அறியாமையா? மக்களைத் திசை திருப்பப் பேசுகிறாரா? எனத் தெரியவி்ல்லை. ஏதோ, இந்தியப் படை தமிழக மீனவர்கள் நலனில் கருத்து செலுத்துவது போலும் இலங்கைக் கடற்படைதான் இந்தியப்படை இன்மையால், மீனவர்களைக் கொன்று குவிப்பது போலும் கூறுகிறார். இந்தியப் படை மூலமே ஈழத்தில் இன அழிவு நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இந்தியக் கடற்படையே நேரடியாக மீனவர்களை அழிப்பதற்கு இது துணை புரியும். எனவேதான், கூட்டுக்காவல் சுற்றுகூடத் தேவையில்லை என மனித நேய ஆர்வலர்கள் தெரிவித்தனர். தமிழக அரசு கடலோரக் காவல் அணியை அமைத்து அதன் மூலம் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முன்வந்தால் தமிழக மீனவர்கள் காப்பாற்றப்படுவார்கள். இவ்வாறு அறிவித்தாலே தமிழக அரசு மத்திய அதிகாரத்தில் குறுக்கிடுவதாகக் கூக்குரலிட்டுத் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வார்கள. உண்மையிலேயே காவல் அணியைத் தமிழக அரசு அமைத்தால் மீனவர்கள் துயரங்கள் குறையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
இராமேசுவரத்தில் இசுடாலின் பேச்சு

இலங்கை ராணுவம், தொடர்ந்து தமிழக மீனவர்களை
தாக்கும் அவலத்தை, மத்திய அரசுக்கு உணர்த்திடும் வகையில், நேற்று
ராமேஸ்வரத்தில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை
வகித்து ஸ்டாலின் பேசியதாவது: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை
தாக்கி, மீன்களை கொள்ளையடித்து, வலைகளை சேதப்படுத்தும் சம்பவம் தொடர்
கதையாக உள்ளது. தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி, பிரதமர் மன்மோன்சிங்,
சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். மத்திய அரசும், இலங்கை அரசிடம்
பேச்சு நடத்தியது, ஆனால், மீனவர் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
1991-2011ல் இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது, 167 முறை தாக்கியதில்,
85 மீனவர்கள் இறந்தனர். 146 படகுகள் பறிமுதல் செய்தும், 746 மீனவர்கள்
கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இலங்கை ராணுவத்திடம் இருந்து,
மீனவர்களை பாதுகாக்க, கச்சச்தீவை மீட்க வேண்டும். மேலும் தனுஷ்கோடி,
மண்டபத்தில் வலுவான இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும். "டெசோ' சார்பில்
நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம், இதையும் மீறி,
மீனவர்கள் தாக்கப்பட்டால் நம்மை அர்ப்பணிக்கும் அளவில், போராட்டம்
நடத்துவோம், என்றார். ராமேஸ்வரம் தி.மு.க., நகர் செயலாளர் நாசர்கான்,
துணைச் செயலாளர் வில்லாயுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
(7)
Suresh - Ulsan,தென் கொரியா
19-பிப்-201302:59:35 IST
Vettri - Coimbatore,இந்தியா
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
Indian from Mumbai - Mumbai,இந்தியா
19-பிப்-201301:15:26 IST

Jai - ,கனடா
19-பிப்-201300:54:24 IST

sathik - london,யுனைடெட் கிங்டம்
19-பிப்-201300:06:41 IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக