ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனையை நீக்குக – மதுரையில் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனையை ரத்து செய்க – மதுரையில் ஆர்ப்பாட்டம்

இன்று 13 08 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனை இந்தியக் குடியரசுத் தலைவரால் உறுதிசெய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக தமிழின ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்துடன் ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் ,முருகன்,சாந்தன் மட்டுமல்லாமல் அப்சல்குரு போன்றவர்கள் மீதான மரண தண்டனையும் நீக்கப்பட வேண்டும் என்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.மரணதண்டனை தரும் இந்திய அரசுக்கு அகிம்சையைப் பற்றிப் பேசவும் அசோக சக்கரத்தை சின்னமாக வைத்துக்கொள்ளவும் என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.இதன் தொடர்ச்சியாக வரும் செவ்வாய்க் கிழமை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பேரணி ஒன்றையும் நடத்தவிருக்கிறார்கள்.

Popularity: 1% [?]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக