ஞாயிறு, 19 மே, 2013

புதன், வியாழன், வெள்ளி : 28 அன்று ஒரே நேர்க்கோட்டில் காணலாம்

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3  கோள்களையும் 28 அன்று ஒரே நேர்க்கோட்டில் காணலாம்

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களையும் 28-ம் தேதி ஒரே நேர்க்கோட்டில் காணலாம்
வாசிங்டன், மே 19-

புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம்.

பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும்.

வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும்.

பூமியில் இருந்து புதன் கிரகத்தை சென்றடைய 38 மில்லியன் கி.மீட்டர் பயணிக்க வேண்டும்.

புதன் கிரகத்தில் இருந்து வியாழன் 660 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. வியாழன் இருந்து வெள்ளி 744 மில்லியன் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இவை மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் காணும் அபூர்வ வாய்ப்பு வரும் 28-ம் தேதி நமக்கு கிடைக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக