழிவழி இனங்களுக்குத்தானே சொந்தம் என்று உண்மையை உரைத்துள்ள பழ.கருப்பையா அவர்களுக்குப் பாராட்டுகள். தாயத்தேசிய இனங்களுக்ககாகக் குரல் கொடுத்து தடியடி அரசியலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள பாங்கு பாராட்டிற்குரியது.ஒரு பஞ்சு மிட்டாய் பெறுவதற்குக் கூட வெள்ளைக்காரனுக்கு மனுப்போட்டு மண்டியிட்டு என்றெல்லாம் பழ.கருப்பையா அவர்களாலதான் எழுத முடியும். அன்றைக்கு வெள்ளைக் காரனுக்கு மனு போட்டாரகள். இன்றைக்குக் காங்கிரசு கொள்ளைக்காரனுக்கு மனு போடுகிறார்கள். அதுதான் வேறுபாடு. அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/25/2009 3:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 10 நவம்பர், 2009

இந்தியில் பதவிப் பிரமாணம்: மகாராஷட்டிர பேரவையில் எம்.எல்.ஏ.க்கு அடி, உதை



மும்பை, நவ. 9: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சமாஜவாதி கட்சி எம்.எல்.ஏ. ஆஸ்மி கடுமையாக தாக்கப்பட்டார்.
ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியினர் இந்தத் தாக்குதலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலை தடுக்க முயன்ற பெண் எம்.எல்.ஏ. மீனாட்சி பாட்டீல் உள்பட பல்வேறு கட்சியினரையும் எம்என்எஸ் உறுப்பினர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இத் தாக்குதலில் ஈடுபட்ட எம்என்எஸ் உறுப்பினர்கள் சிசிர் ஷிண்டே, ராம் கடம், ரமேஷ் வாஞ்சலே, வசந்த் கீதே ஆகிய 4 பேரும் 4 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மராத்தியில் மட்டுமே பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்று கூறி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த இந்த அடிதடி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மராத்தி மொழியில் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேறு மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியது. முதல் நாளில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றனர்.
உறுப்பினர்கள் அனைவரும் மராத்தியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஆனால் சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு அசிம் ஆஸ்மி மட்டும் ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இதற்கு மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியினர் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். நவநிர்மாண் கட்சி எம்.எல்.ஏ. ரமேஷ் வாஞ்சலே பதவிப் பிரமாண மேடையை நோக்கி ஆவேசமாக பாய்ந்து சென்று ஆஸ்மி பேசிய மைக்கை பறித்து கீழே வீசி எறிந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் ஆஸ்மியை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்தனர். ஆனால், பிற கட்சி உறுப்பினர்கள் அதைத் தடுக்க முயன்றனர். அப்போது கைகலப்பு ஏற்பட்டது. ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த ஆஸ்மியை சுற்றிவளைத்து நவநிர்மாண் உறுப்பினர்கள் தாக்கினர்.
இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அந்தவேளையில் மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி உறுப்பினர் ராம் கடம், சமாஜவாதி உறுப்பினர் ஆஸ்மியின் மார்பிலும் தோள்பகுதியிலும் கடுமையாகத் தாக்கினார். இதனால் அமளி உச்சகட்டத்தை அடைந்தது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் 30 நிமிஷங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை கூடியதும், தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் பாஜக - சிவசேனை கூட்டணி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இந்த தீர்மானத்தின்படி தாக்குதலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் இனி 4 ஆண்டுகள் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது.
முதல்வர் கண்டனம்: இந்த தாக்குதலை மாநில முதல்வர் அசோக் சவாண் கடுமையாகக் கண்டித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இதுபோன்று மோசமான சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. வன்முறைக்கும் ரெüடியிஸத்துக்கும் இங்கு இடமில்லை என்று அவர் கூறினார்.

கருத்துக்கள்

ஆட்சி அதிகாரம் கிடைக்காமல் போனதால் அடிதடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தவறுதான். ஆனால் இதற்கு மூல காரணமான சமாசுவாடி சமஉ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றும் பேசாமல் இந்தியில் பேசியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் இந்தி தேசிய மொழி எனவே அம்மொழியில் உறுதிமொழி எடுப்பதாகத் தவறான தகவலை ஆணவத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய அரசிய லமைப்புச்சட்டததின்படி மராத்தி, வங்காளம்,தமிழ் முதலான மாநில மொழிகள் எல்லாம் தேசிய மொழிகள்தாம். அவ்வாறிருக்க மராட்டிய சட்ட மன்றததில் மராத்தி மொழியை அவமதிக்கும் வகையில் இந்திதான் தேசிய மொழி எனத் தன் கட்சியின் இந்தி வெறியை வெளிப்படுத்தி சட்டமன்றத்தில் வன்முறை நடக்க வேண்டம் எனத் திட்டமிட்டுக் காரணமாக இருந்த ஆசுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.ந.சே. கட்சயினர் வன்முறையைக் கைவிட்டு தாய்மொழி உணர்வை வளர்க்க வேண்டுமேயன்றி இவ்வாறு நடந்து கொள்வது தவறு. எனவே, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சரிதான். இருப்பினும் இதன் மூலம் இந்தி மட்டுமே தேசிய மொழி எனக் கிணற்றுத் தவளையாகக் கத்தும் கும்பல்களுக்கு அறிவு வந்தால் மகிழ்ச்சி.

By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2009 10:20:00 AM

Marathis also, like tamils, against Imposition of Hindi language and culture. Hindi has not conferred with the National Language status by the constitution of India. Because of Hindi invasion, Marathi language and culture is in a stage of slow extinct. That should not happen to other Languages also. Only 30% people wants to dominate rest 70% people, that is too bad. Social eveis like, Dowry., Ragging and Eve Teasing are the worst legend of Hindi Speaking People. They are not ready to learn Non Hindi Languages. We are not secondary citizen or slaves to this pyjama,kurtha idiots.

By Thamizhan
11/10/2009 10:18:00 AM

Dear Editor Sir Just by opposing the Imposition of Hindi, Tamil Nadu has got a bad name. Now for the atrocious act of a legilator slapping a fellow legislator for being sworn in Hindi I am waiting to hear from the Tamil speaking Hindi fanatics. Thanks

By Iniyan P
11/10/2009 4:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இந்தியில் பதவிப் பிரமாணம்:
மகாராஷ்டிர எம்எல்ஏ மீது தாக்குதல்



மும்பை, நவ.9: இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்த சமாஜவாதிக் கட்சி எம்எல்ஏ அபு ஆஜ்மியை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை எம்எல்ஏக்கள் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியதால் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.புதிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று, அபு ஆஜ்மி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுக்கத் தொடங்கியதும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேஜை மீதிருந்த மைக்ரோஃபோனும் பிடுங்கி வீசப்பட்டது.அபு ஆஜ்மி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தபோது, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை எம்எல்ஏக்கள் அவரை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் 288 உறுப்பினர்களை உடைய மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அதிர்ச்சியும் பரபரப்பும் காணப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை எம்எல்ஏக்கள் நான்கு பேர் சட்டப்பேரவையிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு இடைநீக்கப்பட்டுள்ளனர்.அபு ஆஜ்மி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு சமாஜவாதிக் கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

சரவணன் அவர்களே! தமிழ்நாட்டின் அடிமைத்தனத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லையே! தெலுங்கிலேயே சட்ட மன்றத்தில் பேசிவிட்டுத் தெலுங்கர் சங்கத்தில் அதைப் பெருமையாகவும் அந்தச் சட்ட மன்ற உறுப்பினர் பேசியுள்ளார். கட்சித் தலைவர் சரி என்றால் இந்தியில் பேசினாலும் உறுதி மொழி எடுத்தாலும் எதிர்க்காத கொத்தடிமை அரசியல் வாதிகளைக் கொண்டதுதான் தமிழக அரசியல். இங்கே மொழிப்பற்று என்பது தான் பதவி நலத்தைத் துய்க்க வேண்டும் என்பதற்காகப் பிறரிடம் எதிர்பார்க்கப்படும் ஒன்றே தவிர ஆளுங்கட்சிகளுக்கு வேண்டப்படாத ஒன்று. சொல் ஒன்றும் செயல் ஒன்றும்தான் இவர்களின் வாழ்க்கை முறை. சட்ட மன்ற வரலாற்றைப் படித்துப் பாருங்கள். எத்தனை பேர் பிற மொழிகளில் பேசி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எனவே, தமிழக அரசியல்வாதிகளின் போலி மொழிப்பற்றைப் பெருமையாகக் கருதாதீர்கள்! தமிழ்நாட்டில் தமிழே இல்லாமல் போவதற்குக் காரணமான கடைந்தெடுத்த கயவர்கள் குறித்து உயர்வாக எண்ணலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2009 2:47:00 AM

அபு ஆஸ்மி ஒரு முஸ்லிம் என்பதால் சிவஸனா அயோக்கிய பொறுக்கிகளின் வேலை தான் இந்த சட்ட மன்ற பயங்கர வாதம். மத வெறி பிடித்த பொறுக்கி ஓநாய்கள் இருக்கும் வரை இந்த நாடு எங்கே முன்னேற போகிறது?

By Abu,dubai,u.a.e.
11/10/2009 1:20:00 AM

தமிழ் தளங்களில் தமிழில் கருத்தை பதிவு செய்யுங்கள் அன்பர்களே. இங்கு சில இந்தி வெறியர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைப் படித்து விட்டு காந்தி, பூந்தி என்று பிதற்றுகிறார்கள்.

By மாறன்
11/10/2009 1:17:00 AM

there are 15 national languages, is there any fault in hindi speaking people learning, another indian language. Reason for choosing hindi as national language is by head counts, if that is the case crow should be our national bird. MNS should have reacted in better way, but their sentiments should be respected as well.

By raj
11/9/2009 11:43:00 PM

Their Aim is Nobel but their method is barbaric. All the national languages should be made official, if they want india to remain in one union. Otherwise it will disintegrate like their former ally USSR. It is only a matter of time. No righteous person will allow his / her language to be extint at the expense of other major language.

By Raja
11/9/2009 11:43:00 PM

in the name of upper caste & hindi, indian govt is spoiling the many old heritages, hindi is not a original language, it was born from Persian, Arabic and Indian local languages. Hindi is not our Native Indian language, It is from Indo-European family. we have many native languages to apprise it.

By kundru
11/9/2009 11:10:00 PM

இவர்கள் சொல்ல வந்த செய்தி சரிதான், மகாராஷ்டிராவில் என்ன பிரெஞ்சு லா பதவி பிரமாணம் எடுக்க வேண்டும். ஆனால் சொன்ன விதம் தான் தவறு. இல்லை என்றால் இந்தியா முழுக்க ஹிந்தி என்று மாற்றிவிடுவார்கள்.

By kundru
11/9/2009 11:03:00 PM

Raj Thakkray should be hanged in maharashta. Then only bright future for mharashtrans. Bastard you loose the election still playing political game.If you come to tamilnadu kick you ass bastard.

By selva
11/9/2009 10:27:00 PM

Raj Thakkray should be hanged in maharashta. Then only bright future for mharashtrans. Bastard you loose the election still playing political game.If you come to tamilnadu kick you ass bastard.

By selva
11/9/2009 10:26:00 PM

Raj Thakkray should be hanged in maharashta. Then only bright future for mharashtrans. Bastard you loose the election still playing political game.If you come to tamilnadu kick you ass bastard.

By selva
11/9/2009 10:26:00 PM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/9/2009 9:58:00 PM

The respect DMK, ADMK and all Dravidian parties deserve for opposing Hindi, the same yardstick for MNS.

By keeran
11/9/2009 9:51:00 PM

IT IS A WISE THING THAT THE MAHARASTRA ASSEMBLY HAD PASSED UNITEDLY A RESOLUTION BAAARING THE GOOONDA M L A'S IN APPEARING THE ASSEMBLY FOR 4 YEARS!!!! GOVT.SHOULD BAN RAJ THAKREY'S PARTY.

By L.C.NATHAN
11/9/2009 9:48:00 PM

IT IS A WISE THING THAT THE MAHARASTRA ASSEMBLY HAD PASSED UNITEDLY A RESOLUTION BAAARING THE GOOONDA M L A'S IN APPEARING THE ASSEMBLY FOR 4 YEARS!!!! GOVT.SHOULD BAN RAJ THAKREY'S PARTY.

By L.C.NATHAN
11/9/2009 9:45:00 PM

பிராமண சமூகத்தினர் தான் செய்யும் கேவலமான செயல்களுக்கு எல்லாம் பின்பட்டு பாடுவார்களே அன்றி தவறை ஒத்துக்கொண்டு திருந்தமாட்டார்கள். இங்கே பல பிராமணர்கள் இந்த ஈன ஈத்தர செயலை பூசி மொழுகி நியாயப்படுத்துகிறார்கள். காந்தியை கொன்ற பாபர் மசூதியை இடித்த குஜராத்தில் ரத்தவெறியாட்டம் நடத்திய இந்த இந்துத்துவா பயங்கரவாதிகளிடம் இதுவன்றி வேறென்ன எதிர்பார்க்க முடியும்??

By Vivekananthan
11/9/2009 9:24:00 PM

Whatever the religion, caste.. the elected members and the people of the state should respect their state and language. But some muslims don't do this in the name of religion. Previously Sivasena appreciated Rajinikant's stand on river water issue, supporting Tamilnadu.

By keeran
11/9/2009 9:19:00 PM

இங்கே பின்னூட்டமிட்டிருக்கும் இஸ்லாமிய அன்புச் சகோதரர்கள் சிவசேனா மற்றும் தாக்கரேக்கள் மீது கொண்டிருக்கும் கோபம் இயல்பானதே. ஆனால் அந்தக் கோபம் (அல்லது மத துவேஷம்?) அவர்கள் கண்ணை மறைத்து எந்த பொருளில் இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது என்பதையே அவர்கள் உணராதவண்ணம் செய்துள்ளது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தமிழ் நாட்டில் ஒரு அமைச்சர்... அட இந்தி கூட வேண்டாம்...பக்கத்தில் இருக்கும் கன்னடத்திலோ, மலையாளத்திலோ பதவிப் பிரமாணம் எடுத்தால் என்ன ஆகும்? அடிப்பதும் உடைப்பதும் அரசியல்வாதிகளின் பிறவிக் குணம். இதற்கு சாதி, மத, இனப் பாகுபாடு கிடையாது. எல்லோரும் ஓர் நிறை.

By சரவணன், சென்னை
11/9/2009 8:26:00 PM

INDIA'S COMMERCIAL CAPITAL MUMBAI AND IT BELONGS TO ALL INDIANS.BAL AND RAJ THACKRAYS ARE PATRIOTS TO BENGALI SONG BUT NOT PATRIOT TO NATIONA LANUAGE AND THEIR AIMS TO ALL INDIANS MUST LEVE FROM MUMBAI WHAT A SURPRISE NATIONALIST?

By IBRAHIM/SAUDI ARABIA
11/9/2009 7:48:00 PM

Instead of considering what is good or bad one. If you start to consider what is nature of human at given circumstance, it is early warning to systematic approach we used so far it. I predict this kind of approach will be common and usual one on developed state which have more moving population.

By R Shanmoogam
11/9/2009 6:52:00 PM

Nothing wrong to take oath in Hindhi which is national language in India. Mamona Sing, Chithambaram, Prnab Mugargee, Katrunanithi and all Kerala politicians have learnt Hindhi for update their possitions in Govenrment and private secters; so, Why people oppose the Hindhi that is a Holy and official language in Holy India which is free from British Empire.

By Narayanan
11/9/2009 6:48:00 PM

பதிவு செய்தவர்: அபூ அப்துல் ரஹ்மான் பதிவு செய்தது: 09 Nov 2009 6:17 pm நம் இந்திய திரு நாட்டில் பொறுக்கிகளும் ரவ்டிகளும் ஆளும் நாட்டில் சட்ட சபையிலும் ரவ்டிஸத்தை ஆரம்பித்து விட்டார்கள் சிவசேனா மதவெறி சாதிவெறி மொழி வெறி பித்தித்தஅயோக்கிய கும்பல்

By AbooAbdulRahmaan
11/9/2009 6:26:00 PM

This is the land from which Tilak and Vir Savarkar were born. umpen elements are taking over and the present congress party encourages such goondas. Shame.

By S Raj
11/9/2009 5:05:00 PM

What else you can expect from MLAs who have been elected from a party with a founding principles of violence,looting and killings.These Maharashtrians must be ashamed to have elected such thugs as MLAs who perpetrate viilance even inside the Assembly. What would be the approach of these MLAs outside assembly with the people who have elected them.Long live this kind of democracy which benefits only thugs,hooligans and pertpetrators of violence.

By nagarajan
11/9/2009 4:58:00 PM

marathis are extremist who killed gandhi.MOST OF THE MARATHIS ARE RSS ACTIVIST. RASCAL, BASTARD.

By abyn
11/9/2009 4:37:00 PM

oonaai paltakreoonaai paltakreoonaai paltakreoonaai paltakreoonaai paltakre

By Indian
11/9/2009 3:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *