புதன், 4 ஜூன், 2014

பாராட்டிற்குரிய மராத்தியத் திங்களிதழ் தமிழ் இலெமூரியா

பாராட்டிற்குரிய மராத்தியத் திங்களிதழ் தமிழ் இலெமூரியா

thamizh_lemuriya_muththirai01
தமிழ் இலெமூரியா – இந்தியாவில் தாய்த் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் ஒரு சிறப்பான மாத இதழாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக,
 தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே பயணிக்கும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்று துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
  தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில் தமிழ், தமிழர் குமுகாய வளர்ச்சி இலக்கை அடைவதற்குரிய அரிய ஆய்வுகள், வரலாற்று நிகழ்வுகள், இயற்கையை போற்றுதலுக்குரிய நம் கடமைகள் போன்றவை இதன் உள்ளீடுகளாக அமைந்துள்ளன.
‘’ முதன்மைச் செய்திகள்  |   தலையங்கம்  |   சிறப்புக் கட்டுரை  |   கட்டுரைகள்  |   சிறுகதை  |   உலகை அறிவோம்  |   மருத்துவம் கவிதைகள்  |   நூலோசை  |   மடலோசை  |   அறிந்து கொள்வோம்  |   மும்பைச் செய்தி  |   தாயகத்திலிருந்து  |   நிகழ்வுகள்’’  எனப்பல்வேறு தலைப்புகளில்  படைப்புகள் வருகின்றன.
கடந்த நாற்பது ஆண்டுகாலமாக தமிழ், தமிழர் மேன்மைக்காக மும்பை மாநகரில் தொய்வின்றி சமூகப் பணி ஆற்றி வரும் திரு சு.குமணராசன் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று வழி நடத்துகின்றார்.
திரு சு.குமணராசா தமிழ்ச்சிந்தனையாளர், தமிழ்த்தொண்டர், தமிழ்நெறி பரப்புநர் எனப்புகழ் பெற்றவர்.
 thamizh_lemuriya_su.kumanarasan01
கடற்பொறியியல், பொருளியல், அரசியல், சுற்றுச்சூழலியல், ஒளிப்படக்கலை, பாதுகாப்புத்துறை, தரச் சான்று ஆகியவற்றில்  தேர்ச்சி பெற்றவர். எனவே, தான் பெற்ற கல்வி கொண்டு இதழைச் சிறப்பாக நடத்தி வருகிறார்.
கப்பல்-கடல்சார் நிறுவனம் ஒன்றின் மூத்த மேலாளராக இருப்பதுடன், பல்வேறு பொறுப்புகளின் மூலம் மக்கள்தொண்டாற்றி வருபவர். முப்பதுக்கும்மேற்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு, பட்டறிவை விரிவாக்கிக் கொண்டும் சென்றவிடங்களிலெல்லாம் தேமதுரத் தமிழோசை பரப்பியும் தொண்டாற்றி வருபவர்.  பார்வையின் நிழல்கள், மனக்குரல்
உலகை அறிவோம் முதலான சில நூல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் படைத்தவர்.
தமிழ் நேயர் [(2006)துபாய்]
சுயமரியாதைச் சுடர் [(2004)மும்பை]
தமிழ்மாமணி [(2009)கோவா] முதலான விருதுகள் இவருக்கு வழங்கப்பெற்றுள்ளன.
இவரின் தமிழார்வமும்  பணித்திறனும் தமிழ் இலெமூரியா இதழ், சிறப்பாக மணம் வீச உதவுகிறது என்பதில் ஐயமில்லை.
இந்திய நாட்டில் குறிப்பாக, தமிழ்நாடு, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், தமிழர்கள் பெருமளவில் வாழும் மத்திய தரைக் கடல் நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களை தன்வயப்படுத்தி சற்றொப்ப மூன்று இலக்கம் தமிழ் ஆர்வலர்களை வாசகர்களாகக் கொண்டுள்ள இதழாகும்.
பல்கலைக் கழக நூலகங்கள், கல்விக் கூட நூலகங்கள், அரசு பொது நூலகங்கள் என அனைத்து இடங்களில் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்ற ஓர் சீரிதழ் என்பது இதன் பெருமையின் அடையாளம் ஆகும்.
இணக்கமான இந்த சீரிய கூட்டுணர்வு முயற்சியில் பங்கேற்று மனித நேய மாண்புகள் பெருகிடவும், தமிழினம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் துணை நிற்க விரும்புவோர்  விரும்பும் வகையில் கட்டணம் செலுத்தி  ஊக்கப்படுத்தலாம்.
தமிழ் இலெமூரியா கட்டணம்:
ஆண்டு உறுப்பாண்மை: 180 உரூபா
மூன்று ஆண்டு : 500 உரூபா
வாழ்நாள் கட்டணம்: 5000 உரூபா
புரவலர் கட்டணம்: 10,000 உரூபா
தொடர்புக்கு:
தமிழ் இலெமூரியா வெளியீடுகள்
102 ஆ, சிறகம், தேன்சு கட்டடம், வீர சவர்க்கார்நகர், தானே(மே), மகாராட்டிரம் 400 606, இந்தியா
பேசி  022 – 25806298
[Tamil Lemuriya Publications
102 B Wing, Dannes Building,
Veer Savarkar Nagar, Thane (W),
Maharashtra – 400 606, India
Phone: 022 - 2580 6298]
 
மின்வரி: tamil.lemuriya@gmail.com
 
இணையப்பக்கம்: http://www.tamillemuriya.com/


- அகரமுதல இதழ் 29

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக