சென்னை, ஆக. 4: கல்வியாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் அ. ராமசாமி, ராஜா முத்தையா செட்டியார் நினைவுப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ராஜா முத்தையா செட்டியார் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழறிஞர்கள் வா.செ. குழந்தைசாமி, அறவாணன், சுப்பிரமணியன், சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் முனியரசன் உள்ளிட்ட பலர் இப்பரிசை பெற்றுள்ளனர். 2010-ம் ஆண்டு நினைவுப் பரிசுக்கு, பேராசிரியர் அ. ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ராணி சீதை ஹாலில் வியாழக்கிழமை (ஆக. 5) நடைபெறும் விழாவில் ராமசாமிக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/5/2010 3:13:00 AM