வியாழன், 5 ஆகஸ்ட், 2010

 
தலையங்கம்: பொய் முகங்கள்!

50கருத்துப் பதிவுகள் என்னும் வரையறை கொண்டிருந்த தினமணி அதனை நீக்கி 105 பதிவு வரை வெளியிட்டுள்ளமைக்குப் பாராட்டுகள். ஆனால், பின்வரும் என் கருத்தில் என்ன தவறு உள்ளது எனக் கூறி நீக்கியுள்ளது என்பதை விளக்கினால் நன்று. ஆசிரியர் குழுவில் எழுதியவர் பெயரைக் குறிப்பது சில இதழ்கள் நடைமுறை. அதனைக் குறிப்பிட்டது தவறா? ஆசிரியரால் எழுதப்படவில்லை எனக் கருதுவதாக எண்ணி நீக்கினாலும் தவறுதானே. பாராட்டு தினமணிக்குத்தானே வழங்கப்பட்டுள்ளது. நரகல்நடைக்கு இடம் தரும் தினமணி தவறான தணிக்கையைக்கைவிடுவது நன்று. ஆசிரியர் அல்லாத ஒருவர் தலையங்கம் எழுதும் பொழுது அவர் பெயரைக் குறிப்பிடும் பழக்கத்தைத் தினமணி பின்பற்றலாம். நன்கு தெளிவாகவும் உறுதியாகவும் அஞ்சாமலும் எழுதியுள்ளார். இவ்வாறான அடைமொழி வழக்காற்றால் உரியவர்களின் இயற்பெயர்கள் வரலாற்றில் இருந்து மறையும் நிலைமையும் ஏற்படும்.கடவுளைக் கூட அடைமொழியின்றியும் ஒருமையிலும் அழைக்கும் தமிழ் மக்கள் அரசியல் கொத்தடிமையால் தலைவர்களின் பெயர்களை ஒலிக்க அச்சப்பட்டு அடைமொழிகளால் மட்டுமே குறிப்பிடுவது தவறு என்பதை உணர வேண்டும். அரசியல் உலகில் மட்டும் அல்லாமல்கலையுலகிலும் இந்த அவலம் உள்ளது. இருப்பினும் இந்த நிலை மாறும் காலம் அண்மையில் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் ஊதுகின்ற சங்கை ஊதிவைப்போம் என முயன்றுள்ளதற்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 8/4/2010 3:04:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 3:36:00 AM
இந்த
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 3:34:00 AM
000000000000000000000000
Thiruvalluvan is OK,,,what is Ilakkuvanar Thiruvalluvan ?..Ilakkuvanar is your name?.
By KOOPU
8/4/2010 11:10:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக