ஞாயிறு, 19 மார்ச், 2017

ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு!

ஓவியர் புகழேந்தியின்  ‘நானும் எனது நிறமும்
தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு!
  தமிழீழ ஆதரவு – தமிழர் உரிமை ஆதரவு – மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி  எழுதியுள்ள ‘நானும் எனது நிறமும்’ – தன்வரலாற்று நூல்,  மாசி 28, 2048 / 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
  சென்னை எம்ஞ்சியார். நகர் மகா அரங்கில்,  நடைபெற்ற இவ்விழாவுக்குத்  தமிழீழ உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்  தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் திரு. தஞ்சை இராமமூர்த்தி,  தோழமை வெளியீடு திரு. கு. பூபதி  முதலானோர் முன்னிலை வகித்தனர்.
  எழுத்தாளர் திலகவதி இ.கா.ப., நூலை வெளியிடத், தமிழின உணர்வாளர் திரு. வி.கே.டி. பாலன் நூலைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார். தொழில் முனைவர் திரு. சா. பெருமாள், புலவர் இரத்தினவேல், தொழில் முனைவர் திரு. சு. இராமச்சந்திரன் ஆகியோர் நூல்படி பெற்றனர்.
  எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன், இயக்குநர் மு. களஞ்சியம், கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் கருத்துரைவழங்கினர். நிறைவில், நூலாசிரியர் ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
 நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
விரைவில், தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக