வெள்ளி, 9 டிசம்பர், 2011

American girl about tamila agriculture: ஏக்கமாக உள்ளது

சொல்கிறார்கள்




தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுகலை உழவியல் படிக்க வந்திருக்கும் அமெரிக்க மாணவி மேகன்: அமெரிக்காவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் வசிக்கும், சிறு விவசாயக் குடும்பம் என்னுடையது. விவசாயம் தான் என் வருங்காலத்திற்கான விருப்பமாக இருந்ததால், "கர்னல்' வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தேன். தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன், "கர்னல்' பல்கலைக்கழகம் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்தும், 50 மாணவர்கள், 15 நாள் கல்விப் பயணமாக இடம் மாறினோம். அப்படி, இங்கு வந்து சென்றவர்களில், நானும் ஒருத்தி. இங்குள்ள விவசாயிகள், நிலத்தை உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகப் பார்க்காமல், மண்ணைத் தாயாக, கடவுளாக போற்றியதையும், நுணுக்கமான இந்திய விவசாய முறைகளையும் பார்த்த போதே, தமிழக வேளாண்மைப் பல்கலையில், முதுகலை சேர வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்னும் இரண்டாண்டுகளுக்கு கோவையில் தான் படிப்பு. நடவு, களை, அறுவடை என, விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு, ஆண்களுக்கு நிகராக உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறை, மனித குலத்திற்கு தீங்கு செய்யாததாக உள்ளது. அதன் சிறப்பான இயற்கை விவசாயம் குறித்து ஆராய்ச்சி செய்வது, என் அடுத்த திட்டம். உணவிற்குப் பதிலாக, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு இணையானது தான், ரசாயனத்தில் விளையும் உணவுகள் அனைத்தும். ஆனால், அதுதான் எங்கள் நாட்டில் கிடைக்கும். இறக்குமதி செய்த, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை, பல நாட்கள் கழித்து வாங்கிச் சாப்பிடுவோம். காலையில், பறிக்கும் காய், கனிகளை மதிய உணவிற்குச் சமைத்துச் சாப்பிடும் உங்களைப் பார்க்கும் போது, ஏக்கமாக உள்ளது. இங்குள்ள இளைஞர்கள், அமெரிக்க கனவு காண்கின்றனர். ஆனால், எனக்கு இந்தியக் கனவு தான் உள்ளது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மிக அருமையான தகவல்களைச் சொல்கிறார்கள் பகுதியில் தொகுத்துத் தருகிறீர்கள். ஆனால், எந்த இதழில்  வந்த செய்தி எனக் குறிக்கலாமே. முழுமையாகப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்படுமே. எனவே, நன்றி என்றாவது தரவு என்றாவது வேறு பெயரிலாவது செய்தியின் மூலததைக் குறிப்பிட வேண்டுகின்றேன். உங்கள் பண்பை வெளிப்படுத்தவும் எங்களுக்குப் பயன் நல்கவும் வாய்ப்பாக அமையும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக